ஷைத்தானால் உருவாக்கப்படும் சிலையும் சிலை சார்ந்த கலாச்சாரமும் ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 28 ஜனவரி, 2016

ஷைத்தானால் உருவாக்கப்படும் சிலையும் சிலை சார்ந்த கலாச்சாரமும்

காலங்கள் தோறும் ஷைத்தானால் உருவாக்கப்படும் இந்த அடையாளங்களில் தலையானது சிலையும் சிலை சார்ந்த கலாச்சாரமும்.
                                                                   அல் குர் ஆனும் இதை ஒப்புக் கொள்ளும்...رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ ۖ என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டிலாழ்த்திவிட்டன;(அல்குர்ஆன் : 14:36)
                                                                    சிலையையும் சிலை சார்ந்த வாழ்க்கை கலையையும் ஒழிக்காமல்,ஒழிக்க எண்ணாமல் ஷிர்க்கை ஒழிக்க இயலாது.ஷிர்க்கை ஒழிக்க முடியாது.
                                                                    சிலை என்பது கல்லிலான, மரத்திலான,விலை மதிப்பற்ற பொருளிலான வெறும் உருவமோ வடிவமோ அல்ல!
                                                                    மாறாக மனித உள்ளங்களை தனது தங்குமிடமாக்கிக் கொண்ட ஷைத்தானிய உணர்வு,ஊக்கம்,உற்சாகம் என எல்லாம் அதில் அடங்கும்.
ِ                                                                    ۗ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ شُرَكَاءَ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ.......அல்லாஹ்வையன்றி மற்றவைகளையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்(என்பதை நீர் அறிவீரா)? வீணான  எண்ணங்களை கற்பனைகளையன்றி வேறெதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை; மேலும் அவர்கள் வெறும் கற்பனையில் மூழ்கி கிடப்பவர்கள்!(அல்குர்ஆன் : 10:66)
                                                                   சிலையும் சிலை சார்ந்த வாழ்க்கை கலையும் கோணலானது,கொள்கையற்றது.எந்தக் கட்டுப்பாடுகளையும் ஒப்புக் கொள்வதில்லை.இலக்குடன் கூடிய வாழ்க்கை சிந்தனையை செயல் முறையை ஏற்றுக் கொள்வதில்லை.
                                                                  தான் என்ற தனித்துவத்தை அகம்பாவத்தை அடிப்படையாகக் கொண்டது.அதை அடைவதற்கு தடையாகக் கருதும் எதையும் அழிக்க தயங்காது.பிற மனிதர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் அவமதிக்கும்.கண்ணியத்தைக் சீர் குலைக்கும்.ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றை உதறித்தள்ளி  உதாசீனப்படுத்தும்.மொத்தத்தில் சிலைக்கும் ஷிர்க்கிற்கும் சிலை கலாச்சாரத்திற்கும் உலகமும் உலக ஆசையும் உடல் இச்சையும் தான் அஸ்திவாரம்.

ஆக்கம்: கீழை SMB

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்