குமராட்சி பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு-சட்டமன்றத்தில் மமக…! ~ சஹாரா தமிழ்

ads

புதன், 30 ஜூலை, 2014

குமராட்சி பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு-சட்டமன்றத்தில் மமக…!



குமராட்சி பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு செய்யப்படுவது தொடர்பாக சட்டமன்றத்தில் குரலெழுப்பிய மமக…!

இன்று 30-07-2014 தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வணிக வரித்துறை, முத்திரைத் தாள் பத்திரப் பதிவுத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகளில் பேசுகின்ற வாய்ப் பளித்தமைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொண்டு,

மனிதநேய மக்கள் கட்சியின் பல்வேறு கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக தோல் தொழிற்சாலையின் ஏற்றுமதியாளர்களுடைய வாட் ரிபண்ட் தொகை ஓராண்டுக்காலமாக இதுவரையிலும் திரும்பத் தராமல் காலம் கழித்து வருகிறார்கள்.

ஆகவே அவர்களுடைய வாட் ரீப்ண்ட் தொகையை உடனடியாக திரும்பத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து மூன்று மாதங்கள் NIL refund submit பண்ணினால் RC cancel செய்யப்படும் என்ற ஒரு சூழல் இருக்கிறது. அதையும் இரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்- மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்