சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மமக வேட்பாளர் பற்றி ஓர் அறிமுகம் ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 22 மார்ச், 2011

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மமக வேட்பாளர் பற்றி ஓர் அறிமுகம்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மமக வேட்பாளர் பற்றி ஓர் அறிமுகம், பெயர் - எம்.தமிமுன் அன்சாரி (வயது 34) 1995 முதல் தமுமுகவின் தீவிர தொண்டராக அறிமுகமானார். தமுமுக வின் மாணவரணியை உருவாக்கி அதன் தலைவராக திறம்பட செயல்பட்டார்.

சென்னை புதுக்கல்லூரியில் பயிலும் போது, 1997இல் சென்னை புதுக்கல்லூரியின் மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக வெற்றி பெற்றார்.

2001இல் தமுமுகவின் மாநில செயலாளராக பணி உயர்வு பெற்று செயல்பட்டார். 2009இல் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சிறந்த மேடைப் பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், நிர்வாகி என பன்முகத்தன்மை கொண்ட இவர் 34 வயதே நிரம்பியவர்.

ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் இயக்கத்தின் சார்பில் பங்கேற்றுள்ளார்.

இயக்கப்பணியை கட்டமைப்பதில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் தனது 14 வயதில் பொதுவாழ்வில் ஆர்வம் காட்டினார். 1990 முதல் பொதுவாழ்வில் ஈடுபடும் இவருக்கு 21 ஆண்டுகால சேவை அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்கள் உரிமை வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

சென்னை புதுக்கல்லூரியில் பி.எ.சி.எஸ் இளங்கலை பட்டம் முடித்த இவர், தற்போது சென்னை பல்கலைக்கழக்கத்தில் எம்.ஏ.அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார்.

இவர் நாகை மாவட்டம் தோப்புதுறையைச் சார்ந்தவர்.

இவருடைய வெற்றிக்கு அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்யவும்... உங்களால் முடிந்த அலவு அனைவருக்கும் இதை எத்திவைக்கவும்...

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்