தலைநகரில் தொடர்ந்து நடைபெறும் அவலங்கள்: பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் டெல்லி. ~ சஹாரா தமிழ்

ads

சனி, 2 மார்ச், 2013

தலைநகரில் தொடர்ந்து நடைபெறும் அவலங்கள்: பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் டெல்லி.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRvo30PdlSp1XAjD5tWqwZYfnwubUjbqMkzdThtCqsyqfqTKzUB

புதுதில்லி,மார்ச்2: டெல்லியில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய அவலங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

தலைநகர் டெல்லி பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பற்ற நகரமாக மாறிவருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை இங்கு நிகழ்திருக்கிறது.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் மோங்கோல்புரியில் மாநகராட்சி பள்ளி வளாகம் ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்திருக்கின்றனர். இது குறித்து கூறிய போலீசார், பள்ளியின் 2 ஆசிரியர்கள், வாட்ச்மேன் மற்றும் ஆண் பணியாளர்கள் அனைவரிடமும் விசாரண மேற்கொண்டனர், விசாரணைக்கு பின் 2 ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் காவலாளி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்