1/6/10 - 1/7/10 ~ சஹாரா தமிழ்

ads

புதன், 30 ஜூன், 2010

தமுமுக தலைமைக்கு அதிரை உமர் தம்பி குடும்பத்தின் நன்றி

தமுமுக தலைமைக்கு உமர்தம்பியின் குடும்பத்தினர் அனுப்பிய நன்றிக்கடிதம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் நல் அருளால் தாங்கள் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவரும் நலம் என்று நம்புகிறோம். இங்கு நாங்கள் எங்கள் குடும்பத்தவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியால் நலமாக உள்ளோம்.

எல்லாம் வல்ல இறைவனின் நாட்டப்படி, அதிரை உமர் தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அவர்கள் பெயரி ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ள செய்தி வெளிவந்ததும் எல்லையற்ற மகிழ்ச்சி, அல்ஹம்துலில்லாஹ். இன்னும் நல்ல செய்திகள் வரும் என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது.

இத்தருணத்தில், உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற எங்களுடைய முதல் வேண்டுகோளை தமுமுக தலைவரான தங்களிடம் முதல் முதலில் வைத்தோம், சிறிய காலதாமதமில்லாமல் உடனே எங்களுக்கு கணிவான, அன்பான பதில் அனுப்பியதேடு இல்லாமல் முதல்வர் அவர்களுக்கும் கடிதம் எழுதி இவ்விசையத்தை தமிழக முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்து சென்றதை எங்களால் நிச்சயமாக மறக்க முடியாது. உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக உலகத்தில் அனைத்து திசைகளில் இருந்து குரல் ஒரலித்தது, தங்களின் பங்கு மிக முக்கியமானது என்று சொன்னால் மிகையில்லை.

ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் நன்றி மடல் அனுப்பிய போது, உங்கள் பதிலில், ‘சமுதாய கடமையை தான் செய்கிறோம்’ என்று சொல்லியிருந்தீர்கள், இப்பதில் உண்மையில் எங்களை மிகவும் நேகிழ வைத்தது. உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், தமுமுக அனைத்து நிர்வாகிகளுக்காவும், தமுமுக அனைத்து உறுப்பினர்களுக்காகவும், மமக நிர்வாகிகள் உறுப்பினர்களுக்காவும், அனைத்து தமிழ் வலைப்பூ சகோதரர் சகோதரிகளுக்காவும் நாங்கள் நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

உங்களின் சமுதாயப்பணி தொடர வேண்டும், சமுதாய முன்னேற்றத்திற்காக உங்களின் அறவழி போராட்டங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும், அல்லாஹ் அதற்கு துணையிருப்பான்.

அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் வாழ்த்து மரணிக்க செய்வானாக.

மீண்டும் ஒரு மடலில் உங்களிடம் உரையாடுகிறேன்.

தங்களின் உடல் நலனை பேணிக்கொள்ளுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

-தாஜூதீன்

www.tmmk.in

முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!



முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .

இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது



1 - 10 வகுப்பு வரை

தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல் நகல் (xerox)
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
புதுப்பிக்கும் மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்


11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)


தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிอபிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்



தொழிற்படிப்புகள் ( Engineering )



தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்

* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்


விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்


மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் :
http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm



Thanks:

Campus front of India (Tamilnadu)

சனி, 26 ஜூன், 2010

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை திரும்ப பெறுக மமக போராட்ட அறிவிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO6Nx9uLiBakG1fLpFi5kj9IgvWWLg09SnS4rSw5fRANs74xpeSiVjJEDNjXGoPi1KLxYKKakz6Ju-X8sCzLh41K45qXY7hS2aHa-M02ZnfZZTKgD0qJ6w8IDAv4W0isQBOz60SkIyaqM/s320/mmk.JPGhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoa0JE9TBTnNCIbH5iuWDKT_Z_DAdrLl_wzeudC7J-Bo_e3ZAObucOJ8rcVYn-vmD8yYZMcPqGTxl3OczPJDOCiyoeMISEAfa2dID8Yc9UZWShnH46Ho7lLaHe5cFpgWvD-LltEGbHTYuq/s320/kalpakkam-2.jpg
ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை திரும்ப பெறுக மனிதநேய மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு!

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
அன்றாட வாழ்க்கையின் அவசிய தேவையான பெட்ரோல், டீசல், மண்ணெண்னை,சமையல் எரிவாயு விலை உயர்வு வன்மையாக கண்டிக்கத் தக்கது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கினால் அத்தியாவச பண்டங்களின் விலை உயர்வு பன்மடங்கு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடும் விலைவாசி ஏற்றத்தினால் அவதியில் வாடும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் தண்டனை தான் இந்த பெட்ரோல், டீசல், மண்ணென்னை, சமையல் எரிவாயு விலை உயர்வாகும்.

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு உரிமை அளித்திருப்பது அவமானகரமானது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோருகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்த மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து  வரும் 29.06.2010 (செவ்வாய்கிழமை) அன்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெறும். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொள்வார்கள்.
நன்றி-  tmmk .இன்
முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.



--

வியாழன், 24 ஜூன், 2010

மதானி மீதான புதிய வழக்கு! கொதிக்கும் கேரளா!



தமுமுக

Link to maraicoir

Posted: 22 Jun 2010 11:31 PM PDT
'பெங்களூரில் கடந்த 2008&ம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஒரு பெண் இறந்தார். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 26 பேர் மீது பெங்களூர் நகர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது....

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]
Posted: 22 Jun 2010 11:28 PM PDT
போபால் விஷவாயு துயரம் நாட்டை உலுக்கியது. அது குறித்த தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து நாட்டு மக்களின் சோகத்தையும் ஆத்திரத்தையும் பன்மடங்கு அதிகமாக்கியது.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]
Posted: 22 Jun 2010 11:24 PM PDT
வளைகுடா  நாடுக ளில் வேலை செய்யும்  முஸ்லிம்களில்,    கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட அடிமைக ளைப் போல் தான் வாழ்ந்து...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]
Posted: 22 Jun 2010 11:20 PM PDT
ஒரு வெறுப்பில் பிரிந்த இருவர் மீண்டும் இணைவதற்கான விருப்பு ஏற்பட வாய்ப்பே இல்லாமலிருப்பது இந்தியா பாகிஸ்தான் உறவில்தான். மூன்று போர்கள், எல்லைகளில் படை குவிப்பு, தூதரகங்களை மூடிக் கொள்ளுதல்,...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

ஞாயிறு, 20 ஜூன், 2010

தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும் - முஸ்லிம் பெற்றோர் கவன...


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU-km3B7PFkW_KEJ4rhkeP33FCppU5fODLz7HnOh0G2byZ9eqxtAXlNoh1eQBUJN41Z09ZZMAGHRRGxwsej8KT5WFjtpQFgr6_GUj_lmtXNRdydwOQlJC8xbs46VnT-6lYM7Lg4JX2AB9B/s730/not+give+cell+no.JPG

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. 
 
இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
'இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆண்: 24:37)

''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.

7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக  பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு  புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும்  காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.

لا إله إلا انت سبحانك إني كنت من الظالمين
இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி
 <<<< I T D C  AL- KHOBAR >>>>
அல்கோபர் சவூதி அரேபியா

** ** ** ** ** ** ** ** ** **
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!
நீ உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி,
எமது காரியத்தில் நேர்வழியை
எமக்கு எளிதாக்கி தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10

** ** ** ** ** ** ** ** ** **
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
அல் கோபர்-சவூதி அரேபியா

** ** ** ** ** ** ** ** ** **
"T M M K" AL-KHOBAR. K.S.A
        












செவ்வாய், 15 ஜூன், 2010

மீலாது விழாக்களில் கலந்து கொண்ட படங்களைப் போட்டு சிலர் இணையத்தில் விசமத்தனமான



சங்கராச்சாரி மற்றும் ராமகோபாலன் என் சகோதரர்களே- பேரா. அப்துல்லாஹ்
பிரபல பேச்சாளர், ஆராய்ச்சியாளர், உளவியல் கலந்தாலோசகர் பேராசிரியர் அப்துல்லாஹ் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு உலகமெங்கும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பஹ்ரைனிலும் 11,12-06-2010 அன்று இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக வந்திருந்தார். பஹ்ரைன் தமுமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரை கவுரவிக்கும் விதமாக 12.06.2010 அன்று இரவு விருந்து பஹ்ரைன் புளூ மவுண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் அவருக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தமுமுக சகோதரர்கள் பேராசிரியர் அப்துல்லாஹ்விடம் கேட்ட கேள்விகளும் பதிலும் பின்வருமாறு...

சங்கராச்சாரி மற்றும் ராமகோபாலன் என் சகோதரர்களே...

கேள்வி : சமீபத்தில் நீங்கள் மீலாது விழாக்களில் கலந்து கொண்ட படங்களைப் போட்டு சிலர் இணையத்தில் விசமத்தனமான பிரச்சாரங்கள் செய்கிறார்களே?
(அப்துர் ரவூப்)


பதில் : நான் மீலாது விழாவிற்கு போனது உண்மைதான். ஆனால் ஏன் போய் கலந்து கொண்டேன் என்பதை யாரும் எழுத மாட்டேன் என்கிறார்கள். இவ்வாறு மீலாது விழா கொண்டாடுவது தவறு என்று சொல்வதற்காக போனேன். இது இஸ்லாத்தில் இல்லை என்று சொல்ல போனேன். அதையே சொன்னேன். ஆனால் வெறும் படத்தை மட்டும் போட்டுவிட்டு நான் சொன்னதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் இஸ்டத்திற்கு ஏதேதோ எழுதுகிறார்கள்.

கேள்வி : நீங்கள் பெரியார்தாசனாக இருந்த போது எதிர் முனையில் சங்கராச்சாரி மற்றும் ராமகோபாலன் இருந்தனர். இப்போறு அப்துல்லாஹ் என்று ஆன பிறகும் அவர்கள் எதிர்ப்பு இன்னும் அதிகமாக இருக்குமே?
(அப்துல் காதர்)


பதில் : ஆம் நீங்கள் சொல்வது சரிதான். முன்பு நான் அவர்களை எதிரிகளாக பார்த்தேன். இப்போது அவர்களை சகோதரர்களாக பார்க்கிறேன். இஸ்லாம் எனக்கு அதைத்தான் சொல்லித் தந்திருக்கிறது. அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரு தாய் பிள்ளைகள். எனவே அவர்களும் என் சகோதரர்களே. வயலின் வாசித்தால் மழைவரும் என்று நம்பி வயலின் வசிக்க சென்ற வித்வான் குடை கொண்டு செல்லவில்லை. உண்மையில் நம்பிக்கையிருந்தால் குடை கொண்டு சென்றிருப்பார் என்று ஒரு கதை சொல்வார்கள். அதே போல் அவர்கள் விவாதத்திற்கு அழைத்தால் தொப்பியோடு சென்று அவர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வர நான் தயார். ஆனால் அவர்கள் பூனூலுடனும், துன்னூருடனும் அவர்கள் வர மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் வரவே மாட்டார்கள்.

கேள்வி : இனி படங்களில் நடிப்பீர்களா?

(அப்துல் முனாப்)


பதில் : கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அவர்கள் கூப்பிடவும் மாட்டார்கள். அவர்கள் கூப்பிட வரதாக வகையில் பேட்டி கொடுத்தேன். என் மனைவியின் தோலில் வேரொருவன் கை போட்டு நடிப்பதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதே போல் வேரொருவன் மனைவியின் அருகில் நின்று நடிப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இஸ்லாம் அதை விரும்பவும் இல்லை.

கேள்வி : பெரியார்தாசனாக இருந்த போது உங்களை பார்த்த இஸ்லாமிய சமுதாயம் இப்போது எப்படி பார்க்கிறதாக உணர்கிறீர்கள்?
(மன்னை அலி)


பதில் : உண்மையைச் சொல்லப் போனால் இஸ்லாமிய சமுதாயம் பல குழுக்கலாக பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி பார்க்கிறார்கள். இவர் நம்ம ஆளா? இவர் அவங்க ஆளா? என்று. இன்னும் சொல்லாப் போனால் என்னை திட்டுவதற்காக இரண்டு ஜமாஅத் பத்திரிகையே நடத்துகிறது. அவர் இது செய்கிறார் இது தவறு, அது தவறு என்று. நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக குர்ஆனை ஆரய்ச்சி செய்து இது இறைவனிடமிருந்து தான் வந்திருக்கிறது என்று நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றிருக்கிறேன். இன்னும் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆர்வம் இருந்தால் சொல்லித் தாருங்கள் கற்றுக் கொள்கிறேன். அதைவிட்டுவிட்டு புளுதி வாரி தூற்றாதீர்கள். மனம் வலிக்கிறது. அதையும் மீறி சிண்டினால் அகில உலக தவ்ஹீத் ஜமாஅத் என்று ஒன்றை இந்த பஹ்ரைனில் இருந்து ஆரம்பித்துவிடுவேன்.

கேள்வி : நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தபிறகு உங்கள் உறவினர்கள் மற்றும் திராவிடர் கழகத்தினரின் நிலை எப்படி இருந்தது?
(டாக்டர் ஜெஹபர் அலி)


பதில் : உறவினர்கள் எல்லோரும் கேட்பது போலவே இப்படி பன்னிட்டிங்களே என்பது போல பேசினார்கள். அவர்களிடம் இன்னும் எனது விளக்கத்தை சொல்லி வருகிறேன். குறிப்பாக மனைவிடம் உள்ளதை சொல்கிறேன். நீங்கள் மாறினால் நானும் மாறனுமா? நான் மாற மாட்டேன் என்றார்கள். நான் அவர்களிடம் சொன்னேன் மறுமை என்று ஒன்று உள்ளது அதிலும் நீங்கள் என் மனைவியாக வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதற்கு மேல் உங்கள் இஸ்டம் என்று சொன்னேன். உடனே கலிமா சொல்லி விட்டார்கள். மேலும் நான் இஸ்லாத்திற்கு வந்தபிறகு கோவையில் ஒரு மீட்டிங்கிற்கு சொன்றேன். அந்த மீட்டிங்கில் என்னை அடிக்க வேண்டும் வெட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத்தினர் பெரும் கோபத்துடன் வந்தனர். சுமார் 2.30 மணி நேரம் நான் பேசினேன். அதே மேடையில் 20 பேர் இஸ்லாத்தை ஏற்றனர். (அல்ஹம்துலில்லாஹ்)-என்றவர் கோவை பேச்சு அடங்கிய குறுந்தகட்டினை பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ. ‍முஹைதீன் ஷா அவர்களிடம் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ. ‍முஹைதீன் ஷா, அமைப்பாளர் முஹம்மது யூசுப், செயலாளர் ஜக்கரிய்யா, செயலாளர் டாக்டர் ‍ஜெஹபர் அலி. பொருளாளர் தமீம் அன்சாரி, தஃவா பொருப்பாளர் அப்துல் ரவூப் மற்றும் மன்னை அலி, ஆஷிக், பாருக், ஹபிப், அப்துல்காதர், சலிம், அப்துல்சமத், ஹாஜாமைதீன் நிர்வாகிகள் உள்ளிட்ட தமுமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
www.tmmk.in



______________________________________________________________________________________________

அவசியம் பாருங்கள்:
www.tmmk.in
www.tmmk-ksa.com
______________________________________________________________________________________________

--
~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.
தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!

இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



--
www.keelakaraianjal.tk

www.saharatamil.tk

www.kpmtmmk.tk

www.tmmkdubai.tk

www.valumkalai.blogspot.com

திங்கள், 14 ஜூன், 2010

ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்த கொடும் செயல் தமுமுக கடும் கண்டனம்

தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப் பட்டது.

நல்வாய்ப்பாக மலைக்கோட்டை விரைவு தொடர்வண்டி மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பல தொடர்வண்டிகள் விபத்திலிருந்து தப்பின.

அப்பாவி மக்களின் உயிர்களைக் குடிக்க திட்டமிட்ட சதிகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டனத்துக் குரியவர்களே. அப்பாவி மக்களின் உயிரை துச்சமாக மதித்து செயல்படுவர்களை கண்டுபிடித்து சரியான தண்டனை வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

உண்மையான சதிகாரர்கள் அவர்களின் பிண்ணனி குறித்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

சமீபகாலமாக தமிழ்நாட்டிற்கு வெளியே தொடர்வண்டிகள், தண்டவாளங்கள் மீதான தாக்குதல்களும் அப்பாவிகளின் உயிருக்கு உலை வைக்கப்படும் செய்திகள் அனைவரையும் கலங்க வைப்பதாக உள்ளது. இந்நிலை தமிழகத்திலும் தொடர மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. சதியும் சதிகாரர்களும் சாய்க்கப்பட அரசுகள் முழு முனைப்பு காட்ட வேண்டும்.

சனி, 12 ஜூன், 2010

புதன், 9 ஜூன், 2010

கூகிளிடமிருந்து மேலும் இரண்டு சேவைகள்

கூகிள் மெப்ஸ்(google maps), கூகிள் பஸ்(google buzz), ஜிமைல்(gmail) என்பவற்றின் கலவையாகவே இந்த புதிய சேவை அமைந்துள்ளது.
நமது நண்பர்களின் ஊரையோ அல்லது அவர்களின் வீட்டுக்கு செல்லும் பாதையையோ அல்லது அவர்களின் வீட்டையோ தேடி அலைய வேண்டிய சிரமத்தை கூகிள் மெப்ஸ்(maps) நமக்கு போக்கியது. தற்போது குறித்த ஒரு அமைவிடத்தை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையை கூகிள் இலகுவாக்கித்தந்துள்ளது.
முன்பெல்லாம் ஒரு இடத்தை கூகிள் மெப்ஸ்(maps) மூலம் நமது நண்பர்களுக்கு காட்ட வேண்டுமானால், அந்த மெப் ன் லின்க்கினை(link) எடுத்து மைல்(mail) பண்ணுவோம்.அந்த லின்கினை கிளிக்(click) செய்து அந்த இடத்தை பார்க்கக் கூடியதாக இருந்தது ஆனால் தற்போது எமது inbox ல் வைத்தே பார்க்க கூடியதாக இருக்கும். இதனை செயற்படுத்த gmail setting ற்கு சென்று Labs என்பதை க்ளிக் செய்து Google Maps previews in mail என்பதை enable செய்து save பண்ணிக்கொள்ளவும்.
அடுத்தது google buzz ல் மெப்ஸ் இனை சேர்த்துக்கொள்ளல். நீங்கள் பகிரப்போகும் மெப்ஸன் லின்கினை எடுத்து paste செய்து கொண்டால் போதும். google maps இனி google buzz இலும் தெரியும்.


www.tamilsaral.com

செவ்வாய், 8 ஜூன், 2010

வழக்கறிஞராக வேண்டுமா?


சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், மனித உரிமைகளைக் காத்திடவும் துடிப்புள்ள வழக்கறிஞராக ஆசையா?உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது.சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனையும், தகுதியுள்ள ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமும்  வழங்கப் படும்.
காஞ்சி மு. ஜைனுல் ஆபிதீன். M.A.,B.L
(மாநில மாணவரணி செயலாளர் தமுமுக)
செல் - 99942 92932






திங்கள், 7 ஜூன், 2010

சத்தியமங்களத்தில் 83வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தில் தமுமுகவின் சார்பில் 83&வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த மே 29 அன்று நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.
மமக துணை பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் கோவை உமர், தலைமைக் கழக பேச்சாளர் கோவை ஜாஹிர் ஆகியோர் உரையாற்றினர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்