ஏழைச் சகோதரிக்கு உதவிடுவீர்!‏ ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஏழைச் சகோதரிக்கு உதவிடுவீர்!‏

 
அன்புச் சகோதர, சகோதரிகளுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
 
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தாலுக்கா, தியாகதுருகம் நகரத்தை சார்ந்த தாஹிரா என்ற சகோதரி (பூர்வீகம் கேரளம்) குவைத்தில் குறைந்த சம்பளத்தில் வீட்டு வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் சூழலில் அவருடைய கணவர் அக்பர் அலி அவரை நிர்க்கதியாக தவிக்க விட்டு பல வருடங்களுக்கு முன்பே ஓடி விட்டார்.
 
ஒரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் நிக்காஹ் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார். மாப்பிள்ளை வீட்டார் வரதட்சனை எதுவும் கேட்கா விட்டாலும், பெற்ற மகளுக்கு தன் சார்பாக ஏதாவது போட்டு அனுப்ப வேண்டும் என்ற தாய்ப்பாசத்தில் சமுதாய மக்களிடம் இக்கோரிக்கையை எடுத்து வைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
 
குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் பொருளாளர் ஜனாப் ஜி. கவுஸ் அலீ அவர்கள் இந்த சகோதரியின் நிலைமையை நேரில் விசாரித்து உதவி செய்வதற்கு தகுதியான நபர்தான் இவர் என்றும் கூறியுள்ளதால் இந்த புனித மிகு ரமழான் மாதத்தில் நம்மால் இயன்றளவு இந்த சகோதரிக்கு உதவிகள் செய்து வல்ல அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் பெற்றுக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
சகோதரி தாஹிரா அவர்கள் தன் கைப்பட தமிழிலும், மலையாளத்திலும் எழுதிய கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
 
சகோதரி தாஹிரா: (+965) 55476330
ஜனாப் ஜி. கவுஸ் அலீ : (+965) 97240283
 
சகோதரி தாஹிரா அவர்களின் வங்கி கணக்கு விபரங்கள்:
 
THAHIRA AKBAR ALI,
NRE A/C # 11494,
I.O.B.,
THIYAGA DURGAM (Post),
PINCODE - 606206
KALLKURICHI Taluk,
VILLUPPURAM Dist.
TAMILNADU.

குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்