நபிகள் நாயகம் வேரறுத்த ஷிர்கும்..நாம் சொல்ல மறந்த ஷிர்கும்! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 28 ஜனவரி, 2016

நபிகள் நாயகம் வேரறுத்த ஷிர்கும்..நாம் சொல்ல மறந்த ஷிர்கும்!

நபி صلي الله عليه و سلم வேரறுத்த ஷிர்கும்..நாம் சொல்ல மறந்த ஷிர்கும்!
                                                                                                                                                 நபி வழி நம் வழி என வாழும் நாம்...நபி வழியில் எந்த ஒரு சிறு குறையும் ஏற்ப்பட்டு விடக் கூடாது எனக் கருதும் நாம்...நபி வழிக்காக நம் வாழ்வை அர்ப்பணிக்கவும் தயாராகவுள்ள நாம்...சிறப்பிற்குரியவர்கள்...  படைத்த இறைவனின் அருளுக்குரியவர்கள்...
                                                                         وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம்.(அல்குர்ஆன் : 3:132)அல்லாஹுவின் வாக்கு உண்மையானது!
                                                                       நபி வழி என்பது சடங்கல்ல,சம்பிராதய முறையல்ல.
    நபி வழியில் தெளஹீதும் தொழுகையும் இரு வேறுக் கூறுகள் அல்ல.
       தெளஹீதின் ஒளியை மக்காவில் தொடங்கிய நபி صلي الله عليه و سلم ஐ அப்படியே பின்பற்றுவது தான் நபி வழி.
                                                                      இதில் மாற்றுக் கருத்துடையோருக்கும்,மாறி சிந்திப்போருக்கும் நமக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லை.நபி வழியில் எந்த சூழலிலும்  சமரசமில்லை!
                                                                      ஷிர்க் என்பது சிலந்தி வலை....!வலை தானே என எண்ணி தன்னை பாதுகாக்க ஓய்வெடுக்க தஞ்சம் தேடிப் போகும் எல்லா உயிர்களையும் உறிஞ்சி சக்கையாக்கி விடும்.
                                                                    ஷிர்க்கிற்கு என்று எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளமும் கிடையாது.
                                                                    அல்லாஹுவைப் புறக்கணித்து விட்டு ஷைத்தானுக்கு கட்டுப்படும் எல்லாம் ஷிர்க்கின் வகைகள் தான்..
                                                                    அல் குர் ஆன் கூறும்..يَا أَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطَانَ ۖ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلرَّحْمَٰنِ عَصِيًّا என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; திண்ணமாக, ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான்.(அல்குர்ஆன் : 19:44)

ஆக்கம் : கீழை எஸ்.எம்.பி

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்