தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி? ~ சஹாரா தமிழ்

ads

சனி, 6 ஆகஸ்ட், 2011

தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSH7RHb1JpIbrmSiAH2S8U2x2o6N78M5vs-PgtKonli75GTmEObpQ&t=1
மாதிரிக் கேள்விகள் (உங்களது விருப்பத்திற்கேற்றாற்போல, தேவைப்படும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்)

1. எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தேதிவாரியாகக் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். உதாரணமாக, எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் எப்போது, எந்த அதிகாரியிடம் போய்...ச் சேர்ந்தது? அந்த அதிகாரியிடம் எவ்வளவு காலம் இருந்தது? இந்த காலகட்டத்தில் அவர் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்?.

2. எனது விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் என்ன? அவர்களது பதவிகளின் பெயர்கள் என்ன? ஏதாவதொரு அதிகாரி நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறாரா?

3. தங்களது பணியைச் செய்யாமல் பொதுமக்களைத் தொந்திரவுற்கு உள்ளாக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடிவடிக்கை எடுக்க முடியும்? இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?


4. இப்போதைய நிலையில் எனது வேலை எப்போது முடியும்?

5. என்னுடைய விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் உங்களால் பெற்றுக் கொண்ட பின்னர், உங்களிடம் விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு புகார்/ ஆகியவற்றைக் கொடுத்த அனைத்து நபர்களின் பட்டியலையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இந்தப் பட்டியலில் கீழ்க்கண்ட தகவல்கள் இருக்கவேண்டும்.

*விண்ணப்பதாரரின்/வரிசெலுத்துபவ​ரின்/மனுதாரரின்/பாதிக்கப்பட்டவ​ரின் பெயர் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதின் எண்.

* விண்ணப்பம்/கணக்கு தகவல்அறிக்கை/மனு/புகார்-ன் தேதி.

* அவருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்ட தேதி.

6. மேற்படி விண்ணப்பங்கள்/கணக்குத்தகவல் அறிக்கைகள்/மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் அவற்றுக்கான வழங்கப்பட்ட ரசீதின் (பெறுகை ஒப்புதல் சீட்டு) எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள் அல்லது அச்சுப் பிரதிகளை தயவு செய்து வழங்கவும்.

7. எனது மனுவை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள்/கணக்குத் தகவல் அறிக்கைகள்/ மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் எதிலேனும் வரிசைக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதையும், அதற்கான காரணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

8. இவ்வாறு நடந்திருந்தால் இது குறித்து எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைக்கான விசாரனை எப்போது நடைபெறத் தொடங்கும்?
 
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காவல்துறை பிரிவுகளுக்கு தகவல் அளிக்கும் கட்டுப்பாட்டில் இருந்து விதிவிலக்கு அளித்துள்ளது.
 
1.சிறப்பு பிரிவு - குற்றப்புலனாய்வு
2.க்யூ பிரான்ச் - குற்றப்புலனாய்வு
3.சிறப்பு பிரிவு
4.பாதுகாப்பு பிரிவு
5.முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (கோர் செல் சி ஐ டி)
6.மாவட்ட சிறப்பு பிரிவு
7.போலீஸ் கமிஷனர் ஆணையக உளவுப் பிரிவு
8.சிறப்பு உளவுப் பிரிவு
9.கமிஷனர் ஆணையகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு பிரிவு
10.நக்சலைட் சிறப்பு பிரிவு
11.குற்றப் பிரிவு சி ஐ டி.
12.விஷேசப் புலனாய்வு பிரிவு
13.திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு
14.போதைப் பொருள் தடுப்பு உளவுப் பிரிவு
15.கொள்ளை தடுப்பு பிரிவு
16.பொருளாதார குற்றப் பிரிவு
17.சிலை திருட்டு தடுப்பு பிரிவு
18.வணிகக் குற்றப் புலனாய்வு பிரிவு
19.சிவில் சப்ளை சி ஐ டி
20.சைபர் க்ரைம் செல்
21.மாவட்ட குற்றப் பிரிவு மற்றும் நகர குற்றப் பிரிவு
22.சிறப்பு அதிரடிப்படை
23.தமிழ்நாடு கமாண்டோ படை
24.தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி
25.கடலோரப் பாதுகாப்பு படை
26.போலீஸ் ரேடியோ பிரிவு

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்