முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் ஓர் அலசல்! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 31 ஜூலை, 2014

முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் ஓர் அலசல்!



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஹிந்து சமுதாய மக்களும் முஸ்லிம்களும் தொன்றுதொட்டே தொப்புள்கொடி உறவுகளாக மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்துவரும் சூழ்நிலையில் கடந்த 19 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சங்பரிவார கூட்டங்கள் முஸ்லிம்களையும் அவர்களின் தொழில் நிறுவனங்களையும், சொத்துக்களையும் சூறையாடுவதற்காகவே வேண்டி விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக நடத்த வாய்ப்பிருந்தும் மேலே சொன்ன காரணங்களுக்காக வேண்டி அமைதியை சீர்குலைக்க ஹிந்து முண்ணனி போன்ற சகத்திகள் முத்துப்பேட்டையில் முயற்சித்து வருகின்றன.

கடந்த 19 வருடங்களாகவே இந்த விநாயகர் ஊர்வலத்தின் போது ஏதேனும் பிரச்சனைகள் எழுவது வழக்கமாகிவிட்டது எனலாம். அந்தளவிற்கு ஊரவலத்தினரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தே உள்ளன. தமிழகம் முழுவதும் குறிப்பட்ட தினத்தில் விநாயகர் ஊர்வலம் நடந்துவிட்டாலும் பெரும்பாலாக பதட்டமான சூழ்நிலைபகுதி என்று கருதும் சில ஊர்களில் மட்டும் ஹிந்து முண்ணனி அறிவிப்பதே ஊர்வலத் தேதியாகும்.

அதில் ஒன்றுதான் முத்துப்பேட்டை. இங்கு குறிப்பிட்ட அந்த தேதியை கடந்து 10 அல்லது 15 தினங்கள் கழித்த பின்னரே நடத்த திட்டமிடுவார்கள் காரணம் இது மத ஊர்வலம் அல்ல மத கலவரம் என்பதை உணர்ந்துகொண்ட உள்ளூர் ஹிந்துக்கள் பெரும்பாலானோர் இந்த ஊர்வலத்தில் பங்குகொள்வதில்லை.

 அதன் காரணமாக இவர்கள் வெளியூரிலிருந்து ஆட்களை திரட்டி வருவதற்காகவே இந்த நாள் கடந்த அறிவிப்பாக இருக்கும். அப்படி ஊர்வலத்தில் வரும் வெளியூர்வாசிகள் உன்மை “குடிமகன்”களாக ஊர்வலத்தில் பங்கெடுப்பர் அதன் வெளிப்பாட்டை ஊர்வலத்தின் பகுதிகளில் காணலாம்.

ஊர்வல தேதி அறிவித்தபிறகு ஏதோ ஒருவகையான பதற்றம் முத்துப்பேட்டையில் ஊர்வலம் நடந்து முடியும் வரை காணப்படும் அதோடு மட்டுமல்ல அந்த ஊர்வலத்தில் ஏதேனும் சலசலப்புகளை ஊர்வலக்காரர்கள் ஏற்படுத்திவிட்டால் அந்த பதற்றம் சில நாட்களுக்கு தொடர்வதும் வழக்கம் தான்.

காவல்துறையும் அதிக கவனம் எடுத்து பல்வேறு அமைதி நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டாலும் சில நேரங்களில் அசம்பாவதிங்களும் நடந்துவிடுகின்றன. தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே திருச்சி ஐஜி தலைமையில் 4 அல்லது 5 மாவட்ட எஸ்.பிக்கள் 15 அல்லது 20 க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி கள் இன்னும் ஏ.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் என அதிகபட்சாமான காவலர்களை பாதுகாப்புக்கு பயன்படுத்துவார்கள்.

 அதோடு வஜ்ரா வாகனங்கள், போக்குவரத்தை சரி செய்யப்பயன்படுத்தப்படும் தட்டிகளை கொண்டுவந்து ஊர்வாலப்பாதைக்குட்டபட்ட அனைத்து சந்துகளையும் அடைத்தல், ஊர் முழுவதும் அதி நவீன கேமராக்களை கொண்டு கண்கானித்தல் என முத்துப்பேட்டையே காவல்துறையின் முழுகட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்படும். முத்துப்பேட்டை மக்கள் அதுவும் குறிப்பாக முஸ்லிம்கள் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில் இருப்பது போன்ற நடவடிக்கைகள் அமையும்.

ஊர்வல தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பாரையும் தனி தனியே அழைக்கப்பட்டு அமைதிக்கூட்டம் எனவும், காவல்துறை கண்காணிப்பாளர், துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் பி.ஸி மீட்டிங் எனவும் கூட்டப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் விளக்கப்பட்டு அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படும்.

காவல்துறை இத்தனை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் ஊர்வலக்காரர்கள் தேவையில்லாமல் எழுதிகொடுக்கப்பட்டவைகளுக்கு மாறாக கோஷங்களை எழுப்புவது, நேரம் கடந்து ஊர்வலத்தை முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் கொண்டுவருவது, ஊர்வலப்பாதையில் உள்ள முஸ்லிம்கள் வீடுகளை கல் எறிந்துதாக்குவது என ஊர்வலக்காரர்களின் அட்டகாஷத்திற்கு எல்லையே இல்லாமல் இருக்கும். காவல்துறையும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தாலும் இது போன்ற செயல்களை வேண்டுமெனே செய்வார்கள் ஊர்வலக்காரர்கள். இது தொடர்ந்து பதற்றத்தையே உருவாக்கி வந்தன.

முத்துப்பேட்டை முஸ்லிம்களின் பகுதிக்குள் அமைதியான முறையில் எத்துனையோ மத ஊர்வலங்கள் வந்தாலும் இந்த விநாயகர் ஊர்வலத்தால் எழும் பிரச்சனைகளை காரணமாக கொண்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் விசாரனை நடத்தி முன்பு இருந்த ஊர்வலப்பாதையான புதுப்பள்ளிவாசல் ரோடு, பங்களாவாசல், பெரியகடைத்தெரு, வழியாக முகைதீன் பள்ளி, குட்டியார் பள்ளி, அரபு சாகிபு பள்ளி என பல வழிபாட்டுதளங்களையும், முஸ்லிம்களின் தெருக்களையும் தாண்டி பேட்டையில் கறைத்து வந்ததை மாற்றி அமைத்து புதுப்பள்ளிவாசல் வழியை கடந்து பட்டுக்கோட்டை ரோடு வழியாக கோரையாற்றில் கரைக்கவேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அந்த நீதிமன்ற அறிவுப்புக்குப்பின் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து கடந்த 3 வருடங்களாக ஊர்வலப்பாதை மாற்றி அமைக்கப்பட்டு ஊர்வலம் சென்றுவருகிறது. ஊர்வலப்பாதை மெயின் வழியாக இருந்தாலும் அதிலும் சிலப்பகுதிகள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளாகவே இருப்பதால் இந்த பகுதிகளுக்குள் ஊர்வலம் வந்தவுடனே கோஷங்களும்.

தேவையில்லாத சப்தங்களும் அதிகரிக்கப்பட்டுக்கொண்டே ஊர்வலம் செல்லும் அவ்வாறே கடந்த வருடம் செல்லும் போது ஊர்வலப்பாதையில் அமைந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்களின் இல்லத்தின் கண்ணாடிகள் கற்களை கொண்டு அடித்து நொறுக்கப்பட்டன. அதே வழியில் தொடர்ந்து சென்ற ஊர்வலம் ரஹ்மத் பள்ளிக்கூடத்தையும், ரஹ்மத் பள்ளிவாசலையும் கற்களால் தாக்கியுள்ளது. ஆனாலும் முஸ்லிம்கள் அமைதிகாத்தே வந்தனர்.

ஊர்வலம் கரைக்கும் பகுதிக்கு சென்று விநாயகர்களை கரைத்தவுடன் திரும்பும்போது சில வருடம் பிரச்சனை வந்துவிட்டதால் உசாரான காவல்துறை கடந்த பல வருடங்களாகவே தங்களது வாகனங்கள் மூலமாகவும் தனியார் வாகனங்கள் மூலமாகவும் ஊர்வலக்காரர்களை அனுப்பி வைத்துவருகின்றனர். இப்படி காவல்துறையின் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.

அந்த வரிசையில் 20 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் 28-09-2012 அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையும் வழக்கத்தைவிட அதிகமாகவே பாதுக்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். 3000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பெண் காவலர்கள் உள்பட பணியில் அமர்த்தப்பட்டனர். நிறந்தர கேமாராக்கள் (பிரச்சனைகள் அதிகமானதால் முத்துப்பேட்டை முழுவதும் நிறந்தரமாக நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டு ஊர் கண்கானிக்கப்பட்டுவருகிறது) அல்லாது அதி நவீன கேமராக்கள் ஆங்காங்க தற்காலிகமாக பொறுத்தப்பட்டன.

முக்கிய வழிபாட்டுத்தலங்களுக்கு பாதுகாப்புகள் வழங்கப்பட்டன. வஜ்ரா வாகனங்கள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. போக்குவரத்து தட்டிகளுடன் இந்த வருடம் கூடுதலாக பெரிய மரங்களை கொண்டு ஆட்டோ ஸ்டான்டும், செக்கடிக்குள பகுதியும் தட்டிகளாக மறைக்கப்பட்டன. அடிக்கு இரண்டு போலிஸ் என்கிற அளவிற்கு முத்துப்பேட்டை முழுவதும் வெறும் போலிஸ்காரர்களாகவும், போலிஸ் வாகனங்களாகவும்தான் சில நாட்கள் முத்துப்பேட்டை காட்சி தந்தன. பல்வேறு அமைதி கூட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாற்றமாக பேட்டை எனும் பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட முஸ்லிம்களின் பகுதிகளுக்கள் கொண்டுவந்து பங்களாவாசலில் வழக்கமான விநாயகர் ஊர்வலத்தோடு இணைவது என்று திட்டம்போட்டு விநாயகர் சிலைகள் அனுமதி பெறாமல் பேட்டையில் வைத்திருந்தனர் ஹிந்து முண்ணனி பா.ஜ.கவினர். இதனை அறிந்த காவல்துறையினர் ஊர்வலம் நடப்பதற்கு 2 மூன்று நாட்களுக்கு முன்பாகவே பேட்டைக்கு சென்று அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு தூக்கிவந்தனர். இதனால் பேட்டை பகுதி பா.ஜ.கவினர் சிலர் மட்டும் உண்ணாவிரதம் என்று நாடகம் நடத்தி பார்த்தனர் இதை உள்ளூர் பேட்டை வாசிகளே புறக்கணித்து அவர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டனர். எதற்கும் அசைந்துகொடுக்காத காவல்துறை அவர்களின் சூழ்ச்சியை தவிடு பொடியாக்கியது.

ஊர்வல தேதியான 28-09-2012 முத்துப்பேட்டையே டென்ஷனாக இருந்தது எனலாம் அந்தளவிற்கு அமைந்திருந்தது. முத்துப்பேட்டை ஜாம்புவனோடை வடகாட்டில் இருந்து ஹிந்து முண்ணனியின் சார்பாக மேல தாளங்களுடனும், வெடி சப்தங்களுடனும் பெரிய விநாயகர் சிலை புறப்பட்டது. ஜாம்புவனோடை பெரிய தர்ஹா வழியாக வந்த விநாயகர் ஆவேச கோஷங்களுடன் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பாலத்தையைடைந்து ஆசாத்நகர் வழியாக பஸ்டான்டிற்கு வருகை தந்தது.

அவ்வாறு அந்த ஊர்வலம் வருவதற்கு முன்பாகவே செம்படவான் காடு, ஆலங்காடு, கோஷாக்குளக்கரை, மருந்தாங்காவெளி, காளியம்மன் கோவில் தெரு என அந்தந்தப்பகுதிகளில் இருந்தும் அமைக்கப்பட்ட விநாயகர்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மீராஹூசைன் ஆஸ்பத்திரி அருகில் வந்தடைந்து மேலதாளங்களோடு வழக்கம்போலவே காத்திருந்து. ஜாம்புவனோடையில் இருந்து புறப்பட்ட பெரிய விநாயகரோடு இத்தனை பகுதிகளின் விநாயகர்களும் இணைந்துகொண்டு ஊர்வலமாக பழைய பஸ்டான்டிற்கு வழக்கம்போலவே வருகை தந்தது. அங்கு சுமார் அரைமணிநேரம் ஊர்வலம் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் புதுபள்ளிவாசல் பகுதியான நியூ பஜார் வழியாக சரிபா வாய்ஸ் டேனிங்கை அடைந்து பங்களாவாசல் வழியாகவும், ரஹ்மத் ஸ்கூல் வழியாகவும் கோரையாற்றை சென்றடைந்து அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தின் போது எந்த விதமான அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்றாலும் மருந்தாங்கவெளியில் இருந்து எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது வெடிக்கப்பட்ட வெடிகளால் மன்னை சாலையில் உள்ள காவல்நிலையம் அருகில் உள்ள கடைகளில் பட்டு சிறிய அளவில் தீ ஏற்பட்டது. உடனடியாக தயார்நிலையில் இருந்த மன்னார்குடி, திருத்திறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ பரவாமல் தடுக்கபட்டன. இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source-Muthuppettai Mohaideen
#Mohamedharis

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்