ஒரே நாளில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 பேர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு... ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 26 பிப்ரவரி, 2015

ஒரே நாளில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 பேர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு...

சென்னை, : போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த 3 பேர் பெட்ரோலுடன் வந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரியில் உள்ளது.

இங்கு அரசு விடுமுறை தினம் தவிர திங்கள் முதல் வெள்ளிவரை புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 12.30 மணி அளவில் தாயும், மகனும் புகார் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

வந்தவர்கள் திடீரென கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள ஈவிகே சம்பத் சாலை நடுவே அமர்ந்து தர்ணா செய்தனர். இதனால், அங்கு போக்குவரத்து தடைபட்டது. இதை சற்றும் எதிர்பாராத போலீஸ் கமிஷனர் அலுவலக பாதுகாப்பு பிரிவு போலீசார் இருவரையும் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அவர்கள் கேட்காததால் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் தர்ணாவில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தது மதுரையை சேர்ந்த மகேஷ்வரி, அவரது மகன் இன்ஜினியரிங் மாணவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தனர்.

போலீசாரிடம் மகேஷ்வரி கண்ணீர் மல்க கூறியதாவது: ‘எனக்கு மதுரையில் ரூ5 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இதனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் அபகரித்து உள்ளார். என்னையும் மதுரைக்கு செல்ல விடாமல் சென்னை திருமங்கலத்திலேயே சிறை வைத்து இருந்தார். அவரது பிடியில் இருந்து தப்பி வந்துள்ளேன்.இது குறித்து 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருக்கிறேன்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. சம்பந்தப்பட்ட வக்கீல் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இல்லையேல் தற்கொலை செய்வதுதான் முடிவு என்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மைலாப்பூரை சேர்ந்த மைதிலி என்ற பெண் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் பெட்ரோலுடன் வந்தார். வந்தவர் பெட்ரோலை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து மைதிலி கூறுகையில், “எனது உறவினருக்கு போலீஸ் வேலை வாங்கி தருவதாக அண்ணா சாலை காவல் நிலையத்தில் பணி செய்யும் பெண் போலீஸ் ஒருவர் ரூ7 லட்சம் பெற்றார். உறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். மைதிலி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரளி விதையை அரைத்து குடித்து நேரடியாக கமிஷனர் அலுவலகம் வந்து தற்கொலைக்கு முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்