மத்திய அமைச்சர் மீது செங்கல் வீசி தாக்குதல்... ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 20 அக்டோபர், 2016

மத்திய அமைச்சர் மீது செங்கல் வீசி தாக்குதல்...

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கல் வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய கனரகத் தொழிற்சாலை கள் மற்றும் பொதுத் துறை நிறு வனங்கள் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ. இவர் மேற்குவங்க மாநிலம் அசன்சால் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து தனது கட்சியினரை விடுவிப்பதற்காக தொண்டர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, வழியில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அசன்சாலில் திரிணமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர் மலய் கடாக்கின் வீட்டின் அருகே, அமைச்சரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதில், அமைச்சரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. அமைச்சரை நோக்கி திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கற்கள் உள்ளிட்டவற்றை வீசி தாக்கினர். இதில் அமைச்சர் காயமடைந்ததாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, இரு கட்சிகளையும் சேர்ந்த 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, துர்காபூர்-அசன்சால் போலீஸ் கமிஷனர் எல்.என்.மீனா தெரி வித்தார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்