பாபரியே பள்ளிவாசல் - பாபரி மஸ்ஜித் பற்றிய சில‌ உண்மைகள் ~ சஹாரா தமிழ்

ads

சனி, 18 செப்டம்பர், 2010

பாபரியே பள்ளிவாசல் - பாபரி மஸ்ஜித் பற்றிய சில‌ உண்மைகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..  
ஜமாஅத்தார்களே! சகோதரர்களே!! எச்சரிக்கை!!!

கோவை: நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளான்.

நிருபர்களிடம் பேசிய அவன் ,  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை [^] எங்கும் இஸ்லாமியர்கள் மத மோதல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தென் கொரியாவில் சாலையெங்கும் புத்த சிலைகள் நிறைந்திருந்தது. அப்போது அமெரிக்க பிரதிநிதிகள் தென் கொரிய பிரதிநிதிகளிடம் சாலையெங்கும் இருக்கக்கூடிய புத்தர் சிலையை எடுத்து விடுங்கள் என்று சொல்லியதன் பேரில், தென் கொரிய பிரதிநிதிகள் சிறிய சிலைகளை எடுத்தார்கள்.

சிலைகளை எடுப்பதற்கு முன்னர் பௌத்தர்கள் 60 சதவீதம் இருந்தார்கள். கிருஸ்தவர்கள் 40 சதவீதம் இருந்தார்கள். சிலைகளை எடுத்தப் பின்னர் கிருஸ்தவர்கள் 60 சதவீதமாக மாறிப்போனார்கள். பௌத்தவர்கள் 40 சதவீதமே இருக்கின்றனர்.

அதே போலத்தான், இங்கேயும் சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றிவிட்டு, சர்ச்சுகளும் மசூதிகளும் நிறைந்துவிட்டன.
அயோத்தியில் உள்ள இடம் யாருக்கு சொந்தம் என அலகாபாத் நீதிமன்றம் [^] தீர்ப்பு அறிவிக்க உள்ள இந்த நேரத்தில், நாம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், என்ன தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. ராமர் கோவிலை அங்கே கட்டியே தீருவோம்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் [^] அசோக் சிங்கால் தீர்ப்பை மதிப்போம் என்கிறார். ஆனால், இஸ்லாமியர்கள் யாரும் தீர்ப்பை மதிப்போம் என்று சொல்லவில்லை. இதற்கிடையே தீர்ப்பு வரும் இந்த நேரத்தில் இஸ்லாமியர்களின் மனைவிகளும், குழந்தைகளும் பத்திரமான இடத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், ஏதோ ஒரு பெரிய கலவரத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

கோயம்பத்தூரில் கல்லூரி மாணவிகளை இஸ்லாம் இளைஞர்கள், பேச்சுக் கொடுத்து மயக்கி 'லவ் ஜிகாத்' என்ற முறையில் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றுகிறார்கள். மாற்றியதோடு மட்டுமல்லாமல், அவர்களை இந்துகளுக்கு எதிராக பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்கள்.

முதல்வர் கருணாநிதி [^] திருந்திவிட்டார், அவருக்கு தெய்வ பக்தி வந்துவிட்டது என்று பலர் சொல்லுகிறார்கள். ஆனால் அது சுத்தப் பொய். அவர் எப்போதும் திருந்தவே மாட்டார். அவர் எப்போதும் இந்துகளுக்கு எதிராகத்தான் இருப்பார்.

கல்லூரிகளில் பள்ளிகளில் இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்துவர்களுக்கும் அளிக்கப்படும் சலுகைகளை இந்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றான்  ராம கோபாலன்.

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது. 
இந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.

வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.

அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.

மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.

வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.

நீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.

பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான விவகாரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.

தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.

விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.

உண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை உள்ளது.

பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றியமைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது? என்பதுதான் கேள்வி.

ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.

இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில தலைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.

தங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.

தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம்.
விமர்சகன்
http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_18.html

                                                      ===============================


 புது டெல்லி :அயோத்தி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அமைதி காக்கவேண்டும் என மத்திய அரசு நாட்டுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இதுத்தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகாசோனி அறிவித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும். அதேவேளையில், இந்த தீர்ப்பு நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு சுவடு மட்டும் தான் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். இனிமேலும் ஏதேனும் நீதிமன்ற தீர்ப்பு தேவையென்றால் சட்டரீதியான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_6465.html

=====================================
 


லக்னோ :அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இணக்கமான தீர்விற்கு வழி இல்லை எனவும், ஹிந்துக்களோ, முஸ்லிம்களோ அதனை அங்கீகரிக்கமாட்டார்கள் எனவும் உ.பி.மாநில முன்னாள் பா.ஜ.க முதல்வர் கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.

அயோத்திக்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார் அவர். மேலும் அவர் கூறியதாவது:"அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ஹிந்துக்கள் உறுதிப்பூண்டுள்ளனர். இதற்கிடையே எதனைச் செய்தாலும், அது காலத்தை வீணடிப்பதாகும். அயோத்தியில் நான் சன்னியாசிகளை சந்திப்பேன்." என கல்யாண்சிங் தெரிவித்தார்.

இதற்கிடையே, இவ்வழக்கில் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கு எதிராக வழக்கின் கட்சிதாரரான ஹிந்துமாகாசபை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்துள்ளது. தீர்ப்பை காலதாமதமாக்க வேண்டும் எனக்கோரும் இரண்டு மனுக்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மாதம் 24 ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_784.html 
===========================================================
 

லக்னோ :  வருடக்கால பழமையான பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பான வழக்கில் தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றக் கோரிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே இணக்கமான தீர்விற்கு வழிகாண தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவின் மீதான விசாரணையில்தான் 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை நேற்றுக் கூறியது. பாப்ரி மஸ்ஜித் நில உரிமை தொடர்பான தீர்ப்பு திட்டமிட்டபடி வருகிற 24-ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வழக்கை ஒத்திவைக்கக் கோரும் மனுவில் முக்கியத்துவம் இல்லை எனக் கருதிய நீதிமன்றம் மனுவை சமர்ப்பித்தவருக்கு பெருந்தொகையை அபாரதமாக விதிக்க தீர்மானித்தது. அபராதத்தொகை எவ்வளவு என்று முடிவாகவில்லை.

நீதிபதி சுதீர் அகர்வால் ஐந்துலட்சம் ரூபாய் அபராதமாக நிர்ணயித்தார். எஸ்.யு.கான், டி.வி.சர்மா ஆகியோர் சிறப்பு பெஞ்சின் இதர நீதிபதிகளாவர். 'இணக்கமான தீர்விற்கு தயாரா?' என நீதிமன்றம் கட்சிதாரர்களிடம் ஆராய்ந்தது. ஆனால், எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு அவ்வாறான நம்பிக்கை இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வழக்கில் முக்கிய கட்சிதாரரான நிர்மோஹி அகாரா, சமரச தீர்விற்கு இந்த மாதம் 27-ஆம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கவேண்டும் என்று கோரும் மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுக தனது கட்சிதாரரை உபதேசிப்பேன் என திரிபாதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு அளிப்பது நீதிமன்றத்தின் கடமையென்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

வழக்கை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடிச் செய்தது மூலம் உயர்நீதிமன்றம் சரியான காரியத்தை செய்துள்ளது என முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
http://paalaivanathoothu.blogspot.com/2010/09/24_18.html 




====================================================

 பாபரியே பள்ளிவாசல்

    பாபரி பள்ளிவாசல் இடிப்பதற்கு முன்பும், இடிப்பிற்குப் பின்பும் என 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் பிரச்னையில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிபாட்டு உரிமைகளின் அடிப்படையில், நீதிமன்றங்களையே நம்பியிருந்த முஸ்லிம்களை காவிப் படையினரும், அவர்களுக்கு ஆதரவான அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்களும் தங்களது மனசாட்சியைப் புதைத்து விட்ட காரணத்தினாலும், தங்களது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த காரணத்தினாலும் நாம் அந்தப் பள்ளியை இழந்தோம்.

இப்பொழுது ஓரிறைவனைத் துதிக்கக் கூடிய இடமாக விளங்கிய அந்தப் பள்ளியை, பல தெய்வ வணக்க வழிபாட்டுக்கு இட்டுக் கொண்டு செல்லும் பாஸிஸ இந்துத்துவாக்கள், இன்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மதிக்கவும் மாட்டார்கள். நீதிமன்றங்களும் அவர்களுக்கே சாதகமாகத் தீர்ப்புக்களை வழங்கி வருகின்றன.

மேலும், மார்ச் 12 லும் அதற்கு இடைப்பட்ட இந்த காலத்தில், வெறுமனே கோயில் கட்டுவதோடு மட்டும் அவர்கள் நின்று விட மாட்டார்கள். அதற்கு முன்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தக் கூடிய செயல்களிலும் அவர்கள் இறங்கக் கூடும்.

இந்த நிலையில் முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும், அவர்களுக்குரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசுகளின் பொறுப்பாகும். ஆனால் இன்றைய அரசுகள் தங்களது ஓட்டு வங்கிகளை அடிப்படையாக வைத்துத் தான், தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு யார் தான் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த வல்ல இறைவனிடமே எங்களது பாதுகாப்பிற்கு கையேந்தி நிற்கின்றோம்.

மேலும், ஏற்கனவே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வரக் கூடிய இந்திய முஸ்லிம்கள் மேலும் அந்நியப்பட்டுப் போகக் கூடிய நிலையை, வலிய அவர்களின் மீது திணிக்கக் கூடிய சம்பவமாகத் தான் இது அமையும்.

முஸ்லிம்களும் இந்த இந்திய நாட்டுக் குடிமக்கள் தான் என்பதிலும், இந்திய தேச விடுதலைக்கு தன்னுடைய சதவீதத்திற்கும் அதிகமாகவே தியாகங்களை இந்தச் சமூகம் செய்திருக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்ளும் அனைவரும், இந்தப் பாஸிஸப் போக்கை தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். இந்த அராஜகத்திற்குத் துணை போகக் கூடிய அனைவரையும் நீதிமன்றத்தில் - குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

இந்திய எல்லையில் இந்திய ராணுவம் சந்திப்பவர்கள் மட்டும் இந்திய எதிரிகள் அல்ல! இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைப்பவர்களும் இந்தியாவின் எதிரிகளே!!! இந்த எதிரிகளை இந்திய தேச மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டியதும், அவர்களது தீவிரவாதப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டியதும் நடுநிலையாளர்கள் மற்றும் இதயமுள்ளவர்களின் கடமையும் கூட!!



பாபரி மஸ்ஜித் : அடிப்படைத் தகவல்கள்

டிசம்பர் 06, 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்ட நாள்.

இந்தியா உலக அரங்கில் தலைகுனிந்து நின்ற நாள். அன்று இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை இன்றளவும் துடைக்க முடியவில்லை. இந்த அவமானம் முற்றாக துடைக்கப்படும் அளவுக்கு, இன்று இந்தியா தேச விரோத ஃபாசிஸ சக்திகளின் கைகளில் சிக்கிக் கொண்டது.

இந்தியாவின் கண்ணியம் இன்னும் அதள பாதாளத்தில் வீழ்ந்து விடலாம் இந்தப் பாஸிஸச் சக்திகளால். பாபரி பள்ளிவாசல் ஷஹீதாக்கப்பட்ட அந்த நாள் முதல் இன்று வரை நாட்டில் நடக்கும் அத்தனை விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் அதுவே காரணம்.

பள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்hலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.

தடா சட்டம் காலாவதியான பின்னரும் அதன் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்படவில்லை.

பாபரி பள்ளி வாசல் இடிக்கப்பட்ட நாள்களைத் தொடர்ந்து பம்பாயில் கலவரங்கள் மூண்டன. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் காவல் துறையினராலும் ஃபாசிஸ்டுகளாலும் கொலை செய்யப்பட்டார்கள்.

பம்பாய் நிகழ்வுகளை விசாரிப்பாதற்காக அமர்த்தப்பட்ட கிருஷ்ணா கமிஷன் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டிருக்கின்றது. அதில், அத்வானியின் ரத யாத்திரையும், பள்ளிவாசல் இடிப்பும் தான் பம்பாய் நிகழ்வுகளுக்குக் காரணம் என ஆணித்தரமான ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையும், பள்ளிவாசல் இடிப்பில் பெருமை கண்ட ஃபாசிஸ்டுகளின் கைகளிலேயே சிக்கிக் கொண்டது. இப்படி இந்த நாட்டையே நட்டாற்றில் தள்ளி விட்ட இந்தப் பிரச்னையில் மிகவும் வேதனையான பகுதிய என்னவெனில், பள்ளிவாசலை இழந்த முஸ்லிம்களே இன்று குற்றவாளியாக்கப்பட்டு வருகின்றார்கள் அனைத்து விவகாரங்களிலும்..

பாபரி மஸ்ஜித் குறித்த அடிப்படை தகவல்கள் வருங்காலத்தில் நிச்சயமாகத் திரிக்கப்படும் இன்று இந்தியாவை ஆளும் இந்தப் ஃபாசிஸ்டுகளால்..

ஆகவே அவற்றை நினைவு கூருவதும், நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் அதைப் பாதுகாத்துத் தருவதும் நமது கடமை. ஏனென்றால், வரும் மார்ச் 2002, 2 ஆம் தேதியன்று பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் கட்டப் போவதாக விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்திருக்கின்ற நிலையில், அதற்குத் தடையை ஏற்படுத்தும் அனைத்து வழிகளையும் அடைப்பதற்குண்டான வழிமுறைகளில் ஆளும் பாஜக முயன்று கொண்டிருக்கின்ற இந்த நிலையில், பாபரி பள்ளிவாசல் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தருவது மிகவும் பொருத்தமெனக் கருதுகின்றோம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கும், உண்மையை அறிய விளையும் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.

அடிப்படைத் தகவல்கள் :

கி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு

இப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட்.

இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் (ஷியா-சுன்னி) கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.

ஆட்சியாளர் ஜஹாங்கீர் அவர்கள் காலம் முதற்கொண்டு தான் இந்தப் பள்ளிவாசல் பாபரி பள்ளிவாசல் என்றழைக்கப்பட்டது. பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல், முஸ்லிம்கள் இரு தரப்பாரும் தங்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்தப் பள்ளிவாசலில் நிறைவேற்றி வந்தார்கள்.

1950 ம் ஆண்டு, பைஸாபாத் சிவில் நீதிமன்றம் ஓர் தடை உத்தரவைப் போட்டு முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் நுழைவதைத் தடுத்தது.

அன்று வரை முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை அந்தப் பள்ளிவாசலில் நிறைவேற்றியே வந்தார்கள்.

1855 ஹனுமன் கார்ஹி வழக்கு

19ம் நூற்றாண்டின் நடுவில் அதாவது 1855 ஆம் ஆண்டில் ஹனுமான்கார்ஹி என்பது குறித்து வழக்கொன்று எழுந்தது. இந்த வழக்கு சுன்னி முஸ்லிம்களுக்கும், நாகா சாதுக்களுக்குமிடையில் எழுந்தது. அப்போது, அப்பகுதி நவாப் வாஜித் அலீ ஷா என்பாரின் ஆட்சியின் கீழிருந்தது.

இந்த ஹனுமான்கார்ஹி அயோத்தியில் இருக்கின்றது. இந்த ஹனுமான்கார்ஹியில் பள்ளிவாசல் ஒன்று இருந்தது எனவும், அது இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள்.

இது குறித்து எழுந்த கலவரங்களில் 200 இறந்துள்ளனர். பல முஸ்லிம்கள் உயிரைத் தந்தும் பள்ளிவாசல் இடத்தை மீட்க இயலவில்லை.

முஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த பள்ளிவாசலை மீட்கக முயற்சி செய்தார்கள் என்பதற்காக, இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பாபரி பள்ளிவாசல் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்பதே அந்த எதிர் நடவடிக்கை.

முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசலை மீட்க நடவடிக்கை எடுக்கின்றார்ள் என்று கோபங் கொண்டெழுந்த அந்தப் பகுதிய பூர்வீக இந்துக்கள் கூட ஜென்மஸ்தான் என்றொரு முழக்கத்தை முன் வைக்கவில்லை.

அவர்கள் ஒரு எதிர் நடவடிக்கையாகத் தான் பள்ளிவாசல் முன்பாக ஒரு இடத்தை இட்டுக் கட்டிப் பேசினார்கள். ஆகவே பாபரி பள்ளிவாசல், இராமர் பிறந்த இடம் என்பது ஆதாரமற்ற அரசியல் பிழைப்புக் கோஷம் என்பதே உண்மை. (ஆதாரம் : பேராசிரியர் க. சம்பக லஷ்மி. வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் மற்றும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்)

1857 நாம் சாபுத்ரா

பாபரி பள்ளிவாசல் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு போன்றிருக்கும் இடம் ராம் சாபுத்ரா என்றும், அதுவே ராம் ஜென்ஸ்தான் என்று சாமியார் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அத்தோடு அங்கு பூஜா புனஸ்காரங்கள் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

1857 ல் பாபரி பள்ளிவாசல் முன்பாக சற்று தொலைவில் மேடு போன்றிருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற யெரில் உயர்த்தப்பட்டு இந்துக்கள் பூஜா புனஸ்காரங்களைச் செய்து வந்தார்கள். ஒரே வளாகத்திற்குள், முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தங்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்துகள் தங்கள் பூஜா புனஸ்காரங்களை நிறைவேற்றினார்கள்.

இரு வகுப்பரிடையேயும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களை வேறுபடுத்திடும் அளவில் ஓர் சுவரை எழுப்பிட விரும்பினார்கள். அதன்படி 1859 ல் இந்தப் சுவர் எழுப்பப்பட்டும் விட்டது.

1883 ம் ஆண்டு மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பின்னர் பைஸாபாத் துணை ஆணையாளரிடம் இந்த இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது.

இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பட்டவர்த்தனமான வகுப்ப வெறியேயன்றி வேறு எண்ணங்கள் இதற்குப் பின்னால் இல்லை. இதனால் அனுமதி வழங்கப்படவியலாது எனக் கூறி விட்டார் பைஸாபாத் துணை ஆணையாளர்.

1885 ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட வழக்கு

ஜனவரி 15 1885 ல் ஜென்ஸ்தான் காப்பாளராகக் காட்டிக் கொண்ட ரகுபீர்தாஸ், பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில்  கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.

பள்ளிவாசலுக்கு முன்னால் கோவில் கட்டுவது இரண்டு வகுப்பாருக்குமிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் எதிலும் பாபரி பள்ளிவாயில், சர்ச்சையாக்கப்படவில்லை என்பது தெளிவு.

1934 ல் நடந்த வகுப்புக் கலவரங்கள் அயோத்தியைத் தாக்கியது. சில தீவிரவாதிகள் முஸ்லிம்களைத் (தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும்) தாக்கி, பள்ளிவாசலையும் தாக்கினார்கள். எனினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள்.

1940 ல் .. ..

1940 ; இந்தப் பள்ளிவாசல் சுன்னி முஸ்லிம்களுக்குச் சொந்தமா? ஷியா முஸ்லிம்களுக்குச் சொந்தமா? என்றொரு சர்ச்சை எழுந்தது. இது நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் பள்ளிவாசல் சுன்னி முஸ்லிம்களுக்கே சொந்தம் எனத் தீர்ப்பு வழங்கிற்று.

இது தான் பாபரி பள்ளிவாசலில் யாருக்குச் சொந்தம் என்பது சம்பந்தமாக வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு.

இராமர் சிலைகள்

1949 டிசம்பர் 23 ல் இராமர் லாலா சிலைகள் மூட நம்பிக்கையின் அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டன. இது சட்ட விரோதமான செயல் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்தக் கிரிமினல் குற்றம் சம்பந்தமாக ஒரு முதல் குற்றப்பத்தரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

22.12.1949 அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு பள்ளிவாசல் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது.

கே.கே.நய்யார்

பாபரி பள்ளிவாசலினுள் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது. இவர் பிற்றை நாட்களில் ஜனசங்க அதாவது முன்னாள் பிஜேபி யின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல, அவருடைய மனைவி சகுந்தலா அம்மையாரும் அதே ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆக, முஸ்லிம்கள் ஒரு பிஜேபி குடும்பத்திடம் தான் பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்ப்பட்டது சம்பந்தமாக நியாயம் கேட்டிருக்கின்றார்கள்.

இந்த கே.கே.நய்யார் பைஸாபாத்திலும், உத்திரப் பிரதேசத்திலும் அரசு பொறுப்புகளிலும் பல ஆண்டுக்ள இருந்தார். முஸ்லிம்கள் - இந்துக்கள் இடையே ஏற்பட்ட பல பிரச்னைகளில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் தலைவராக இருந்தார். கிஞ்சிற்றும் கவலைப்படாத ஓர் இந்து தீவிரவாதி என்பதை யாரும் அறிந்திடவில்லை.

பள்ளிவாசலுக்குள் சிலைகள் வைக்கப்பட்டவுடன், அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

சிலைகள் வைக்கப்பட்டவுடன் வழங்கப்பட்ட (அ)நீதி

சிலைகள் வைக்கப்பட்டவுடன், மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் பள்ளிவாசலைக் கைப்பற்றினார். பள்ளிவாசலை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் பள்ளிவாசலுக்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.

நீதிபதி கே.கே.நய்யாரின் ராஜ துரோகச் செயல்

பாபரி பள்ளிவாசலுக்குள் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது, அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில், அவர் செய்ததெல்லாம், பள்ளிவாசலுக்குள் பூஐஜகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள்.

ஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் :
(மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்).

பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அக்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும், அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில், ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.

பிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும், உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.

அவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்:

அந்தக் கேள்விகள் : 1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? 2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை?

இந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27, 1949 அன்று அனுப்பப்பட்டது.

இதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார், முஸ்லிம்களிடம் பேசி, அப்பள்ளிவாசலை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார்.

அத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவே;றத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன்று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில், பள்ளிவாசலுக்குள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால், பள்ளிவாசல் பள்ளிவாசலாகச் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

(ஆதாரம் : அயோத்தியா முழு உண்மைகள் பக்கம். 3 வெளியீடு : ருnவைநன யுஉயனநஅiஉள ஐவெநசயெவழையெடஇ ஏனைலயயெபயசஇ ர்லனநசயடியன – 500 044).

பள்ளிவாசலை இந்து அராஜகவாதிகளிடமிருந்து மீட்டே தீர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள், கவர்னர் ஜெனரல் இராஜகோபால் ஆச்சாரியார் அவர்களுக்குத் தகவல்கள் தந்தார்கள்.

இராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் பிரதமர் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், பள்ளிவாசலைச் சுற்றி நடப்பவை தனக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நான் கலங்கிப் போயிருப்பதாகவும் குறிப்பிட்டார். கவர்னர் ஜெனரல் கடிதத்திற்கு நேரு அவர்கள் உடனேயே பதில் எழுதினார்.

அந்தப் பதில் இது தான் : ஊஆ ழக ரு.P. iவெநனெநன வயமiபெ யஉவழைn. (உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திலிருக்கின்றார்.

5.12.1950 அன்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் அயோத்தியாவுக்கு வர விரும்புவதாக கடிதம் எழுதினார். அவரை வரவிடாமற் தடுத்து விட்டார் உ.பி. முதல்வர் ஜி.பி.பந்த்.

முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில், 1950 ல் நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பை வழங்கிற்று. அது வேறொன்றுமில்லை. இந்துக்கள் பூஐஜ நடத்தவார்களாம். முஸ்லிம்கள் அதில் எந்த இடையூறுகளையும் செய்து விடக் கூடாதாம்.

உத்திரப்பிரதேச முதல்வர் ஜி.பி. பந்த் அவர்களும் ஓர் இந்து மதவெறியர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நீண்ட காலமாகி விட்டது.

1959 ல் அரசு பொறுப்பாளரை அகற்றி விட்டு, பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றொரு வழக்கு தொடரப்பட்டது. 1961 ல் சுன்னி வக்ஃப் போர்டு, பள்ளிவாசலையும ;அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் அடக்கத்தளத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்திட வே;டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் இன்று வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. பாபரி பள்ளிவாசலைக் கோயிலா மாற்றிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளில், உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்கள் த்கள் நியாயமான உரிமைகளுக்ககாகத் தொடர்ந்த வழக்குகளில், இது வரை தீர்ப்புகள் வழங்க்பபட்வில்லை.

இன்னும் முஸ்லிம்கள் இந்த நீதி மன்றங்களை நம்புகின்றார்கள். இதே போல் தான் 1986 ல் பள்ளிவாசலில் கதவுகளைத் திறந்து, பொதுமக்களின் பூஐஜக்காக அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது!

பள்ளிவாசலைத் திறந்து பொதுமக்களின் பூஐஜயை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தவர் உமேஷ் சந்திர பாண்டே என்பவர். இவர் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாகத் தொடரப்பட்ட எந்த வழக்கோடும் சம்பந்தப்படவில்லை.

இவர் 1986 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் பள்ளிவாசலைப் பொதுமக்கள் பூஐஜக்காகத் திறந்திட வேண்டும் என்றொரு வழக்கைப் பதிவு செய்கின்றார். மூன்றே நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பூட்டு திறக்கப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட அடிப்படை வழக்குகள் பல உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக!

அடிப்படை வழக்குகளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, தீர்த்து வைக்காத வரை அது தொடர்பான எந்த வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிடக் கூடாது. இந்த நீதிமன்ற நெறிமுறைகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு, பைஸாபாத் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. அந்தத் தீர்ப்பு உடனேயே செயல்படுத்தவும்படுகின்றது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உடனேயே உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் முஸ்லிம்கள். உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3 ம் நாள் (1986) முஸ்லிம்களின் முதகில் குத்தி ஒரு தீர்ப்பை வழங்கியது.

அதாவது, பாபரி மஸ்ஜித் இருக்கும் சொத்தின் அப்போதைய நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு!

இதன் பொருள், பள்ளிவாசலில் தொடர்ந்து பூஐஜ நடத்தலாம் என்பதே.

1985 முதல் அயோத்தியாவை, யைமாகக் கொண்டு சுளுளுஇ ஏர்Pஇ டீதுP முதலிய கட்சிகள் ஒரு பெரும் இயக்கத்தைத் துவங்கின. 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கும்பமேளா திருவிழாவைப் பயன்படுத்தி கிராமம், கிராமமாக இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கல்கள் அயோத்தியை நோக்கி அனுப்பப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நவம்பர் மாதம் 9 ம் நாள் நடைபெற்ற இந்த கால்கோள் விழாவில் இராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் முதகில் குத்தியது.

நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில் கோயில் கட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. பண்பாடு, நாகரீகம் இவற்றின் அடிப்படையில் பார்;த்தால், மிகவும் கீழ்த்தரமானதோர் செயல் இது. இந்தக் கீழ்த்தரமான செயலை இந்து வட்டாரங்களில் மிகப் பெரிய சாதனை எனப் பீற்றிக் கொண்டன சங்க் பரிவாரங்கள்.

நவம்பர் 1989 ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்ற இடம், சர்ச்சைக்குரிய இடம் என்றும், அதன் அந்தஸ்தில் எந்த மாற்றமும் கொண்டு வந்திடக் கூடாது , அதில் ஒரு துரம்பைக் கூட மாற்றிடக் கூடாது என அறிவித்தது. எனினும், அந்த இடம் பாழ்படுத்தப்பட்டது.

இந்த நாட்டின் நீதிமன்றத்தை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தினார்கள் இந்து மத வெறியர்கள். வெறி கொண்ட இந்த நாட்டுத் துரொகத்திற்குப் பெயர் தாய் நாட்டின் மீதுள்ள மாளாத பற்று.

1989 ஆண்டுத் தேர்தல்கள்.

1989 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில், பாஜக நாடாளுமன்றத்தில் 80 இடங்களைப் பிடித்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் அது பெற்றிருந்தது வெறும் 2 இடங்களே!

அப்போதைய அரசியல் கதாநாயகனாகவும், சமூக நீதியின் காவலனாகவும் காட்டப்பட்ட வி.பி.சிங் போஃபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது. இவையெல்லாம் இந்தத் தேர்தலை நிர்ணயித்தன.

தேசிய முன்னணி என்ற பெயரில் பிஜேபி வி.பி.சிங்குடன் இணைந்து நின்றது. இவையெல்லாம் பிஜேபி இதில அதிகமான இடங்களைப் பிடித்திட வகை செய்தன. ஆனால் பாஜக வினர் இது கோயிலுக்காகக் கிடைத்த  ஓட்டு என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

பிஜேபி கூட்டுடன் பணியாற்றிய தேசிய முன்னணி பல பிரச்னைகளை பிஜேபி பினராலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. பாபரி பள்ளிவாசல் பிரச்னையை பிஜேபி பெரிதாக்கவே, வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனேயே செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் பிஜேபி ன் உயர் சாதி வெறி வெளிப்பட்டது.

1990 ல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி பள்ளிவாசல் இருக்குமிடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்தது. வி.பி.சிங் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இது நான்கு மாதம் தள்ளிப் போடப்பட்டது. 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்வானி மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் கிடைக்கவிருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடவும், இராமர் கோயில் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வந்திடவும் ரத யாத்திரையை மேற்கொண்டார். இந்த ரத யாத்திரையின் பெயரால் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களினால், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள். ரத யாத்திரை நாடு முழவதும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் அடிப்படையில் அதைத் தடை செய்திட வேண்டும் என விண்ணபித்தனர் மக்கள்.

ரத யாத்திரையைத் தடை செய்தால் வி.பி.சிங் அவர்களின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைப் பின் வாங்குவோம் என அறிவித்தார்கள் பிஜேபி யினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்வானியும் அவருடைய பரிவாரங்களும் உத்திர பிரதேசத்திற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்குவதற்கு முன்னால், ரத யாத்திரையைத் தடுத்திட வேண்டும் என முடிவு செய்து, ரத யாத்திரை பீகாரில் சமஸ்திப்பூர் வந்த போது 23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டு, அரசு விருந்தினர் மாளிகையின் காவலில் வைக்கப்பட்டார். அத்வானியைக் கைது செய்ததும், ஒரு பெரும் கூட்டம் அயோத்தியை நோக்கிப் பாய்ந்தது. முலாயம் சிங் யாதவ் அவர்களின் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது.

இதே அக்டோபர் மாதம் 30 ம் நாள் (1990) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முலாயம் சிங் யாதவ் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பள்ளிவாசல் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும், பள்ளிவாசலின் வெளிச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் பள்ளிவாசலின் மேல் காவிக் கொடியையும் ஏற்றினார்கள். இப்படிப் பள்ளிவாசலைத் தகர்ப்பதைத் தடுத்து விட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்து சமூக நீதி வழங்கிட முனைந்தது - இவற்றை மனதிற் கொண்டு பிஜேபி யினர் விபிசிங் அரசுக்கு தந்த ஆதரவைப் பின் வாங்கினர்.

வி.பி. சிங் பதவி இழந்தார். பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் சுமூகமான முடிவு காண்போம் எனத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் சூளுரைத்தது. பாபரி பள்ளிவாசல் பள்ளிவாசல் தான் என்பதற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்திட வேண்டும். அது கோயில் தான் என்பதை நிரூபித்திட ஆதாரங்கள் இருந்தால், இந்துக்கள் தந்திட வேண்டும் என்றொரு அறிவிப்பு இரு தரப்பாரையும் நோக்கி வைக்கப்பட்டது.

பாபரி பள்ளிவாசல் நடவடிக்கைக் குழு என்ற முஸ்லிம்களின் அணி ஆதாரங்களோடு வந்தது. இந்துத் தீவிரவாதிகளோ, இது மத நம்பிக்கை. இதற்கு ஆதாரங்கள் என எதுவும் தரத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். அத்தோடு மதுரா, வாரணாசி ஆகிய இடங்களிலிருக்கும் பள்ளிவாசல்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்எனவும் இந்துத் தீவிரவாதிகள் அறிக்கை விட்டார்கள். இதிலிருந்து இந்துத் தீவிரவாதிகளிடம் ஆதாரங்கள்  ஏதும் இல்லை என்றும், ஆதாரங்களால் சாதிக்க இயலாதவற்றை அடாவடித்தனங்களால் சாதிக்க முனைகின்றார்கள் என்பதும் தெளிவானது

1991 தேர்தல்களும் பள்ளிவாசல் இடிப்புகளும்

வி.பி.சிங் அவர்களின் அரசு வீழ்ந்தவுடன், சந்திரசேகர் தனது அரசை அமைத்தார். சந்திரசேகரை அரசு அமைக்க பணித்தது காங்கிரஸ் தான். பின்னர் இதே காங்கிரஸ் சந்திரசேகர் அவர்களைப் பதவியிலிருந்து வீழ்த்திற்று. 1991 ம் ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடந்தன. பாரதீய ஜனதா கட்சி இதில் தன்னுடைய எண்ணிக்கையைச் சற்று அதிகப்படுத்திக் கொண்டது. அதாவது 80 அங்கத்தினர்கலிருந்து 117 அங்கத்தினரானார்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்கள்.

அத்தோடு பாரதீய ஜனதா கட்சி உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில் ஆட்சிக்கு வந்தது. பி.வி. நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமரானார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி எதிர்க்கட்சித் தலைவரானார்.

உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதம் 32 சதவீதம் மட்டுமே. எனினும் கல்யாண் சிங் என்பவரை முதல்வராககக் கொண்டு அங்கே பாரதீய ஜனதா கட்சி அமைச்சரவையை 24 ஜுன் 1991 ல் அமைத்தது.

பதவி ஏற்ற மறு நாள் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் கல்யாண் சிங் தன்னுடைய அமைச்சரபை; பரிவாரத்துடன் அயோத்தியா சென்று பாபரி பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். அங்கே ஓர் உறுதி மொழியையும் எடுத்தார். அதில, இதில் (பள்ளிவாசலில்) நிச்சயமாக ஓர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்தார்.

வழிபாட்டுத் தலங்களின் சட்டம்

1991 ல் நரசிம்ம ராவ் அரசு ஓர் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின் பெயர் Pடயஉநள ழக றுழசளாip  (ளுpநஉயைட Pசழஎளைழைளெ யுஉவ) 1991. இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்தப் பள்ளிவாசலும் ஆலயமாகவோ, கோயிலாகவோ, மாற்றப்படலாகாது என்றும், எந்தக் கோயிலும் ஆலயமாகவோ, பள்ளிவாசலாகவோ மாற்றப்பட முடியாது என்று பறை சாற்றியது

இந்தச் சட்டம் 15.08.1947 அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் பாபரி பள்ளிவாசலை, இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லிற்று. அதாவது, பாபரி பள்ளிவாசலை வேண்டுமானால் கோயிலாகக மாற்றிக் கொள்ளலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைகள் தரப்படுமாம். அதாவது 3 ஆண்டுகள் சிறையிலிருக்க சித்தமாக இருப்போர் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம். இந்தச் சட்டம் இன்னொரு ஏமாற்று மோசடி வேலை அவ்வளவு தான்.

இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததும், முஸ்லிம்களுக்கு ஒரு சிறு ஆறதல். வாரணாசியிலும் மதுராவிலும் இருக்கும் பள்ளிவாசல்கள் காப்பாற்றப்பட்டு விடும் என்பது தான் அந்த ஆறதல். பள்ளிவாசலலைச் சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஜேபி ன் உத்திரப்பிரதேச அரசு, பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.

இதற்கு அது கூறிய காரணம், சுற்றுலாவை வளர்ப்பதும், அயோத்தியா வரும் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்து தருவதுமாகும். இந்தப் பிஜேபி அரசு பிறப்பித்த ஆணைகளின் அடிப்படையில், அக்டோபர் மாதம் 12 ம் நாள் 1991 முதல் பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம்.

இதன் உள்நோக்கம் என்னவெனில், பாபரி பள்ளிவாசலை இடித்து விட்டு இராமர் கோயில் கட்டுவதே! அக்டோபர் 17, 1991 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓர் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனு, உத்திரப் பிரதேச அரசின் ஆணை, அதாவது பாபரி பள்ளிவாசல் உட்பட்ட இடத்தில் 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும்படி வேண்டியது.

இதன் அடிப்படையில் அலகாபாத உயர் நீதிமன்றம் 1991 அக்டோபர் 25 ம் நான் அந்த ஆணை செல்லாது என்று  சொல்லாமல், கையகப்படுத்திய இடத்தில் நிரந்தரமான கட்டடங்கள் எதையும் கட்டிடக் கூடாது என்றும், இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாருக்கும் சொந்தமாக்கிப் பெயர் மாற்றம் செய்திடக் கூடாது என்றும், அத்தோடு அந்த இடத்தில் நடக்கும் அத்தனைக் கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்தி விட வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆனால், கல்யாண் சிங் அரசு பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதும் விஹெச்பி தொண்டர்கள் அசோக் சிங்காலின் மேற்பார்வையின் கீழும், பஜ்ரங்தள் தொண்டர்கள் வினய் கட்டியார் தலைமையிலும் இந்த நிலப்பரப்பிலிருந்து சிறு சிறு கோயில்களை எல்லாம் இடித்தார்கள். இந்தச் சிறு கோயில்களை இவர்கள் இடித்தற்குக் காரணம், பெரிய இராமர் கோயிலைக் கட்டுவதேயாகும்.

இதே வேகத்திலும், வெறியிலும் அவர்கள் இராமர் கோயில் கட்டுவதற்கான பிரதான வாசலை எழுப்புதவற்கு அடிக்கல்லும் நாட்டி விட்டார்கள். இந்த அடிக்கல் நாட்டுப் பணி 22, அக்டோபர் 1991 ல் நடைபெற்றது. நரசிம்ம ராவ் அரசு இத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைகட்டி வாய் பொத்தி நின்றது. இத்தனையையும் முடிந்த பின்னர் தான் நீதி மன்றம் தனது ஆணையை அக்டோபர் 25 ல் பிறப்பித்தது.

நீதிமன்ற ஆணைக்குப் பின்னரும் அங்கு கட்டுமாணப் பணிகள் தொடர்ந்தன. 1991 அக்டோபர் 30 ல் கொடியேற்றினார்கள். இந்நாளில் விஹெச்பி தொண்டர்கள் பள்ளிவாசல் முன் கூடி 1990 ல் அங்கு வந்த கரசேவைக்காரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். இதில், இந்து வெறி தலைவர்கள் குழமி இருந்தோரைத் தூண்டி விடும் அளவில் வன்முறைப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.

ஆத்திரம் கொண்ட கூட்டத்தினர், பள்ளிவாசலின் மேல் ஏறி காவிக் கொடியைக் கட்டினர். கல்யாண்சிங் அரசு அவர்களுக்கு ஊக்கம் தந்தது. நரசிம்ம ராவ் அரசு அமைதி காத்தது.

1992 பிப்ரவரி

8 ம் நாள், உத்திரப்பிரதேச அரசு தான் கையகப்படுத்திய இடத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர் எழுப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.

1992 மார்ச்

கல்யாண்சிங்கின் பாஜக அரசு, பாபரி பள்ளிவாசலைச் சுற்றி இன்னும் 42 ஏக்கர் நிலத்தை இராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குக் குத்தகைக்கு விட்டது. இந்த இடம் இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தது அரசு.

1992 மார்ச் 22

இதில் உற்சாகம் பெற்ற விஹெச்பி, பஜ்ரங்தள் தொண்டர்கள் இன்னுமிருந்த சிறு, சிறு கோயில்களை இடித்து இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட வகை செய்தனர்.

இந்தச் சாக்கில் சுற்றி இருந்த வீடுகளையும், கடைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசை மிரட்டி சில அறிக்கையை வெளியிட்ட வாளாவிருந்தது.

1992 ஏப்ரல்

7 ம் நாள் நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய ஒருமைப்பாட்டுக் குழவின் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 35 உறுப்பினர்கள் அயோத்தியாவில் பாபரி பள்ளிவாசல் வளாகத்திற்குள் என்ன தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பார்வையிடச் சென்றனர். இந்தப் பார்வைக் குழுவுக்கு ஜனதா தளத் தலைவர் எஸ்.ஆர். பொம்மை அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இந்தக் குழு அயோத்தியாவிலும் பாபரி பள்ளிவாயில் வளாகத்திற்குள்ளும் நீதி மன்ற ஆணைகளும், நீதிமன்ற நெறிகளும் தொடர்ந்து மீறப்பட்டிருக்கின்றன என்ற அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கரசேவை ஜுலை 1992

9 ம் நாள் 2.774 ஏக்கர் நிலத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஆணைகள் புறக்கணிக்கப்பட்டு, கரசேவைகள் நடைபெற்றன. நீதிமன்ற ஆணைப் புறக்கணிப்புக்கு நடவடிக்கை ஏதமில்லை. 15 ம் நாள் விஹெச்பி க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஓர் ஆணையிட்டது. அந்த ஆணை, பாபரி பள்ளிவாசல் வளாகத்திற்குள் நடக்கும் அத்தனை கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்திட வேண்டும் என்பதே! நீதிமன்ற ஆணை புறக்கணிக்கப்பட்டது. நடவடிக்கை ஏதமில்லை. ஜுலை 22, 1992 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்து, கட்டுமானப் பணிகளை நிறுத்திட வேண்டும் எனப் பணித்தது. 23 ஜுலை, 1992 ல் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில், இனி அதன் ஆணைகளை நிபந்தனைகளின்றி அடிபணிந்திட சித்தமாய் இருப்பதாக அறிவித்தார்.

பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களுக்குத் தந்த உறுதிமொழி

ஜுலை 22, 1992 அன்று நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களை - சாமியார்களை அழைத்துப் பேசினார். நீதிமன்ற ஆணைகளைச் செயல்படுத்த மனமில்லாத அவர், சாதுக்களை அழைத்துச் சமாதானம் பேசினார். அந்தச் சாதுக்களிடம் கரசேவையை நிறுத்திட வேண்டும் என்று முறையிட்டார். நான்கே மாதங்களில் தான் மொத்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு பிடித்து விடுவேன் என்றும் வாக்களித்தார். கரசேவையை நிறுத்திட வேண்டும் என முறையிட்ட அவர், கரசேவை செய்பவர்களின் மீது எந்தப் பலப் பிரயோகமும் செய்யப்பட மாட்டாது என்றும் ஒரு தேவையற்ற யாரும் கேட்காத வாக்குறுதியைத் தந்தார்.

இந்தக் கடைசி வாக்குறதியின் பொருள் நீங்கள் கரசேவையைத் தொடர்ந்து நடத்தலாம் என்பதே! அத்தோடு சாதுக்கள் கரசேவையாளர்களை பக்கத்தில் கிருஷ்ணனுடைய கோயிலைக் கட்டுவதற்காக அனுப்பினார்கள்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் பொய் சொன்னாரா?

சாதுக்களை சந்தித்து ஒரு வாரத்திற்குப் பின், பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைச் சொன்னார். தான் சாதுக்களைச் சந்தித்துப் பேசி விட்டதாகவும், பல்வேறு நீதிமன்றங்களிலும் கிடப்பிலிருக்கும், பாபரி பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும், உச்சநீதிமன்றத்திடம் இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டிடப் போவதாகவும் அறிவித்தார்.

அத்தோடு பாபரி பள்ளிவாசலைக் கட்டுவதற்கு முன் அங்கிருந்த கோயில் ஏதேனும் இடிக்கப்பட்டதா? என்றொரு வினாவை உச்சநீதிமன்றத்திடம வைத்து விடை கேட்கப் போவதாகவும் அறிவித்தார்.

பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கோயில் இருந்தது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் இந்து வகுப்புவாதிகள் சொல்வதைக் கேட்டாக வேண்டும். இந்த அறிவிப்பைச் செய்த மறுநாள் சாதுக்கள் மிரண்டார்கள். பிரதமரை மிரட்டினார்கள். பிரதமர் தங்களிடம் (சாதுக்களிடம்) பேசிடும் போது நீதிமன்ற விவகாரங்கள் எதையும் பேசவில்லை ஆகவே பிரதமர் பொய் சொல்லுகின்றார். எனவே நாங்கள் பிரதமரிடம் ஒப்புக் கொண்டவற்றிலிருந்து பின்வாங்குகின்றோம் என்றும் அறிவித்தனர்.

ஆனால் பாபரி பள்ளிவாசல் செயல்பாட்டுக் குழு (யுஐடீஆயுஊ : யுடட ஐனெயை டீயடிசi ஆயளதனை யுஉவழைn ஊழஅஅவைவநந) நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.

ஆனால் இந்துத் தீவிரவாதிகள் மத நம்பிக்கை என்பது நீதிமன்ற முடிவுகளுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இந்த விவகாரத்;தில் நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று அறிவித்தார்கள்.

1992 அக்டோபர் 30,31 நாட்களில் .. ..

விஹெச்பி யின் சாதுக்களின் அவை டெல்லியில் கூடி பின்வருமாறு அறிவித்தது:

நீதிமன்ற ஆணைகளைப் பற்றிக் கவலைப் படாமல் டிசம்பர் 6, 1992 முதல் கரசேவை துவங்கும். அது கர்ப்பக் கிரகத்திலிருந்து – அதாவது பாபரி பள்ளிவாசலின் மத்திய (டூம்) பகுதியிலிரந்து ஆரம்பிக்கும். அந்தக் கரசேவை கோயில் கட்டி முடிக்கப்படும் வரை தொடரும்.. ..

1992 நவம்பர் உச்ச நீதிமன்ற உத்தரவு

இந்நாளில் உச்ச நீதிமன்றம், உத்திரப்பிரதேச அரசுக்கு 2.774 ஏக்கரில் எந்தக் கட்டுமானப்பணிகளும் நடக்கக் கூடாது, என்றும் ஆணையிட்டது. அத்தோடு கட்டுமானப் பணிகளை அரசு எப்படித் தடுக்கப் போகின்றது என்பதை எழுத்து மூலம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திட வேண்டும் என்றம் கூறியது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த ஆணையின் கீழ், உத்திரப்பிரதேச பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், டிசம்பர் 6, 1992 அன்று நடக்கவிருக்கும் கரசேவை சமிக்ஞை அளவில் தான் நடைபெறும். அத்துடன் கீர்த்தனைகள் பாடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் பிஜேபி தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஸி அவர்களும், கரசேவைக்காரர்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாட வரவில்ல. அவர்கள் முழு அளவில் கோயில் கட்டவே வருகின்றார்கள் என அறிவித்தார்கள்.

ஆனால் பள்ளிவாயிலை இடிப்பதற்குத் தேவையானவற்றையெல்லாம் சங்க் பரிவாரம் முழு அளவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. இதனை அறிந்தும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.

டிசம்பர் 6, 1992 ஞாயிறு அன்று சுமார் 11 மணி அளவில் ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் பாபரி பள்ளிவாசல் முழமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதை பாஜக தலைவர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். குடியரசுத் தலைவருக்கும் பிரதமர் அவர்களுக்கும் தவறாமல் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இடித்து முடித்த பின்னர் அந்த இடத்தில் ராமர் - சீதை (குழந்தைகள்) சிலையை வைத்தார்கள்.

1992 டிசம்பர் 8 ம் நாள் மத்திய அரசின் செலவின் கீழ் கரசேவைக்காரர்கள் இலவசமாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரசேவைக்காரர்களை இலவசமாக இல்லாங்கொண்டு சேர்த்திட ரெயில்வே துறைக்கு மட்டுமே 300 கோடி செலவு என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

எதிரொலி

1992, டிசம்பர் 6 அன்று மாலை உத்திரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். எல்.கே.அத்வானி அன்று வரை தான் வகித்து வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சிப் பதவியை இராஜினாமா செய்தார்.

உத்திரப்பிரதேச சட்டசபை கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே அமல்படுத்தப்பட்டது. பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயிலுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டன. இதற்கிடையே அயோத்தியிலிருந்த முஸ்லிம்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

நாடு முழவதும் முஸ்லிம்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட அறப் போராட்டங்களை நடத்தினர். பல்லாயிரம் முஸ்லிம்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்கப்பட்டனர். இன்னும் பல ஆயிரம் முஸ்லிம்கள் தடா வின் கீழ் கைது செய்யப்பட்டு நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். (நன்றி : விடியல் வெள்ளி டிசம்பர் 1998)

(இன்ஷா அல்லாஹ் .. .. இந்தப் பக்கத்தில் இனி வரும் காலங்களில் பாபரி மஸ்ஜித் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இணைக்க இருக்கின்றோம். இது பற்றி தகவல்கள் தர விரும்புவோர் எமது ஈமெயில் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம். உங்களது தகவல்களை அனுப்பி இந்தத் தளம் இன்னும் வலிமையானதாக உருவெடுக்க நீங்கள் துணையும் நிற்கலாம்).







இது ஒரு வரலாற்று ஆவணம்?

பாபர் மசூதி இடிப்பு விவகாரம் மற்றும் மார்ச் 15 ல் பூமி பூஜை தொடர்பாக நடந்த நிகழ்வுகள்

24 பிப்ரவரி 2002


காவிக் கொடிகளை ஏந்நியபடி குஜராத் மாநிலம் ஆமதாபாத் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் ராமர் கோயில் கட்டுவதற்காக கூடினர்.

அயோத்தி விவகாரத்தில் திமுக, அதிமுக மௌனம் வேதனை அளிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை

உபி - யில் எந்தக் கட்சி வென்றாலும் ராமர் கோயில்  கட்டும் திட்டத்தில் மாற்றமில்லை. பஜ்ரங் தளம் அறிவிப்பு

2 மார்ச் 2002

குஜராத் கலவரம் ஆரம்பம். அயோத்தி சென்று விட்டு வந்த கரசேவகர்கள் ரயிலில் எரிப்பு

6 மார்ச் 2002

கரசேவகர்களின் கொலைத் தாக்குதலுக்குப் பயந்து அயோத்தி முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து, வெளிஊர்களுக்குச் செல்கின்றனர்.

அயோத்தி பிரச்னையில் காஞ்சி சங்கராச்சாரியார் தலையீடு. புதிய யோசனை.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் எவ்விதப் பணியையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ராம ஜன்ம பூமி அறக்கட்டளையையும், விஎச்பி இயக்கத்தையும் கேட்டுக் கொண்டேன். அரசு கையகப்டுத்தியுள்ள சர்ச்சைக்கு இடமில்லாத பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு ஹிந்து அமைப்புகளிடம் அளித்தால், சர்ச்சை;ககுரிய பகுதியில் எந்தப் பணியையும் மேற் கொள்ள மாட்டோம் என்று விஎச்பி ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஆகிய இரு அமைப்புகளும் உறுதியளித்துள்ளன.

சர்ச்சைக்கிடமில்லாத பகுதியை விட்டுக் கொடுத்து விட்டால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என முஸ்லிம் தலைவர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால், அப்பகுதி ராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குரியது. சர்ச்சைக்குரியது.  சர்ச்சைக்குரிய பகுதியில் தற்போதைய நிலை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினோம். அதில் அவர்களுக்குத் திருப்தி ஏற்பட்டதாகத் தெரிகிறது. முஸ்லிம் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் சையத் நிஜாமுதீன் தலைமையிலான 11 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் ஜயேந்திரரைச் செவ்வாய்க் கிழமை சந்தித்தனர்.

தடையை மீறி அயோத்தியில் கரசேவகர்கள் ஊர்வலம்.

இந்த ஊர்வலம் கரசேவக புரம் வரை ஒரு கிமீ தொலைவுக்கு நடைபெற்றது. அவர்களைத் தடுக்க போலிஸார் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கரசேவகர்களின் ஊhவலத்தை அமைதி ஊர்வலம் என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சட்டத்தை அவர்கள் யாரும் மீறவில்லை என்றும் அவர் சொன்னார்.

7 மார்ச் 2002

அயோத்தி வழக்கை விரைவில் தீர்க்க மனு. உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல்.

நிலத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அரசுக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை. அதனால் அது தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்படக் கூடியதல்ல என்று, சன்னி வக்ஃப் போர்டு சார்பாக ஸபர்யாப் ஜீலானி கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.

அயோத்தி பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிப்போம் என்று உறுதி மொழி அளிக்கப்படவில்லை. இப்பொழுதுள்ள நிலை நீடிக்கப்படும் என்று தான் ராமஜன்ம பூமி அறக்கட்டளை உறுதியளித்தது. பிரச்னைக்குரிய இடத்தில் பாபரி மசூதி கட்ட அனுமதிக்க மாட்டோம். அந்த இடம் ராமர் கோயில் இருந்த இடமாகும். முஸ்லிம்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் விஸ்வ இந்து பரிஷத் என்ன செய்யும் என நிருபர்கள் பரிஷத்தின் மூத்த துணைத் தலைவர் ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர் அவர்களிடம் கேட்டதற்கு, வரலாற்றுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு இருக்க முடியாது. நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டன. பிரச்னைக்குரிய இடத்தில் தடையின்றி பூஐஜ நடத்த அனுமதிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற அவர், வாரணாசியில் கோசிபுரா பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான இடுகாடுகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு கூறியது. அத் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான கருத்து : புக்கர் விருது பெற்ற அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறை, 2000 ரூபாய் அபராதம். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 3 மாத சிறை. நர்மதை அணைத் திட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அருந்ததி ராய், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக எழுந்த புகாரின் பேரில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

பாபரி மஸ்ஜித் ற்கு எந்த வித சேதத்தையும் ஏற்படுத்த மாட்டோம் என்று எழுத்து மூலம் நீதிமன்றத்துக்கு வாக்குறுதி அளித்த அத்வானி இன்றைக்கு எந்தவித தண்டனையுமின்றி உள்துறை அமைச்சராகப் பதவியில் இருந்து கொண்டிருப்பது, இந்த ஜனநாயகத்தின் நீதித்துறையின் வலிமை?யைக் காட்டுகின்றது.

8 மார்ச் 2002

அயோத்தி பிரச்னையில் நீதிமன்றம் அளிக்கும் எந்தவித தீர்ப்புக்கும் கட்டுப்படுவோம். விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு.

இது குறித்து பிரதமர் வாஜ்பாயிடம் எழுத்து மூலமாக உறுதிமொழி அளித்திருப்பதாகக் கூறியுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அசோக் சிங்கால் அவசரமாகக் கூட்டப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவை அறிவித்தார். பிரச்னைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கின்றதோ அப்போது அந்த இடம் அவர்களுக்குத் தரப்படும் என்று நான் பிரதமரிடம் உறுதி அளித்துள்ளேன் என்றார் அவர்.

அயோத்திப் பிரச்னையில் முடிவெடுப்பதில் விஎச்பி க்கு எந்தப் பங்கும் இல்லை - ஜயேந்திரர்.

அயோத்திப் பிரச்னையில் இந்து முஸ்லிம்கள் இடையே அமைதி ஏற்பட பாடுபட்டு வருகிறேன். இது முழு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. விஸ்வ இந்து பரிஷத்தின் எந்த அறிவிப்பையும் நம்ப வேண்டாம். அயோத்திப் பிரச்னை தொடர்பாக முடிவெடுப்பதில் அதன் பங்கு ஏதமில்லை. இதில் ராம ஜன்ம பூமி அறக்கட்டளை கூறுவதையே கருத்தில் கொள்ள வேண்டும். அயோத்திப் பிரச்னைக்கு அரச, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை, முஸ்லிம்கள் இணைந்து ஜுன் மாதம் 2 ம் தேதிக்குள் தீர்வு கண்டு விடுவார்கள்.

9 மார்ச் 2002

அயோத்தியில் சர்ச்சைக்கிடமில்லாத நிலத்தில் ராமர் கோயில் கட்டும் பணி ஜுனில் தொடக்கம். மார்ச் 15 ல் பூமி பூஜை.

சென்னை திரும்பிய ஜயேந்திரர் அறிவிப்பு. அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இப்போதுள்ள நிலையே தொடரும். இது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள் முன் வந்துள்ளனர்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : முஹம்மது ஹாஷிம் என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கில், அசோக் சிங்கால், ஆச்சார்ய கிரிராஜ் உள்பட விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் மசூதி இருந்த இடத்தைக் கோயிலாக மாற்ற பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த அடத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை இதன் மூலம் அவர்கள் மீறி வருகின்றனர். நீதி மன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறிய அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப் பிரதேச முதல்வர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை செயலாளர் கமல்பாண்டே ஆகியோர் மீதி நீதிமன்றத்தை அவமதித்தற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். விசுவ இந்து பரிஷத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாஜ்பாயியும், உள்துறை அமைச்சர் அத்வானியும் அறிக்கை வெளியிடவில்லை. எனவே அவர்கள் விஎச்பி தலைவர்களுக்கு ஆதரவு தருகின்றனர் என்றும் அம் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

10 மார்ச் 2002

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அரசு செயல்படும் - பிரதமர் வாஜ்பாய் அறிவிப்பு.


அயோத்திக்கு இராணுவத்தை அனுப்பும்படி உ.பி. கவர்னர் வி.கே.சாஸ்திரி மத்திய அரசுக்கு எழுத்துப் பூர்வ கோரிக்கையை விடுத்துள்ளார். இதனைப் பரிசீலிப்பதாக பெர்ணாண்டஸ் அறிவிப்பு.

அயோத்தியில் தடையை நீக்குவதற்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அயோத்திக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்குவதானது கண்டிக்கத்தக்கது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இப்போதுள்ள நிலையை நீடிக்கச் செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தடையை நீக்கினால் விசுவ இந்து பரிஷத் மற்றும் ராம ஜன்ம பூமி அறக்கட்டளையினர் கசசேவகர்களை ஒன்று திரட்டுவர். அது மட்டுமல்ல, மார்ச் 15 ம் தேதி தங்கள் திட்டத்தையும் செயல்படுத்தத் தொடங்குவர். இதற்கு இடம் தரலாகாது. அயோத்திக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சுவாமி அங்கு, ராமஜன்ம பூமி அறக்கட்டளைத் தலைவரை சந்தித்துப் பேசியுள்ளதும் கண்டிக்கத்தக்கது என் அகில இந்தி முஸ்லிம் மஜ்லிஷே முஷாவரத் அமைப்பின் தலைவர் ஷஹாபுத்தீன் தெரிவித்துள்ளார்.

11 மார்ச் 2002

அயோத்தியில் பூமி பூஜை நடத்தும் பிரச்னையில், ஜயேந்திரரின் யோசனையை முஸ்லிம் சட்ட வாரியம் நிராகரித்தது.

அயோத்தியல் ராமர் கோயில் கட்டுவதற்கு, சர்ச்சைக்கு இடமில்லாத பகுதியில் மார்ச் 15 ம் தேதி அடையாளமாக பூமி பூஐஜ நடத்த அனுமதிப்பது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறிய யோசனையை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நிராகரித்து விட்டது. அயோத்தியில் அடையாள பூமி பூஐஜ நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசை இந்த வாரியம் கேட்டுக் கொண்டது. அயோத்திப் பிரச்னைக்குத் துண்டு துண்டாகத் தீர்வு காண்பது சாத்தியமற்றது என்று அது சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், காஞ்சி சுவாமிகள் கூறியிருக்கும் யோசனை முழமையானதாக இல்லை. பிரச்னைக்கு முழமையான தீர்வைக் கூறுவதாக அவரது யோசனை இல்லை. பல முறை கேட்ட பின்னரும் கூட, கட்டுமானத் திட்டம் குறித்து விஎச்பி தயாரித்துள்ள கட்டட வரைபட பிரதியோ, மனையின் வண்ண வரைபடப் பிரதியோ எம்மிடம் தரப்படவில்லை. வாஜ்பேயிடம் ராமஜன்ம பூமி நியாஸ் கொடுத்திருக்கும் வாக்குறதியின் பிரதியும் எம்மிடம் தரப்படவில்லை.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திடடத்தை உடனடியாத் தொடங்குவதை அந்த யோசனை உறுதி செய்கிறது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு முஸ்லிம்களைக் கோருகிறது அந்த யோசனை.

கட்டுமானத் திட்ட வரைபடம் இல்லாமல், ராமஜன்ம பூமி அறக்கட்டளை எழுத்துப்பூர்வ உறுதிமொழி கொடுத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்ள அறக்கட்டளைக்கு எவ்வாறு உரிமை கிடைத்தது. ராமஜன்ம பூமி அறக்கட்டளைக்கும், விஎச்பிக்கும், சங்க பரிவாரத்தின் இதர அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது தெளிவாக்கப்படவில்லை.

1980 ம் ஆண்டிலிருந்து விஎச்பி தான் அந்த இயக்கத்தை நடத்தி வருகின்றது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக விஎச்பி கொடுத்த உறுதி மொழி எதுவும் அந்த யோசனையில் இல்லை. எனவே, தொடர்ந்து இயக்கத்தை நடத்தவும் தொண்டர்களைத் திரட்டவும் விஎச்பி க்க எவ்விதத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

சங்கப் பரிவார அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு வைத்துக் கொண்டு செயல்படுபவை. ஆனால் அத் தொடர்புகளை அவை சாதுர்யமாக மறைத்துக் கொண்டு, சட்டத்தின் பிடியில் தப்பித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சங்கப் பரிவார அமைப்புகள் அனைத்தும் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் அந்த யோசனையில் இல்லை.

சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால், அந்த இடத்தில் மசூதியைக் கட்டிக் கொள்ள எவ்விதத் தடையும் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதி மொழியோ, உத்தேச ராமர் கோயிலின் கர்ப்பக் கிரகப் பகுதி வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்பது பற்றிய உறுதிமொழியோ காஞ்சி சுவாமிகளின் யோசனையில் அளிக்கப்படவில்லை என்று முஸ்லிம் சட்ட வாரியம் தனது தீர்மானத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

பாபர் மசூதி நடவடிக்கைக் குழு அமைப்பாளர் சையது சஹாபுத்தீன், பாபர் மசூதி ஒருங்கிணைப்புக் குழத் தலைவர் ஜஃபர்யாப் ஜீலானி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா, வாரிய உறுப்பினர்கள் உள்பட சுமார் 70 பேர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திட்டமிட்டபடி 15 ல் பூமி பூஜை நடைபெறும். நாடு முழுவதும் அயோத்தியாக மாறும்.

ராமர் கொயில் கட்டுமான பணியை தொடங்குவதற்கான அடையாள பூஐஜ செய்வதற்கு ஹிந்துக்களுக்கு உள்ள மத உரிமையில் தலையிட இந்த நாட்டில் யாருக்கும் உரிமை கிடையாது என்று பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறினார். காஞ்சி சுவாமிகள் தலையிட்டதை அடுத்து பிரச்சினையில் தாங்கள் சிறிது விட்டுக் கொடுக்க முன்வந்ததாகவும் அப்படி இருப்பினும், முஸ்லிம் நண்பர்கள் உச்ச நீதிமன்றம் சென்று தங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.

ஹிந்துக்களின் ஆதரவை ஒவ்வொரு நாளாக அன்றி, ஒவ்வொரு மணி நேரமும் வாஜ்பாயி அரசு இழந்து வருகின்றது. காஞ்சி சுவாமிகள் சில திட்டங்களை முன் வைத்த போது, அவற்றை ஏற்று அரசுக்கு உதவி செய்தது பரிஷத். ஆனால், பரிஷத்திற்கு அரசு உதவி செய்யவில்லை. அயோத்திக்குச் செல்ல கரசேவகர்களுக்குள்ள தடைகளை அரசு நீக்க வேண்டும். ஹிந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. சர்ச்சை இல்லாத நிலத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்துப் பேச எந்த முஸ்லிம் ஸ்தாபனத்துக்கும் உரிமை இல்லை.

இந்த நிலப்பகுதி தொடர்பாக எந்த வழக்கும் இல்லை. முஸ்லிம் ஸ்தாபனங்கள் இந்த நிலத்தில் தலையிட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடப் பார்க்கின்றன. இந்த நிலம் சம்பந்தமாக பேச தகுதி உள்ளவர்கள் அரசு மற்றும் ராம ஜன்ம பூமி அறக்கட்டளை மட்டுமே. இதில் மூன்றாவது தரப்பு யாரும் இல்லை. (இந்த இடம் சம்பந்தமாக வழக்குதாரர்கள் முஸ்லிம்களும், சங்கபரிவாரங்களும் இருக்க, பிரவீண் தொகாடியாவோ, இந்த வழக்கில் அரசும், ஹிந்துக்களும் தான் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி முஸ்லிம்களின் உரிமைகளை மறுக்கின்றார்)

வரும் 15 ம் தேதி அயோத்திக்கு நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கரசேவகர்கள் வருவர். ராமர் கோயில் கட்டுவதை குறிக்க நாடு முழவதும் ஆங்காங்கே ஊhவலங்கள் நடக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு இடமும் அயோத்தியாக மாறும்.

பூமி பூஐஜ அiதியாக நடக்கும் சூழ்நிலையை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். ஹிந்துக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்றார் பிரவீண் தொகாடியா.

பாபர் மசூதி இயக்கத் தலைவர் கைது?

அயோத்தியில் சர்ச்சைக்கு உட்படாத பகுதியில் 15 ம் தேதியன்று பூமி பூஐஜ நடத்தப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதற்குப் போட்டியாக தில்லியிலிருந்து அயோத்திக்கு அரசியல் சாசனத்தைக் காக்கக் கோரும் ரத யாத்திரையை நடத்த பாபர் மசூதி இயக்கம் திட்டமிட்டிருந்தது. எனவே இதன் தலைவர் முஹம்மது யூனுஸ் சித்தீகி யை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் அவரை காவலில் வைத்துள்ளது. தில்லியில் ஜாஹிர் நகரிலுள்ள இல்லத்தில் சித்தீகி தங்கியிருந்தார். சனிக்கிழமை நள்ளிரவு அவரைப் போலீஸார் அழைத்துச் சென்றனர் என்று பாபர் மசூதி இயக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம், ஹிந்துக்களின் உணர்வுகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும் சங்க பரிவாரங்கள் வெளியே சுற்றிக் கொண்டு திரிகின்றார்கள்).

13 மார்ச் 2002

அனைவர் கவனமும் உச்ச நீதிமன்றம் மீது!


அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்துக்கு அருகில் பூமி பூஜை நடத்துவது என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு எடுத்துள்ள சர்ச்சைக்குரிய முடிவு குறித்து, உச்ச நீதிமன்றம் புதன்கிழமை  விசாரிக்கின்றது. நீதிபதிகள் பி.என்.கிர்பால், ஜி.பி.பட்டநாயக், வி.என்.கரே அடங்கிய பெஞ்ச் இவ்விசாரணையை மேற்கொள்கின்றது. உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்காமல் பூமி பூஐஜ நடத்தவோ, பிற விஷயங்களுக்கோ அரசு அனுமதி தராவது என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.

பூமி பூஐஜ நடத்தக் கூடாது என்று விஎச்பி க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதை;திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் தனது மனுவில் கோரியிருக்கின்றது. அஸ்லம் பூரே என்பவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மநு தாக்கல் செய்திருக்கிறார் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் பூமி பூஐஜ நடத்துவது, 1994 ல் உச்ச நீதிமன்றம அளித்த தீர்ப்பை மறுவதாக அமையும் என்று இரு தரப்பாரின் மனுக்களும் சுட்டிக் காட்டுகின்றன. (இருப்பவை இருக்கும் விதத்திலேயே இருக்கட்டும். இறுதித் தீர்ப்பு வரும் வரை யாரும், எதையும் மாற்றக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் அத் தீர்ப்பில் கூறியிருந்தது).

அயோத்தியில் ராணுவத்தை நிறுத்த வேண்டும், அயோத்தி நகரில் உள்ள கரசேவகர்புரத்திலும் ராஜஸ்தானின் பின்ட்வாராவிலும் ராமர் கோயிலுக்காகத் தயார் நிலையில் வைத்திருக்கும் தூண்களையும், கட்டுமானங்களையும் மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்ய வேண்டும். கரசேவகர்புரத்திலும் பின்ட்வாராவிலும் ஆலய கட்டுமானத்துக்காகப் பொருள்களை வைத்திருக்கும் இடங்களை மாவட்ட அதிகாரிகள் சீல் வைத்து, தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அஸ்லம் பூரே தனது மனுவில் கூறியிருக்கின்றார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அயோத்திக்கு வரும் ஆயிரக்கணக்கான கரசேவகர்களைத் தடுத்து நிறுத்தவும் ராணுவத்தை அயோத்தியில் நிறுத்தவும் தூண்களையும் இதர தளவாடங்களையும் கைப்பற்றவும் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கா விட்டால், 1992 ல் நடந்ததைப் போல கலவரங்கள் மூண்டு அப்பாவி மக்கள் உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது என்று அவர் தனது மனுவில் அச்சம் தெரிவித்திருந்தார்.

ரவீந்தர் குப்தா என்பவர், ராமரை வழிபட அயோத்தி செல்ல தனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருக்கிறார். மார்ச் 7 ம் தேதி ஃபைஸாபத்திலிருந்து என்னை விரட்டி விட்டு விட்டார்கள். நாட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று வரலாம் என்ற அடிப்படை உரிமையைப் பாதிப்பதாக அரசின் இந்த நடவடிக்கை இருக்கிறது என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற ஆணை அமல்படுத்தப்படும். உ.பி. ஆளநர் சாஸ்திரி பேட்டி

அயோத்தி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளிக்கும் ஆணை அமல்படுத்தப்படும். இப்பிரச்னை தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கின்றது. இப்பிரச்னை குறித்து பிரதமர் என்ன கூறினார் எனக் கேட்டதற்கு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து அதன்படி நடக்க வேண்டும் என அவர் தெரிவித்ததாகக் கூறினார்.

பூமி பூஐஜ நடத்தியே தீருவோம் என்று விசுவ இந்து பரிஷத் கூறியுள்ளது குறித்துக் கேட்டதற்கு, கோயிலில் தரிசனம் செய்யக் கூடாது என்று எப்படிக் கூற முடியும். இன்று மகாசிவ ராத்திரி. கோவிலுக்குச் சென்று மக்கள் வழிபாடு நடத்துவர். உங்களால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியுமா? இந்துக்களின் முக்கியப் புனிதத் தளங்களில் ஒன்று அயோத்தி. அங்கு பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டு தான் இருப்பர். வீடுகளிலும், கோயில்களிலும் கடவுளைத் தரிசிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தால் மக்களைத் தடுக்க முடியுமா? (கேள்வி பூமி பூஜையைப் பற்றியது, பதிலோ மக்கள் சிவராத்திரி வழிபாடு பற்றியது, சிவராத்திரி வழிபாடு பற்றியோ, அயோத்தி இந்துக்களுக்கு புனிதத்தளமா என்பது பற்றியோ கேள்வி கேட்கப்படாத பொழுது, ஒரு ஆளநராக இருப்பவர் எந்தளவு இந்து வெறியோடு பதிலளித்து இருக்கின்றார் என்பதற்கு அவரது பதிலே சாட்சியமளிக்கின்றது.)

2000 பேருடன் சென்று புனிதத் தூணை ஒப்படைப்போம். தடுத்தால் கைதாவோம்.

அயோத்தியில் வரும் வெள்ளிக் கிழமை சர்ச்சை இல்லாத இடத்தில் புனிதத் தூணை அரசிடம் ஒப்படைப்பது, பிரார்த்தனை ஆகியன மட்டுமே நடக்கும் என்று விஎச்பி மற்றும் ராம ஜன்ம பூமி அறக்கட்டளையும் அறிவித்துள்ளன.

அயோத்தி : பூமி பூஜைக்கு முஸ்லிம்கள் ஒப்புதல் அளிக்க ஜயேந்திரர் வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஐஜ செய்ய முஸ்லிம்கள் பரந்த மனப்பான்மையுடன் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு தற்காலிக தீர்ப்பு தான். இந்து மக்கள் இது குறித்து வேதனை அடைய வேண்டாம் என்றும் அவர் கூறினார். அதே போல முஸ்லிம்களும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டாம். வெற்றி, தோல்வி என தீர்ப்பைக் கருதத் தேவையில்லை.

பூமி பூஜை என்பது சிறிய சடங்கு ஆகும். ஜுன் 2 ம் தேதிக்குள் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கால அவகாசம் தந்துள்ளோம். கடந்த 1994 ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் இது தொடர்பாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

இதில் 3 நீதிபதிகள் பெரும்பான்மையாக நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். மற்ற 2 நீதிபதிகளும் கூட பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளனர். நிலத்தைத் தரக் கூடாது என கூறவில்லை. அயோத்தியில் கட்டடம் கட்ட 3 மாத கால அவகாசம் கேட்டுள்ளனர். அது குறித்து பிறகு பேசலாம். இப்போது பூமி பூஐஜ செய்ய ஆட்சேபணை இல்லை முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

பெருந்தன்மையுடன் முஸ்லிம்கள் இதைச் செய்தால் பலத்த வரவேற்பு, கௌரவம் கிடைக்கும். இரு சமுதாயத்தினரும் விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் ஜெயேந்திரர்.

(இங்கு ஜெயேந்திரர் முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்தால் கௌரவம் கிடைக்கும் என்கிறார். அவர் எதனைக் கேட்கிறார் என்பது புரியவில்லை. முஸ்லிம்கள் ஏற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கும் மார்க்கத்தையே விட்டுக் கொடுக்கச் சொல்கின்றாரா? அல்லது பாபர் மசூதியை மட்டும் விட்டுக் கொடுக்கச் சொல்கின்றாரா? அல்லது இன்னும் எங்களது பட்டியலில் 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் உள்ளன எனக் கூறுகின்றனரே அந்தப் பள்ளிவாசல்களையும், இன்னும் காசி, மதுரா வில் உள்ள பள்ளிவாசல்களையும் விட்டுக் கொடுக்கச் சொல்கின்றாரா? இவர் தான் சமாதானத்தூது சென்றவர்?!! இவர் இந்துத்துவாவிற்கு ஆதாயம் பார்க்கச் சென்றிருக்கின்றார் என்பதை விட வேறு என்ன அவரது முயற்சியில் இருக்கின்றது?)

இந்த வரலாற்று ஆவணம் இன்னும் தொடரும்.. இன்ஷா அல்லாஹ்..

 ================================================================

ராம்ஜென்ம பூமி பிரசினை பற்றி உங்கள் கருத்து என்ன? - பதிலளிக்கின்றார் : டி.கே.வெங்கட சுப்ரமணியம்


அரசியலுக்காக பெரிதாக்கப்பட்ட பிரசினை அது. புரஃபஸர் பி.பி.லாலுடைய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளை ஆதாரமாகச் சொல்கிறார்கள். விஎச்பி யைச் சேர்ந்தவர்கள். ஆனால் பி.பி.லால் முன்னுக்குப் பின் முரணாக எழுதக் கூடியவர். 1978 ல், கி.மு.800 விற்கு முன்னால் அயோத்தியில் மக்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியே இல்லை என்றவர் 1997 ல் ரிக்வேத காலம் என்பது கி.மு.3500 என்றார். உத்தரப்பிரதேசத்தில் எங்கு தோண்டினாலும் இந்து, ஜெயின், புத்த கோயில்களின் மீதங்கள் கிடைக்கும். அதைப் போல் தான் பாபர் மசூதிக்குப் பக்கத்திலும் சில கட்டடப் பகுதிகள் கிடைத்திருக்கின்றன. அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்த அது இடிக்கப்பட்டது என்று சொன்னால் அதற்கான அகழ்வாராய்ச்சி நிரூபணத்தைத் தந்தாக வேண்டும். ஃபீல்ட் நோட் புக் என்று சொல்லப்படும் அந்த முக்கிய ஆவணத்தைக் கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார்கள். பாபர் மசூதி கட்டப்பட்டது சமீப காலத்தில் தான். (1528) கோயில் இடிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதற்காண நிரூபணம் கிடைத்திருக்கும். அதே காலத்தில் வாழ்ந்த துளசிதாசர் அதைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ராமதாஸரான அவர், கோயில் இடிக்கப்பட்டிருந்தால் எழுதாமல் இருந்திருப்பாரா?

சரித்திரத்தைக் காவிமயமாக்கும் முயற்சி இப்போது நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே, -ல் இருந்தவர் நீங்கள். உங்கள் கருத்து?

கருத்து வேறுபாடுகளால் அதிலிருந்து வெளியே வந்து விட்டேன். அறிவியல் ஆதாரமில்லாத சில அடிப்படை மாற்றங்களை மத ரீதியாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருவது உண்மை தான்.

உங்கள் கருத்துப்படி அயோத்தியில் ராமர் பிறந்த இடம் பாபர் மசூதி இருந்த இடம் தான் என்பது சரியானது தானா?

சரியல்ல. அது வெறும் நம்பிக்கை தான். ஆதாரப்பூர்வமானது அல்ல. நம்பிக்கைகளை அரசியலாக்க நினைப்பது ஆபத்தில் தான் போய் முடியும்!.





பாபரி மஸ்ஜித் - அகழ்வாய்வு பயன்தருமா?

பாபரி மஸ்ஜித் பிரச்னையின் இன்னொரு பகுதியாக, அகழ்வாராய்ச்சின் மூலமாக பூமிக்கடியில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டு, அங்கு கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரு சமூகங்களையும் சேர்ந்தவர்களைக் கொண்ட கமிட்டியை நியமித்து, அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த மார்ச் 10 திங்கட் கிழமை முதல், பாபரி மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.

நீதிமன்றத்தின் இந்த முடிவு இரு சமூகங்களிடையேயும் மீண்டும் பிரச்னையைக் கிளறி விட்டிருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கின்ற இந்துத்துவவாதிகள், சரியான ஆதாரங்கள் எதனையும் நீதிமன்றத்தின் முன் வைத்தபாடில்லை. இதுவரை நடந்த வழக்குகளின் முடிவுகளைப் பார்த்தோமானால் அது முஸ்லிம்களுக்குச் சாதகமான முடிவாகத் தான் இருக்கும். அந்தளவு ஆதாரங்களுடன் முஸ்லிம்கள் தரப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றது.

இப்பொழுது நீதிமன்றம் அகழாய்வுப் பணிக்கு உத்தரவிட்டு, அதனுடைய முடிவுகளும் முஸ்லிம்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டால், நீதிமன்றத் தீர்ப்பிற்குக் கட்டுப்பட மாட்டோம் என்று குரல் கொடுத்தால், சங்க பரிவாரங்களை நீதிமன்றம் என்ன செய்யும்? என்பது பற்றி தெளிவான அறிக்கையை வெளியிட்டு விட்டு, இந்த வழக்கை மீண்டும் எடுத்துச் செல்வது தான் நல்லது என்று முஸ்லிம்கள் தரப்பினர் கருதுகின்றனர். ஏனெனில் பாபரி மஸ்ஜிதை மட்டும் அவர்கள் உரிமை கொண்டாடவில்லை. இன்னும் நாட்டில் உள்ள 3000 மஸ்ஜித்களில், காசி, வாரணாசி போன்ற பிரபலமான இடங்களில் உள்ள 7 பள்ளிவாசல்களையும் சேர்த்தே இப்பொழுது உரிமை கொண்டாடி வருகின்றார்கள். இதனை பிரவீண் தொகாடியா பொது மேடைகளில் அறிவித்து, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்த வண்ணம் இருக்கின்றார்.

இன்னும் சங்க பரிவார ஆதரவாளரான காஞ்சி சரஸ்வதி சுவாமிகள், தொல்லியல் துறை தரக் கூடிய ஆதாரங்களை இருதரப்பாரும் ஏற்றுக் கொண்டு, நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளார். இந்த அறிவிப்பு முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்புகின்றது. ஏனெனில், இதுவரை முஸ்லிம்கள் தரப்பு – நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்றே கூறி வந்திருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டோம் என்று முஸ்லிம்கள் தரப்பில் இதுவரை மறுத்துப் பேசியதில்லை. இந்த நிலையில், தொல்லியல் துறையினரின் ஆதாரங்களும் முஸ்லிம்களின் பக்கம் உள்ள நியாயத்திற்கு சான்று பகர்வதாக இருந்தால், சங்க பரிவாரங்களைச் சரிக்கட்டும் பொறுப்பை சரஸ்வதி சுவாமிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதும், இன்னும் அவ்வாறானதொரு தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்தாலும் நீதிமன்றத் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று சங்கபரிவாரங்களிடமிருந்து வாக்குறுதி பெற்றுத் தர முயல்வாரா? என்பதும் சந்தேகத்திற்கிடமானவைகள்.

சரஸ்வதி சுவாமிகளின் அறிக்கை வெளியான அதே காலத்தில் தான், தொகாடியா இன்னும் 7 பள்ளிவாசல்களைக் கைப்பற்றுவோம் என்றும் அறிக்கை விட்டிருக்கின்றார். இது முன்னுக்குப் பின் முரணாகப் பேசக் கூடிய அவர்களின் நயவஞ்சகப் போக்கைத் தான் காட்டுகின்றது. இன்னும் தொல்லியல் துறை சங்க பரிவாரங்களின் மூத்த தலைவரும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான முரளிமனோகர் ஜோஸி வசம் இருந்து கொண்டிருக்கும் போது, நியாயமான முறையில் தீர்ப்புக் கிடைக்குமா? என்பதும் சந்தேகத்திற்கிடமானதே என்று கூறி, மத்திய வக்பு வாரியத்தைச் சேர்ந்த முகம்மது ஹஷிம் இந்த அகழ்வாராய்ச்சிப் பணியைப் புறக்கணித்தார். அவரது சந்தேகம் நியாயமானதே. இதுவரை பாபரி மஸ்ஜித் பிரச்னையில் முஸ்லிம்கள் தரப்பிற்கு எந்த நியாயத்தையும் நீதிமன்றமோ அல்லது ஆட்சியாளர்களோ வழங்கவில்லை.

பாபரி மஸ்ஜித் இருந்தபொழுது, சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம், முஸ்லிம்கள் தொழுவதற்கு அனுமதி மறுத்தது. இப்பொழுது பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பின்னரும், அங்கு சிலைகள் வைக்க அனுமதித்து, பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இது ஒன்றே போதும் நீதிமன்றங்களும், அரசுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக, ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கின்றன என்பதற்கு! இந்த நிலையில், தொல்லியல் துறை முரளி மனோகர் ஜோஸி கை வசம் இருக்கும் போதும், உள்துறையும், பிரதமரும், ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி என அனைத்துத் தரப்பாரும் சங்க பரிவாரங்களாக இருக்கும் நிலையில், முஸ்லிம்களுக்குச் சாதகமான முறையில் தொல்லியல் துறை முடிவுகள் வந்தாலும், அந்த முடிவு முஸ்லிம்களின் கைகளுக்குக் கிடைக்க எத்தனை வருடங்களாகுமோ? என்பதும் கேள்விக்குறியே!

இன்னும் தொல்லியல் முடிவுகள் முஸ்லிம்களுக்குச் சாதாகமாக வரும் பட்சத்தில், சங்க பரிவாரங்களின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும். இந்த எதிர்ப்பை நீதிமன்றங்களும், அரசும் எவ்வாறு சமாளித்து முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கும் என்பதும் சந்தேகத்திற்கிடமானவையே!

இதற்கிடையே, ஆட்சியும் அதிகாரம் கையில் இருக்கின்ற காரணத்தால் , தொல்லியல் துறையும் அதன் கை வசம் இருக்கின்ற காரணத்தால், அதன் முடிவுகள் இந்துக்களுக்குச் சாதகமாக வர வாய்ப்பை ஏற்படுத்தி விடுவார்களென்றால், இதுவரை நீதிமன்றத்தையே நம்பி இருந்து, சரியான ஆதாரங்களைக் கையில் வைத்திருக்கும் முஸ்லிம்களின் நிலை என்ன?

நீதிமன்றம் தனது தீர்ப்பினை ரெகார்டுகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமா? அல்லது தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமா? என்பதனையும் நீதிமன்றமானது, மக்கள் மன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ரேடார் கருவி மூலம் சர்வே செய்த டோஜி விகாஸ் இண்டர்நேஷனல் என்ற கனடா நாட்டு நிறுவனத்தின் சர்வேயின் படி, பூமிக்குக் கீழே தூண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பூமியில் எந்தளவு ஆழம் வரை இவ்வாறு தோண்டிப் பார்ப்பார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது.

எது எவ்;வாறிருப்பினும், இன்னும் முஸ்லிம்கள் இந்த நாட்டின் நீதி அமைப்பின் மீது நம்பிக்கை வைத்த வண்ணமே, பாபரி மஸ்ஜிதை மீட்க போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

===========================================

நெஞ்சில் அலைபாயும் அனல்கள் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
தலைவர். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்

மும்பையில் 1993 மார்ச் 12 அன்றும், கோவையில் 1998 பிப்ரவரி 14 அன்றும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த தீர்ப்புகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளன. இந்த தீர்ப்புகள் குறித்துச் செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் மும்பையிலும், கோவையிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக அம் மாநகரங்களில் முறையே டிசம்பர் 92 ஜனவரி93 மற்றும் நவம்பர்-டிசம்பர் 97ல் நடைபெற்ற முஸ்லீம் இனப் படுகொலைகள் குறித்து மவுனம் சாதித்து நடுநிலையைத் தவறி விட்டன. அப்பாவி பொது மக்களைக் கொன்று குவித்த குண்டுவெடிப்புகளை நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அத்தகைய நாசகாரச் செயல்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக இருந்த முஸ்லீம் இனப் பேரழிவு கலவரங்களை மறப்பது நியாயமா?

Jawahirullah மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதம் மாறுபட்டவை. ஆனால் அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்த பொதுவான நிகழ்வு முஸ்லீம் இனப் பேரழிவு கலவரங்களை நடத்தியவர்கள் மீது அன்றைய அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த உண்மைகள் குறித்து மூச்சு விடாத செய்தி ஊடகங்கள், குண்டு வெடிப்புகள் பற்றிய படங்களைப் பிரசுரித்து, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரைப் பேட்டி கண்டு குண்டு வெடிப்பில் ஈடுபட்டோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துவுருவாக்கத்தைச் செய்து வருகின்றனர். இச்சூழலில் மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருந்த முஸ்லிம் பேரின அழிவு கலவரங்கள் குறித்தும் அதனை நடத்தியவர்கள் குறித்தும் அறிவது அவசியம். முதலில் கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பற்றியும் பின்னர் மும்பை குண்டு வெடிப்பு வழக்கு குறித்தும் ஆய்வு செய்வோம்.

முதலில் கோவையில் 1998 பிப் 14 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு

குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள சிலர் மீது 153 ஏ குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான முடிவு என்பது நமது கருத்து. குண்டு வைக்கத் துணிந்தவர்களின் நோக்கம் நவம்பர் டிசம்பர் கலவரத்திற்குக் காரணமானவர்களை, அவர்களது தலைவர்களைத் தாக்க வேண்டுமென்பது தான். எனவே இதனை மதமோதல் என்றோ, மதத்தினருக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல் என்றோ கூற முடியாது. பாபரி மஸ்ஜிதை இடித்து, முஸ்லிம்களை அழிப்பதற்குத் திட்டம் தீட்டும் அத்வானி போன்றோர் அனைத்து ஹிந்துக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார்கள் என்றோ அல்லது அனைத்து ஹிந்துக்களும் தங்கள் தலைவர்களாக அவரை போன்றோரை கருதுகிறார்கள் என்றோ கருதுவது முட்டாள் தனமாகும்.

இவர்கள் இந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்தி உலா வரும் பயங்கரவாதிகள். இந்தப் பயங்கரவாதிகளின் தலைவரான அத்வானிக்கு ஹிந்து மதக் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே அத்வானி கோவை வருவதைக் கருத்தில் கொண்டு அவரையும் அவரது ஆதரவாளர்களையும் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இரு மதத்தினருக்கிடையே பகைமையே ஏற்படுத்தும் செயல் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.

இனி நவம்பர்-டிசம்பர் 97ல் நடைபெற்ற கலவரத்திற்குச் செல்வோம்.

நவம்பர் சனிக்கிழமை. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் டிசம்பர் 6 அன்று சென்னையில் இட ஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சினையை முன் வைத்துப் பேரணி மற்றும் மாநாட்டிற்காகப் பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வந்த வேளையில் தான், அந்தச் செய்தி 39 இப்ராஹீம் சாஹிப் தெரு, இரண்டாம் சந்து என்ற எண்ணில் அப்போது இருந்த த.மு.மு.கவின் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தது. கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் கோட்டை மேட்டில் உள்ள அல்உம்மா அலுவலகத்திற்குக் காவல் துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்குத் தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதாக அல்உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்று முஸ்லிம் வாலிபர்கள் அப்பாஸ் (22), ஷபி(22), மற்றும் ஷபி(20) ஆகியோர் காவல்துறையிடம் சரணடைந்தனர். இத்துடன் பிரச்சினை முடிவடைந்து விட்டது என்பது தான் அந்தச் செய்தி. ஆனால் இதற்குப் பிறகு வந்த செய்திகள் நமது நெஞ்சத்தை பிளப்பதாக இருந்தது.

பிரண்ட் லைன் மாதமிருமுறை இதழில் (டிசம்பர் 13.26.1997) அதன் சிறப்புச் செய்தியாளர் டி.வி.என்.சுப்பிரமணியன் பின்வருமாறு வருணிக்கிறார்.

மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாமல், காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்து திருச்சி சாலை- டவுன் ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல் துறையினரின் மனைவிமார்களும் குழந்தைகளும் காவல் பயிற்சி பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.

உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கிக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கைய்ய கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. அந்தக் கட்டிடம் தரைமட்டமாகியது. ஆயத்த ஆடைகள், துணிகடைகள், கடிகாரக் கடைகள், காலணி கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடிய பின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைத் தெருவில் போட்டுத் தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்குச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி.ரவி அங்கே வந்த போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்து தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். சி.டி தண்டபாணிக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன.

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முஸ்லிம்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது வன்முறை கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர். அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹிபிபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். கோட்டை மேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப் கான் மருத்துவமனைக்கு வந்த போது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஒரு அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.

தனது ஆயுட்காலச் சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்தியேக பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறை கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத் தலைவி அழுது கொண்டே நம்மிடம் எனது கல்யாண பட்டு எரிந்து விட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை என்று நம்மிடம் சொன்னார். அருகில் உள்ள பி1 காவல் நிலையத்திற்குத் தகவல் தந்த போதிலும் அவர்கள் தங்களுக்கு உதவ முன் வரவில்லை என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்.

பிரபலப் பத்திரிகையாளரும், நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நாய்யார் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் ‘எ காங் இன் தி வீல்’ என்ற தலைப்பில் 1998 ஜனவரி 3 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:

நாடாளுமன்றத்தின் கவனத்தைத் தப்பும் அளவிற்குக் கோவை கலவரங்கள் லேசானது அல்ல நய்யார் சபையில் நடைபெற்ற விவாதங்கள் காயமடைந்த, அநாதரவாக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கலாம். நான் அந்த நகரத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன. அல்லது சூறையாடப்பட்டது, கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிகள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்புக் கோடியைத் தாண்டும். இதனை ஹிந்து முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது.

இது காவல் துறையின் கைங்கர்யத்தினால் நடந்தது. இதன் காரணமாகத் தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. காவல் துறையினர் ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர். என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது. ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இதனைத் தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்குச் சிறிய பிரச்சினை அல்ல.

12 வயது பாலகன் அபுபக்கர் சித்திக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப் கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்கு சென்ற அவரது தம்பி முஹம்மது ஆரீப் கர்ண கொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறைக்க முடியாதவை.

நமது வர்ணனையை விடத் தலைசிறந்த பத்திரிகையாளர் குல்திப் நாய்யார் மற்றும் மதிப்புமிக்க பிரண்ட்லைன் மற்றும் தி விக் செய்தியாளர்களின் வர்ணனை நடுநிலையாளர்களின் மனசாட்சியை உறுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.

கோவையில் நவம்பர்- டிசம்பர் 1997ல் இந்த அராஜகங்களை அரங்கேற்றிய கயவர்கள் யாரும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படவில்லை. இந்த வன்முறைகளுக்காக கைதுச் செய்யப்பட்ட அனைவரும் தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று கூறிக் குறுகிய காலத்தில் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்களை முன் நின்று நடத்திய காவல் துறை அதிகாரிகளோ அல்லது ஹிந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது 120, பி153 பிரிவுகள் நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பும் கூறப்படவில்லை. செல்வராஜ் கொல்லப்பட்டட சூழலில் சதி ஆலோசனைகளை அளித்த ராமகோபாலன், அப்துல் நாசர் மஃதனியை போல் வருடக் கணக்கில் அல்ல, இந்த வன்முறைகளுக்காக ஒரு நாள் கூடச் சிறையில் தள்ளப்படவில்லை.

மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல் துறையினர் எவ்வாறு கலவரத்தை தூண்டினார்கள், நடத்தினார்கள் வேடிக்கை பார்த்தார்கள் என்பதையெல்லாம் தரம் வாய்ந்த பத்திரிகையாளர் வழியாக மேலே கண்டோம். இது சாதாரண முஸ்லிம்களின் உள்ளங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.

எனது தலைமையில் கோவை முஸ்லிம்கள் டிசம்பர் 3ம் தேதி கோவையில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களில் 17 பேரில் உடல்களைக் கோவை அரசு மருசத்துவமனையில் இருந்து பெற்று அதனைக் கோட்டை மேட்டிற்கு எடுத்து வந்து, இறுதி தொழுகையை நிறைவேற்றினோம். பிறகு அனைத்து உடல்களும் ஒன்று சேர ஊர்வலமாகக் கோவை சுண்ணாம்புக்கலவாய் அடக்கவிடத்தில் அடக்கப்பட்டது. கோவை வரலாற்றில் மதக்கலவரத்தினால் ஏற்படும் மரணங்களின்பொழுது நடைபெறும் இறுதி ஊர்வலங்களில் எப்போதும் கலவரம் ஏற்படுவது உண்மை ஆனால் அமைதியாக அந்த ஊர்வலம் நடந்து முடிந்தது.

அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் நான் உரையாற்றிய போது, நல்ல காவல் துறை அதிகாரிகள் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார்கள். நமக்கு நீதி கிடைக்கும். வன்முறைக்கு பதில் வன்முறை தீர்வாகாது. அமைதி காப்போம். நீதி கண்டிப்பாக கிட்டும் என்று நான் குறிப்பிட்டேன். அன்றைய கோவை மாவட்டக் கலெக்டர் சந்தானமும், ஊர்வலப் பாதுகாப்பிற்குத் தலைமை தாங்கிய ஐ.ஜி.ஆர்.வி, கோபாலனும் எனது உரையைப் பாராட்டினார்கள். அத்துடன் நின்று விட்டார்கள். நீதி கிடைக்கவில்லை.

வன்முறையில் கிஞ்சிற்றும் நம்பிக்கை இல்லாத, ஒரு வன்செயலுக்கு இன்னொரு வன்செயல் தீர்வாகாது என்ற கொள்கையுடைய தமுமுக இந்திய வரலாற்றில் முதன் முறையாகக் கோவை கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவுச் செய்தது. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசியச் சிறுபான்மை ஆணையத்திடம் நாம் அதனை டெல்லியில் நேரடியாக சமர்ப்பித்து நீதி கேட்டோம். நீதிகிடைக்கவில்லை. இந்தப் பின்னணியில் தான், தனது சகோதரனை இழந்த, தனது உறவினரை இழந்த, தனது சமுதாயத்தினரின் சொத்துகள் சூறையாடப்பட்டதைக் கண்ட கோவை சகோதரர்களில் ஒரு சிலர் அவர்களுக்கு நீதி என்று தெரிந்து அநீதியான செயலில் பிப்ரவரி 14 அன்று ஈடுபட்டனர். உணர்ச்சி பெருக்கில், நீதி இல்லை இந்த நாட்டில் என்ற கோபதாபத்தில் ஏற்பட்டது தான் குண்டு வெடிப்புகள்.

சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ஜூலை இறுதி வாரம் கோவை கலவரத்தில் கைதான சகோதரர்களில் பெரும்பகுதியினரைச் சிறையில் சந்தித்த போது அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிந்தது. தாங்கள் செய்தது பெரும் தவறு என்பதை உளப்பூர்வமாக அவர்கள் உணர்ந்துள்ளார்கள். தங்கள் நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்தை உணர முடிந்தது. தி இந்து நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை ஆண்டுகள் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டதே அவர்களுக்குப் பெரும் தண்டைனயாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் அவர்களுக்குச் சிறைவாசம் அளிப்பது பெரும் அநீதியாகத் தான் அமையும்.

நீதிபதி உத்திரபதி நீதி வழுவாமல் தனது இறுதி தீர்ப்பை வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்து மும்பை குண்டு வெடிப்பு பின்னணியை ஆராய்வோம்.

மும்பையில் மார்ச் 12 அன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த தீர்ப்புச் சில வாரங்களுக்கு முன்பு வெளி வந்துள்ளன. 14 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 123 நபர்களில் 100 பேர் தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 12 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 15 பேருக்குக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளி வந்த பிறகு நிலவும் நிலை குறித்து சி.என்.என்.ஐ.பி.என் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் சாகரிகா கோஷ், இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:

ஒரு மயான அமைதி நிலவுகின்றது. இந்தத் தீர்ப்பை மனக் குழப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஒரு துளியளவு இரக்கமும் வெளிக்காட்டப்படவில்லை.

சுயபரிசோதனை செய்வதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. மக்கள் மன்றத்தில் சந்தேகத்தின் பலன் குற்றஞ்சாட்டப்பட்ட எவருக்கும் அளிக்கப்படவில்லை. நீண்ட காலமாக நடைபெற்று வரும் விசாரணை குறித்துச் சந்தேகத்தைக் கிளப்புவது தேசவிரோத மற்றும் போலி மதசார்பற்ற செயலாகக் கருதப்படுகின்றது.

இருப்பினும் மூத்த வழக்குரைஞர்கள் மும்பை குண்டு வெடிப்பு விசாரணையை நிற்கும் ஆவணங்கள், பெரும் அளவிலான சான்றுகள் மற்றும் அவற்றுக்கான எதிர் ஆவணங்கள், நீண்ட நெடிய விசாரணை, மனிதனின் இயற்கையான ஞாபக மறதிகள் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு பாவம் நீதிபதி பி.டி.கோடே எப்படி நீதியாக தீர்ப்பு அளித்திருக்க முடியும். ஒரு மூத்த வழக்குரைஞர் இந்த வழக்கு விசாரணையை ஒரு குளறுபடியான விசாரணை என்றும் மக்களைத் திருப்திபடுத்தும் நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சஞ்சய்தத் பிரச்சினையில் பொது மக்களிடையே ஏற்பட்ட உக்கிரம் நிறைந்த விவாதத்தைத் தவிர மற்றபடி நிசப்தம் தான் நிலவுகின்றது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்கள் தானே.

14 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வெளிவந்த நிலையில் மும்பை குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருந்த பேரழிவு கலவரங்கள் குறித்து விரிவாகப் பெரும்பாலான ஊடகங்கள் பேசவில்லை. இருப்பினும் டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993ல் மும்பையில் நடைபெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று இன்று வலிமையான குரல் எழுந்து வருகின்றது.

மும்பை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 257. ஆனால் டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993ல் நடைபெற்ற கலவரங்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1788 என்று சர்வதேசப் பொது மன்னிப்பு நிறுவனம். தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகின்றது.

இக்கலரவங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 1998ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த ஆணையம் அமைக்கப்பட்ட போது மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணா பிறகு உச்ச நீதிமன்ற நீதிபயாகிப் பணியில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார். ஆனால் இதுவரை முஸ்லிம் பேரின அழிவு கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படவில்லை. கலவரத்தில் ஈடுபட்ட அந்தக் கொடியவர்கள் யார்?

நீதிபதி கிருஷ்ணா கூறுகிறார்:

ஜனவரி 6, 1993 முதல் பெரும் அளவில் கலவரமும் வன்முறையும் இந்து வகுப்புவாதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன. இந்து வகுப்புவாத அமைப்புகள் செய்த பிரச்சா£ரமும், சாம்னா மற்றும் நவாக்கல் இதழ்களில் எழுதப்பட்டவையும் கலவரத்தைத் தீவிரப்படுத்தி அதனை உச்ச நிலைக்குக் கொண்டுச் சென்றன. இதன் பிறகு சிவவேசனை தலைவர்கள் கலவரத்திற்குத் தலைமை தாங்கி நடத்தினார்கள். தொடர்ந்து அவர்களது எழுத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் வகுப்புவாதத்தை அவர்கள் கொளுந்து விட்டு எரிய வைத்தார்கள். சிவசேனை தலைவர் பால் தாக்கரேயின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இவையெல்லாம் நடந்து வந்தன. ஜனவரி1, 1993 அன்று சிவசேனையின் பத்திரி¬யான சாம்னாவில் இந்துக்களை வன்முறையில் ஈடுபட தூண்டும் கட்டுரை ஒன்று பிரசுரமாகியது.

மிகத் தெளிவாக நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கலவரத்திற்குக் காரணமானவர்கள் யார் என்று தெளிவுபடுத்திய போதிலும் எவ்வித நடவடிக்கையையும் காவல் துறை மேற்கொள்ளவில்லை.

சாம்னா பத்திரிகை மீது சமுதாயங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தியதாக இந்திய தண்டனையியல் சட்டத்தின் 153 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மும்பை மாநகராட்சியின் முன்னாள் ஆணையாளர் ஜே.பி.டிசொசா வழக்குத் தாக்கல் செய்தார்.சாம்னா மீது அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றமும் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதற்கு மாறாக மராட்டிய அரசு சாம்னா மற்றும் நவாக்கல் பத்திரிகைகளைப் பல வகையில் ஆதரித்து அவற்றின் விஷமக் கருத்துக்களுக்கு ஆர்வமூட்டியது.

துவேஷத்தையும், வன்முறையையும் பரப்பிய இந்தப் பத்திரிகைகளுக்கு பொது மக்கள் நிதியில் இருந்து விளம்பரங்களும் அளிக்கப்பட்டன. குற்றத்தை தூண்டும் வகையில் எழுதியவருக்கு வன்முறையில் ஈடுபட்டவருக்கு அளிக்கப்படும் அளவில் தண்டனை வழங்கச் சட்டத்தில் இடம் உண்டு. மும்பை குண்டு வெடிப்பில் 257 பேர் உயிர் இறந்தார்கள். இந்தக் குண்டு வெடிப்பை நடத்தச் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதை விடப் பன்மடங்கு அதிகமாக மக்கள் உயிர் இழப்பதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு என்ன தண்டனை? சாம்னா பத்திரிகை தொடர்ந்து வன்முறைப் போக்கை பரப்புவதற்காக விளம்பரங்கள், தண்டனைக்குப் பதிலாக வெகுமதியாக அளிக்கப்பட்டன.

நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையின் முதல் பாகம், இரண்டாவது அத்தியாயத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:

26 டிசம்பர் 1992 அன்று மகா ஆரத்திகள் தொடங்கின. இது வகுப்புவாதப் பதட்டத்தை அதிகரித்ததுடன் அரைகுறையாக ஏற்படுத்தப்பட்டிருந்த அமைதியையும் குலைத்தது. மகா ஆரத்தி நடைபெற்ற சில இடங்களில் வகுப்பு வாதத்தை தூண்டும் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இத்தகைய மகா ஆரத்திகளில் பங்குக் கொண்ட பிறகு கலைந்து செல்லும் கூட்டத்தினர் வழியில் தங்கள் கண்களில் பட்ட முஸ்லிம் கடைகளை அடித்து நொறுக்கினர். முஸ்லிம்களைத் தாக்குவதற்காகச் சிவசேனைக்காரர்கள் ஒன்று திரண்டார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இராணுவ மதிநுட்பத்துடன் நடத்தப்பட்டன. முஸ்லிம் நிறுவனங்களில் பட்டியல், முஸ்லிம் வாக்காளர் பட்டியல் இவற்றைக் கையில் வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஸ்ரீ கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளது போல் கையில் வாக்காளர் பட்டியலுடன், இராணுவ மதிநுட்பத்துடன் செயல்படுவது என்பது சதித்திட்டமே. ஆனால் டிசம்பர் 92 மற்றும் ஜனவரி 93 மும்பை கலவரத்திற்குச் சதிதிட்டம் தீட்டிய சிவசேனை பயங்கரவாதிகள் மீது இ.பி.கோ 120 பிரிவின் படி எந்தவொரு வழக்கும் பதிவுச் செய்யப்படவில்லை. சுமார் 2000 இந்தியர்கள் உயிர் இழப்பதற்குக் காணமாக இருந்தவர்கள் என்று நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா அவர்களால் அடையாளம் காணப்பட்டவர்கள் மீது இன்று வரை சதித்திட்டம் தீட்டினார்கள் என்று வழக்குப் போடப்படவில்லை என்ன காரணம்?

உயிர் இறந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதினாலா?

நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் முஸ்லிம் சமூகப் பேரழிவுக் கலவரங்களை நடத்துவதற்கு எவ்வாறு சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதை விவரிப்பதுடன் நிற்கவில்லை.

இந்தக் கலவரங்களைத் திட்டமிட்டு, அதற்கு உதவிகள் புரிந்து, எல்லா வகையிலும் அது நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த நபர் யார் என்பதையும் நீதிமான் ஸ்ரீ கிருஷ்ணா அம்பலப்படுத்துகிறார். தனது அறிக்கையின் இரண்டாம் பாகம் மூன்றாம் அத்தியாயத்தில் மும்பை கலரவரத்தை முன் நின்று நடத்திய பங்கரவாதி குறித்து அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

சிவசேனையின் தலைவர்கள மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவர் பால் தாக்கரே என்பது தெளிவாகத் தெரிகின்றது. முஸ்லிம்களைத் தாக்க வேண்டும், பழிக்குப் பழி வாங்க வேண்டும். இந்தத் தாக்குதல்களுக்கு பிறகு என்ன நடந்தது என்பதற்குச் சாட்சி சொல்ல ஒரு பயலையும் விட்டு வைக்கக் கூடாது என்று பால் தாக்கரே உத்தரவுப் பிறப்பித்தார். இது போன்ற உத்தரவுகளைப் பால் தாக்கரே தொலைபேசியில் போட்டுக் கொண்டிருக்க ரமேஷ் மோரே மற்றும் சர்போட்தார் ஆகியோர் அங்கு வந்து தங்கள் பகுதியில் உள்ள நிலைகளை விவரித்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கும் இது போன்ற உத்தரவுகள் போடப்பட்டன. வட மண்டலக் கூடுதல் காவல் ஆணையாளர் ஏ.ஏ. கானைப் பிடித்து அல்லாஹ்வின் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். மண்டுக்கரை முடித்து விடுங்கள். ஆனால் முடிக்கும் போது முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்று பால் தாக்கரே உத்தரவு போட்டார்.

நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையின் முதல் தொகுதி, அத்தியாயம் 2ல் இன்னும் தெளிவாகப் பயங்கரவாதி தாக்கரேவை பின் வருமாறு வர்ணிக்கிறார்:

ஜனவரி 8, 1993 முதல் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் சொத்துகளுக்கு எதிரான தாக்குதலில் சிவசேனையும் அதன் உறுப்பினர்களும் தான் முனணணி வகித்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கிளைத் தலைவர்கள் முதல் சிவசேனையின் தலைவரான பால் தாக்கரே வரை அனைத்துச் சிவசேனை தலைவர்களும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான பதில் தாக்குதலை ஒரு தேர்ந்த இராணுவத் தளபதி போல் செயல்பட்டுப் பால் தாக்கரே சிவசேனைக்காரர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மதச்சார்பற்ற, மனித உரிமை அமைப்புகள் டிசம்பர் 92, ஜனவரி 93 கலவரங்களில் ஈடுபட்டதாக ஸ்ரீ கிருஷ்ணா ஆணையத்தினால் குற்றஞ்சாட்டப்பட்ட 31 காவல் துறை அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி வருகின்றார்கள். ஆனால் பால் தாக்கரே மற்றும் அவரது பயங்கரவாகதக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று குரல் வலிமையாக வைக்கப்படாதது வருத்தத்திற்குரியதாகும்.

குடிமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்பது அரசியல் சாசனம் தரும் உரிமையாகும். அரசியல் சாசனத்தின் 21ம் பிரிவு இந்திய குடிமக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை கடமை என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால் மும்பை பற்றி எரிந்தது. முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகள் மிக மலிவாகப் பறிக்கப்பட்டன.

இதற்கு யார் காரணம் என்று உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி தலைமையில் அமைந்த ஆணையம் மிகத் தெளிவாகக் குற்றஞ்சாட்டிய பிறகும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் இதர மதச்சார்பற்ற அரசுகளும் பயங்கரவாதி தாக்கரே மற்றும் அவரது எடுபிடிகள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது அரசியல் சாசனச் சட்டம் அரசுகளுக்கு அளித்துள்ள பொறுப்புகளை அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பட்டீலை ஆதரித்ததற்கு நன்றி தெரிவிக்கப் பயங்கரவாதி பால் தாக்கரே வீட்டிற்கு இன்றைய மராட்டிய முதல்வர் விலாஸ் ராவ் தேஸ்மூக் நேரில் சென்றுள்ளார். இது வெட்கக் கேடானது. (சஞ்சய்தத் தற்பொழுது பிணையில் வந்தபொழுது அவரிடம் கைகுலுக்கிய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், மிகப்பெரிய கலவரத்திற்குக் காரணமான பால்தாக்கரேவை முதலமைச்சரே வீடுதேடிச் சென்று சந்திக்கிறார்.) பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட சரிவிற்கு என்ன காரணம் என்பதை தேஸ்மூக் போன்ற காங்கிரஸ்காரர்கள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு அவகாசம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக அந்த அறிக்கை அடையாளப்படுத்தியுள்ள பால் தாக்கரே உள்ளிட்ட பயங்கரவாதிகளை அரசு கைது செய்ய வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். நடுநிலையான நீதிபதி முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டம். பால் தாக்கரே போன்றோருக்கு உச்சபட்சத் தண்டனையான தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் வகையில் வாதாடும் அரசு வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும். இதுவே முஸ்லிம்கள் உள்ளத்தில் காங்கிரஸ் ஆட்சிகளின் கையாலாகாத போக்கினால் ஏற்பட்ட ரணத்தைக் களைய உதவிடும்.

மொத்தத்தில் கோவை மற்றும் மும்பை குண்டுவெடிப்புகளுக்கு காரணம் அதற்கு முன்பு அந்த இரு மாநகரங்களிலும் நடைபெற்று முஸ்லிம் பேரழிவு கலவரங்கள் தான். சட்டம் தனது கடமையை அப்போது செய்திருந்தால் குண்டு வெடிப்புகள் என்ற மாபாதகக் குற்றத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆட்சியாளர்கள் எதிர்காலத்தில் இந்தப் படிப்பினையை மனதில் கொண்டு செயல்படுவார்களா?

இறைவன் நாடினால் தீர்ப்பு நம் பக்கம்....அல்லாஹ் அக்பர் 


இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்