இலங்கை துணைத் தூதரகம் முன் கருப்புக் கொடி போராட்டம்: மக்கள் நல்வாழ்வு இயக்கம் அறிவிப்பு: மமக ஆதரவு ~ சஹாரா தமிழ்

ads

சனி, 2 மார்ச், 2013

இலங்கை துணைத் தூதரகம் முன் கருப்புக் கொடி போராட்டம்: மக்கள் நல்வாழ்வு இயக்கம் அறிவிப்பு: மமக ஆதரவு

https://lh4.googleusercontent.com/-GWySVLFJ3nc/UTHQSuFitbI/AAAAAAAAUFg/qPGufEp8RQI/s640/2013-03-02

மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்றவுள்ள கூட்டத்தில் கண்டன தீர்மானம் கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதற்கு ஆதரவாக ஜெனிவாவில் எதிர்வரும் 4.03.2013 அன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் சார்பாக ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும், அந்நாளை தமிழகத்தில் ஈழத்தோழமை நாள் என அறிவித்து தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதேநாளில் சென்னையில் இலங்கை துணைத் துôதரகம் முன் கருப்புக்கொடி போராட்டம் நடைப்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, நல்லக்கண்ணு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ நெடுமாறன், கொளத்துôர் மணி, பண்ருட்டி வேல்முருகன் கவிஞர் புலமைப்பித்தன் மற்றும் இயக்குநர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்