சஹாரா தமிழ்: Islam

ads

Islam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Islam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜனவரி, 2016

ஷைத்தானால் உருவாக்கப்படும் சிலையும் சிலை சார்ந்த கலாச்சாரமும்

காலங்கள் தோறும் ஷைத்தானால் உருவாக்கப்படும் இந்த அடையாளங்களில் தலையானது சிலையும் சிலை சார்ந்த கலாச்சாரமும்.
                                                                   அல் குர் ஆனும் இதை ஒப்புக் கொள்ளும்...رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ ۖ என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டிலாழ்த்திவிட்டன;(அல்குர்ஆன் : 14:36)
                                                                    சிலையையும் சிலை சார்ந்த வாழ்க்கை கலையையும் ஒழிக்காமல்,ஒழிக்க எண்ணாமல் ஷிர்க்கை ஒழிக்க இயலாது.ஷிர்க்கை ஒழிக்க முடியாது.
                                                                    சிலை என்பது கல்லிலான, மரத்திலான,விலை மதிப்பற்ற பொருளிலான வெறும் உருவமோ வடிவமோ அல்ல!
                                                                    மாறாக மனித உள்ளங்களை தனது தங்குமிடமாக்கிக் கொண்ட ஷைத்தானிய உணர்வு,ஊக்கம்,உற்சாகம் என எல்லாம் அதில் அடங்கும்.
ِ                                                                    ۗ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ شُرَكَاءَ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ.......அல்லாஹ்வையன்றி மற்றவைகளையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்(என்பதை நீர் அறிவீரா)? வீணான  எண்ணங்களை கற்பனைகளையன்றி வேறெதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை; மேலும் அவர்கள் வெறும் கற்பனையில் மூழ்கி கிடப்பவர்கள்!(அல்குர்ஆன் : 10:66)
                                                                   சிலையும் சிலை சார்ந்த வாழ்க்கை கலையும் கோணலானது,கொள்கையற்றது.எந்தக் கட்டுப்பாடுகளையும் ஒப்புக் கொள்வதில்லை.இலக்குடன் கூடிய வாழ்க்கை சிந்தனையை செயல் முறையை ஏற்றுக் கொள்வதில்லை.
                                                                  தான் என்ற தனித்துவத்தை அகம்பாவத்தை அடிப்படையாகக் கொண்டது.அதை அடைவதற்கு தடையாகக் கருதும் எதையும் அழிக்க தயங்காது.பிற மனிதர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் அவமதிக்கும்.கண்ணியத்தைக் சீர் குலைக்கும்.ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றை உதறித்தள்ளி  உதாசீனப்படுத்தும்.மொத்தத்தில் சிலைக்கும் ஷிர்க்கிற்கும் சிலை கலாச்சாரத்திற்கும் உலகமும் உலக ஆசையும் உடல் இச்சையும் தான் அஸ்திவாரம்.

ஆக்கம்: கீழை SMB

நபிகள் நாயகம் வேரறுத்த ஷிர்கும்..நாம் சொல்ல மறந்த ஷிர்கும்!

நபி صلي الله عليه و سلم வேரறுத்த ஷிர்கும்..நாம் சொல்ல மறந்த ஷிர்கும்!
                                                                                                                                                 நபி வழி நம் வழி என வாழும் நாம்...நபி வழியில் எந்த ஒரு சிறு குறையும் ஏற்ப்பட்டு விடக் கூடாது எனக் கருதும் நாம்...நபி வழிக்காக நம் வாழ்வை அர்ப்பணிக்கவும் தயாராகவுள்ள நாம்...சிறப்பிற்குரியவர்கள்...  படைத்த இறைவனின் அருளுக்குரியவர்கள்...
                                                                         وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம்.(அல்குர்ஆன் : 3:132)அல்லாஹுவின் வாக்கு உண்மையானது!
                                                                       நபி வழி என்பது சடங்கல்ல,சம்பிராதய முறையல்ல.
    நபி வழியில் தெளஹீதும் தொழுகையும் இரு வேறுக் கூறுகள் அல்ல.
       தெளஹீதின் ஒளியை மக்காவில் தொடங்கிய நபி صلي الله عليه و سلم ஐ அப்படியே பின்பற்றுவது தான் நபி வழி.
                                                                      இதில் மாற்றுக் கருத்துடையோருக்கும்,மாறி சிந்திப்போருக்கும் நமக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லை.நபி வழியில் எந்த சூழலிலும்  சமரசமில்லை!
                                                                      ஷிர்க் என்பது சிலந்தி வலை....!வலை தானே என எண்ணி தன்னை பாதுகாக்க ஓய்வெடுக்க தஞ்சம் தேடிப் போகும் எல்லா உயிர்களையும் உறிஞ்சி சக்கையாக்கி விடும்.
                                                                    ஷிர்க்கிற்கு என்று எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளமும் கிடையாது.
                                                                    அல்லாஹுவைப் புறக்கணித்து விட்டு ஷைத்தானுக்கு கட்டுப்படும் எல்லாம் ஷிர்க்கின் வகைகள் தான்..
                                                                    அல் குர் ஆன் கூறும்..يَا أَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطَانَ ۖ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلرَّحْمَٰنِ عَصِيًّا என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; திண்ணமாக, ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான்.(அல்குர்ஆன் : 19:44)

ஆக்கம் : கீழை எஸ்.எம்.பி

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்