இலங்கை விமானப்படை வீரர்களுக்கான பயிற்சியைக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 5 ஜூலை, 2012

இலங்கை விமானப்படை வீரர்களுக்கான பயிற்சியைக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcS1ETkipn_lL7cEtI8hL2qwDY7gzAMfHmks-v4CG9LsdASNF-jWமனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் கண்டன அறிக்கை:



இலங்கை விமானப்படை வீரர்களுக்கு இந்திய அரசு தமிழகத்தில் பயிற்சி அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்செய்தி உண்மையாக இருப்பின், இப்பயிற்சியை உடனடியாக இந்திய அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த பாசிச அரசாங்கம் தொடர்ந்து அதே கொள்கையில் உறுதியாக இருக்கும் நிலையில் அவர்களின் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதும், உதவுவதும் உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானதாகும்.

எதற்கெடுத்தாலும் சீனாவைக் காரணம் காட்டி இந்திய அரசு இலங்கைக்கு உதவுவது என்பது ராஜதந்திரமல்ல. இந்திய அரசின் தெளிவற்ற வெளியுறவுத்துறை கொள்கைகளால் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை தொடர்ந்து நசுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

தமிழக மக்களின் உணர்வுகளை இந்திய அரசு புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என வேண்டுகிறோம்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்