பூச்சி கத்திரிக்காயா... சந்தோஷப்படுங்கள்! ~ சஹாரா தமிழ்

ads

புதன், 30 ஜூலை, 2014

பூச்சி கத்திரிக்காயா... சந்தோஷப்படுங்கள்!



கத்திரிக்காயில் பூச்சி இருந்தால் சந்தோஷப்படுங்கள். ஆம், நீங்கள் வாங்கிய 1 கிலோ கத்திரிக்காயில் ஒன்றிரண்டு பூச்சி கத்திரிக்காய்களும் சேர்ந்தே வரக்கூடும். அப்படி பூச்சி இருந்தால், அந்த கத்திரிக்காய் 100% இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்பது உறுதியாகிவிட்டது என நிச்சயமாக நீங்கள் சந்தோஷப்படலாம். ஆம், மனிதர்களைவிட புழு, பூச்சிகளுக்கு சுவையுணர்வு அதிகம். அவை ஒரு காயைத் தேர்ந்தெடுத்து சுவைக்கின்றன என்றால்... நிச்சயமாக அது 100% இயற்கையாகவும், சுவையாகவும் இருக்கும். பூச்சிகள் சாப்பிடுவதை வைத்தே, இந்தக்காய் விளைந்த தோட்டத்தில் பூச்சிக்கொல்லி விஷம் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ரசாயனத்தில் விளைந்த காய்கள், பழங்கள் என்றால் சீக்கிரமே அழுகிவிடும். அதேசமயம், இயற்கையில் விளைந்த காய் மற்றும் பழங்கள் என்றால், மெள்ள தோல் சுருங்கும். இதை வைத்தும் நீங்கள் கண்டறியலாம்.

Source- Vikatan EMagazine

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்