பர்மா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாதிகள் இன அழிப்புப் படுகொலைகளை! ~ சஹாரா தமிழ்

ads

சனி, 28 ஜூலை, 2012

பர்மா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாதிகள் இன அழிப்புப் படுகொலைகளை!

 
 
 
 
 
 
 
 2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!

பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாதிகள் இன அழிப்புப் படுகொலைகளை நிகழ்த்திவருவதாகவும்,அந்நாட்டிலுள்ள சுமார் 1கோடி முஸ்லிம்களை அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மியான்மர் மாணவி ஒருவர் கவலைதெரிவித்துள்ளார்.

எகிப்தின் ஷரீஆ கல்லூரி ஒன்றில் மாணவியாக இருக்கும் ஆயிஷா சுல்ஹி இதுபற்றி சர்வதேச ஊடகத்தின் கவனத்தை வேண்டியுள்ளார்.

அகிம்சையைப் பின்பற்றுவதாகக் கூறும் பெளத்தர்கள் மியான்மரில் இதுவரைபல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை புரிந்துள்ளதாகவும், ஏராளமான முஸ்லிம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும்,இச்செய்திகளை அறிய வரும் எந்த மனிதரும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது; ஆயினும் சர்வதேச நாடுகளும் ஊடகங்களும் ஜீரணிக்க இயலாத மெள்னத்தைச் சாதித்து வருவது ஏன்? என்றும ஆயிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது வலைப்பக்கம் ஒன்றில் “பெளத்த பயங்கரவாதிகள் அங்குள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால்,முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். அவ்வகையில் மியான்மர் முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் அபிமானத்திற்குரிய செய்தியாகும்" என்கிறார் ஆயிஷா.

நன்றி : www.inneram.com

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.[Al Qur'an 14:42]

3:178. இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.

3:196. காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.
3:197. (அது) மிகவும் அற்ப சுகம்; பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.
85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.

85:9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
85:10. நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு —

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்