பாரதிய ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல என்பதை மக்கள் உணரத்தொடங்கிவிட்டனர்.. ~ சஹாரா தமிழ்

ads

புதன், 10 ஜூன், 2015

பாரதிய ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல என்பதை மக்கள் உணரத்தொடங்கிவிட்டனர்..

               பாசிச தன்மை கொண்ட இந்துத்துவ பிரசார நிறுவனத்தின் அரசியல் பிரிவை ஜனநாயக அரசியல் கட்சி என்று நம்பி ஆட்சியை கொடுத்த நாம் அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறோம்...

காங்கிரஸ் போன்று CPM போன்ற அரசியல் கட்சிகளுக்குள் பலதரப்பட்ட சமூக மக்களின் பிரிவுகள் அடங்கி இருக்கும் உதாரணமாக தொழிலாளர் பிரிவு, விவசாய பிரிவு, இலக்கிய பிரிவு, போக்குவரத்து பிரிவு இப்படி பல..கட்சியின் முடிவுகளில் இவற்றின் நலன்கள் இருக்கலாம், ஆனால் இவை கட்சியை கட்டுப்படுத்தாது...

ஆனால் பிஜேபி யில் இது தலைகீழ் ஆர்டர், பிஜேபி என்பது பார்பன மேலாண்மை வெறி கொண்ட RSS என்னும் நிறுவனத்தின் ஒரு பிரிவே..பிஜேபியின் தலைவர்களில் தொடக்கி அமைச்சர்கள், எம்பிக்கள் வரை அத்தனை பெரும் பாராளுமன்றம் போவதை விட நாள்தோறும் பூனேவில் இருக்கும் RSS தலைமை அலுவலகத்திற்கு செல்வதை கவனித்தாலே புரியும்...இங்கு பிஜேபி என்னும் கட்சி RSS என்னும் இந்துத்துவ நிறுவனத்தை கட்டுபடுத்தாது, RSS தான் 40 கோடி மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசியல் கட்சியை கட்டுபடுத்தும்...

பாஜக தலைவர்களிடமும், H ராசா, பொன்.ரா போன்றவர்களிடமும் ஒரு அரசியல் தலைவர்களுக்கு உண்டான குறைந்தபட்ச ஜனநாயக தன்மை கூட இல்லாததை கவனியுங்கள். நாட்டை ஆள்பவர்கள் நாட்டின் நிர்வாகத்தை பற்றியோ, சமூக பிரச்சனைகளை பற்றியோ, மக்களின் பொருளாதார பிரச்சனைகள் பற்றியோ பேசாமல் சதா மாட்டுகரியை பற்றியும், இஸ்லாமியர்களை தூற்றியும், சமஸ்கிருதம் பற்றியும், பகவான் கிருஷ்ணன் பற்றியும் பேசித்திரியும் ஒருவித தீவிர மத நோய்க்கு ஆளானவர்கள் எப்படி அரசியல்வாதிகளை போல் ஆட்சி நடத்த முடியும்..

வெறும் மதவெறியாள் காலத்தை ஓட்ட முடியாது என்பதை அறிந்து முதலாளிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்தியாவை விற்றாவது தங்கள் பாசிச பார்பனிய மதவெறியை நாடெங்கும் பரப்ப துடிக்கிறார்கள்...இவர்களுக்கு தெரிந்த ஒரே ட்ரிக்கு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றும் சமயங்களில் எல்லாம் மக்கள் கவனத்தை தேவை இல்லாத சர்ச்சைகளில் திருப்பி விடுவதுதான்...

IIT அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடை என்பது மக்கள் நிலம் பிடுங்கி சட்டத்தை அவசரச்சட்டமாக மூன்றாவது முறையாகவும் தாங்கள் கொண்டுவந்ததை மறைக்கவே...

நிர்வாக திறமையற்ற, ஜனநாயக தன்மையற்ற மத வெறியர்களிடம் சிக்கிக்கொண்டு தவிப்பதை மக்கள் உணரத்தொடங்கி விட்டனர்...
சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை பலகாலம் ஏமாற்ற முடியாது ஓய்...

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்