தமுமுக தலைமைக்கு அதிரை உமர் தம்பி குடும்பத்தின் நன்றி ~ சஹாரா தமிழ்

ads

புதன், 30 ஜூன், 2010

தமுமுக தலைமைக்கு அதிரை உமர் தம்பி குடும்பத்தின் நன்றி

தமுமுக தலைமைக்கு உமர்தம்பியின் குடும்பத்தினர் அனுப்பிய நன்றிக்கடிதம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் நல் அருளால் தாங்கள் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவரும் நலம் என்று நம்புகிறோம். இங்கு நாங்கள் எங்கள் குடும்பத்தவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியால் நலமாக உள்ளோம்.

எல்லாம் வல்ல இறைவனின் நாட்டப்படி, அதிரை உமர் தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அவர்கள் பெயரி ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ள செய்தி வெளிவந்ததும் எல்லையற்ற மகிழ்ச்சி, அல்ஹம்துலில்லாஹ். இன்னும் நல்ல செய்திகள் வரும் என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது.

இத்தருணத்தில், உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற எங்களுடைய முதல் வேண்டுகோளை தமுமுக தலைவரான தங்களிடம் முதல் முதலில் வைத்தோம், சிறிய காலதாமதமில்லாமல் உடனே எங்களுக்கு கணிவான, அன்பான பதில் அனுப்பியதேடு இல்லாமல் முதல்வர் அவர்களுக்கும் கடிதம் எழுதி இவ்விசையத்தை தமிழக முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்து சென்றதை எங்களால் நிச்சயமாக மறக்க முடியாது. உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக உலகத்தில் அனைத்து திசைகளில் இருந்து குரல் ஒரலித்தது, தங்களின் பங்கு மிக முக்கியமானது என்று சொன்னால் மிகையில்லை.

ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் நன்றி மடல் அனுப்பிய போது, உங்கள் பதிலில், ‘சமுதாய கடமையை தான் செய்கிறோம்’ என்று சொல்லியிருந்தீர்கள், இப்பதில் உண்மையில் எங்களை மிகவும் நேகிழ வைத்தது. உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், தமுமுக அனைத்து நிர்வாகிகளுக்காவும், தமுமுக அனைத்து உறுப்பினர்களுக்காகவும், மமக நிர்வாகிகள் உறுப்பினர்களுக்காவும், அனைத்து தமிழ் வலைப்பூ சகோதரர் சகோதரிகளுக்காவும் நாங்கள் நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

உங்களின் சமுதாயப்பணி தொடர வேண்டும், சமுதாய முன்னேற்றத்திற்காக உங்களின் அறவழி போராட்டங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும், அல்லாஹ் அதற்கு துணையிருப்பான்.

அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் வாழ்த்து மரணிக்க செய்வானாக.

மீண்டும் ஒரு மடலில் உங்களிடம் உரையாடுகிறேன்.

தங்களின் உடல் நலனை பேணிக்கொள்ளுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

-தாஜூதீன்

www.tmmk.in

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்