மறைக்கப்பட்ட தியாக வரலாறுகள்...! ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 1 மார்ச், 2013

மறைக்கப்பட்ட தியாக வரலாறுகள்...!



அன்பு சஹோதரர்களே !

இன்று இந்தியாவின் பிரச்சனைக்குரியவர்கள் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு வாழும் இந்த இஸ்லாமிய சமுதாயம் செய்த எண்ணற்ற தியாக வரலாறுகள் மறைக்கப்பட்டு உள்ளன...

வரலாற்றில் நடந்த இருட்டடிப்பை ஒவ்வொன்றாய் வெளிச்சமாக்குவோம் இன்ஷா அல்லாஹ். மகாத்மா காந்தி அவர்களுக்கு எண்ணற்ற பொருளுதவி செய்த குஜராத்திய முஸ்லிம்கள் காந்தியின் அகிம்சை வழி போராட்டத்திற்கு மட்டும் உதவவில்லை..

ஜூலை 9, 1944 அன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவம் ஆரம்பித்த உடன் அவருக்கு பொருளாதார உதவி அளித்து அவரை ஊக்குவித்த முதல் இந்தியன் ஒரு இஸ்லாமியன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

குஜராத்தில் உள்ள தோராஜி என்ற நகரத்தில் வாழ்ந்த "மேமன் அப்துல் ஹபீப் யூசப் மர்பாணி " என்னும் மாபெரும் வள்ளல் அவர்கள் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரம்பித்த "இந்திய தேசிய ராணுவத்திற்கு " ஒரு கோடி ரூபாயை நிதியாக அளித்து உதவியுள்ளார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாய் நேதாஜி அவர்கள் ஹபீப் யூசப் மர்பாணி வர்களுக்கு சேவக் இ ஹிந்த் என்ற பட்டத்தை அளித்து கவுரவித்து உள்ளார் என வரலாற்று ஆசிரியர் சிட்டல்வாளா என்பவர் பதிவு செய்துவைத்திருக்கிறார் ..

பல வரலாற்று புத்தகங்கள் மர்பானி அவர்களை படம்பிடித்து வைத்துள்ளது .
வரலாற்று ஆசிரியர் ராஜ் மால் கஸ்லிவால் என்பவர் Netaji, Azad Hind Fauz, and after என்ற தனது புத்தகத்தில் சொல்கிறார் நேதாஜியிடம் ஒருகோடி மதிப்புள்ள பணம் நகைகளை மார்பாணி அவர்கள் கொடுத்த வேளையில் நேதாஜி அவர்கள் மெய் சிலிர்த்து சஹோதரர்களே! மக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்துள்ளனர் ..தியாகங்கள் செய்ய முன்வருகின்றனர்..மர்பானி செய்த தியாகம் அளப்பரியது..அவர் இந்திய திருநாட்டுக்காக செய்த தியாகம் விலைமதிப்பற்றது என புகழ்கிறார்..

இப்படி வரலாற்றில் எண்ணற்ற உயிர் பொருள் தியாகங்கள் இஸ்லாமியர்களுடையது....

எந்த இஸ்லாமியர்களின் தேசபற்றை கேள்விக்குரியாக்குகிரீர்களோ அப்படிப்பட்ட இஸ்லாமியர்கள் செய்த எண்ணற்ற தியாகங்கள் ஒவ்வொன்றாய் வெளிச்சமாக்குவோம்... இறைவனின் அருளால்...
ஆதாரம் டைம்ஸ் ஆப் இந்தியா Jul 14, 2012,

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்