சென்னையில் நடைபெறும் சமாதானக் கலை விழா-2015 இணைய அழைப்பிதல்... ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 23 ஜூலை, 2015

சென்னையில் நடைபெறும் சமாதானக் கலை விழா-2015 இணைய அழைப்பிதல்...




                         


                              இம்மாதம் 26-ந் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலை விழா 2015 என்ற பல்சுவை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கலைவிழாவில் சமுதாயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சமாதானக் கலைவிழாவின் சிறப்பம்சங்கள்;

- வெளிவாழ் இந்தியர்களின் துயர நிலையை எடுத்துக்கூறும் கடல் கடந்த பறவைகள் என்ற ஆணவப்படம் திரையிடப்பட்டு குறுந்தகடாக வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே துபாய், ஷார்ஜா ஆகிய நகரங்களில் திரையிடப்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- உணர்வாய் உன்னை என்ற வாழ்வியல் மேம்பாட்டுக் கலை புத்தகம் வெளியிடப்பட உள்ளது. உணர்வாய் உன்னை என்ற தலைப்பில் கடந்த 8 ஆண்டுகளாக 7 நாடுகளில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு பயிற்சி முகாமின் பாடத்திட்டங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

- பெண்மையின் மேன்மையைப் போற்றும் அவள் என்ற குறும்படம் திரையிடப்பட்டு குறுந்தகடாக வெளியிடப்பட உள்ளது.
- இஸ்லாமியப் பணியை சிறப்பாக ஆற்றுவோருக்கு வழங்கப்படும் இஸ்லாமிய ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது.

- மேலும், பாஸ் பாஸ்.., நான் நோன்பிருக்கேன், புறம் என்ற புதிய 3 குறும்படங்கள் தொடங்கப்பட உள்ளது.

ஆர்ட் ஆஃப் பீஸ் ஃபவுன்டேஷன் என்ற சமூக நல அமைப்பு இந்த விழாவை மிக விமரிசையாக ஏற்பாடு செய்துள்ளது. யுனிவெர்ஸல் சின்டிகேட்ஸ், கே.கே.வி. குரூப், மீடியா 7, ஆர்.எஸ்.டி. வீடியோ, ஷா ஸ்டுடியோஸ் ஆகியவை விழாவிற்கு அணுசரனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு 9750581856, 9789567030 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது 00971503851929 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.


இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்