திராணியற்ற மீடியாக்களும், பத்திரிக்கைகளும்...!!! ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 17 டிசம்பர், 2012

திராணியற்ற மீடியாக்களும், பத்திரிக்கைகளும்...!!!





தீவிரவாதி என போட மறுக்கும் மீடியாக்களின் பாரபட்சத்தை தோலுரிப்போம்...

எங்கு குண்டு வெடித்தாலும் உடனே முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இந்தியன் முஜாஹித், லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முஹம்மது போன்ற இயக்கத்தினர் பொறுப்பேற்றுவிட்டார்கள் என்றெல்லாம் கொக்கரிக்கும் இந்தியா மீடியாக்களே...

சமஜ்வதா ரயில் குண்டு வெடித்த போதும் இப்படித்தானே தங்கள் மனோ இச்சையின் அடிப்படையிலோ அல்லது சில காவல்துறைகளின் தவறான அறிவிப்புகளாலோ நிமிடத்திற்கு நிமிடம் செய்தி வெளியிட்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொண்டீர்கள்.... !

தற்போது பார்த்தீர்களா சம்ஜவதா ரயிலில் குண்டுவைத்தது முஸ்லிம்கள் இல்லை ஹிந்துத்துவ தீவிரவாதிகள்தான் என்று நிரூபணமாகிவிட்டது. ஏற்கனவே இரு ஹிந்துத்துவ சங் பரிவார தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது முக்கிய தீவிரவாதியும் சிக்கியுள்ளான். இப்போது வாய் திறக்க மறுக்கின்றீர்களே மீடியாக்களே உங்களுக்கு நடுநிலை கிடையாதா....?? மனசாட்சி கிடையாதா....??

கீழே உள்ள பத்திரிக்கை செய்தியில் கூட முக்கிய குற்றவாளி என்றுதானே குறிபிட்டுள்ளீர்கள். இதுவே முஸ்லிம் பெயராக இருந்தால் தீவிரவாதி, பயங்கரவாதி என குறிப்பிடும் பத்திரிக்கைகளே ஹிந்துத்துவ தீவிரவாதிகள் பிடிபட்டால் உங்களின் பேனாக்கள் தீவிரவாதிகள் என எழுதி காவி தீவிரவாதத்தை தோலுரிக்க மறுப்பது ஏன்?

முஸ்லிம்கள் என்றால் உங்களுக்கு ஏற்படும் அரிப்பு ஹிந்துத்துவ தீவிரவாதிகள் பிடிபடும்போது ஏற்பட மறுப்பது ஏன்??. முஸ்லிம்களை மட்டும் திட்டமிட்டு தனிமைபடுத்தி தீவிரவாத முத்திரை குத்துவது ஏன்???

- மனிதநேயன் (முத்துப்பேட்டை முகைதீன்)

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்