சுதந்திர தினமும் இந்திய முஸ்லிம்களும் ~ சஹாரா தமிழ்

ads

புதன், 19 ஆகஸ்ட், 2009

சுதந்திர தினமும் இந்திய முஸ்லிம்களும்

சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 என்றாலே முஸ்லிம்களுக்கு கவலைக்குரிய நாளாகும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உக்கிரமாக போரிட்டு சுதந்திரம் பெற்றுத் தந்த முஸ்லிம்களின் நாட்டுப் பற்றை கொச்சைப் படுத்தும் விதமாக இந்திய அரசு இயந்திரம் நடந்து கொள்வது தான் இந்த துக்கத்திற்க காரணம்.

சுதந்திர தினம் வந்து விட்டாலே, சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க சதி, இந்தியத் தலைவர்களை கொல்ல லஸ்கரே தய்யிபா சதித்திட்டம் போன்ற செய்திகள் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சியிலும் வெளிவரும். ஆங்காங்கே முன்னெச்சரிக்கை கைது என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்று முஸ்லிம்களை சுட்டுக் கொல்வார்கள், இரண்டு மூன்று முஸ்லிம் இளைஞர்களை பிடித்து அரபாத் ஸ்டைல் துண்டை முகத்தில் மூடி வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் முஸ்லிம் தீவிரவாதிகள் பிடிபட்டனர் என்று போலீஸ் செய்திகளை தருவார்கள். அதனால் சுதந்திர தினம் என்பது முஸ்லிம்களுக்கு கவலைக்குரிய நாளாகும்.



உண்மையில் இந்த வருடம் கவலைக்குரியதாக இருக்கவில்லை, அப்படிப்பட்ட கைதுகள் எதுவும் நடக்க வில்லை. ஆனால் வழக்கம் போல போலீஸ் பீதியை கிளப்பினார்கள், ஸ்வைன் ஃபுளூ என்ற நோயால் இந்தியா பாதிக்கப்பட்டு கவனம் எல்லாம் இதன் பக்கம் இருந்ததால் போலீஸின் பீதியை கிளப்பும் முயற்சி எடுபட வில்லை.

சங்பரிவார அமைப்பினர் வெடிகுண்டுகளை வைத்து விட்டு, அந்தப் பழியை முஸ்லிம்களின் மீது போடுவது வழக்கம். அதற்கு போலீஸில் இருக்கும் சில கருப்பாடுகள் உறுதுணையாக இருப்பார்கள். இந்த நிலை காந்தியை கொல்வதற்கு முன்பிலிருந்து இன்று வரை இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த வருடம் 2009 சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் 14.08.2009 அன்று பைப் வெடிகுண்டு வைத்திருந்ததற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். சிபிசிஐடி என்ற மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

திருப்பூர் எம்எஸ் நகரில் பைப் வெடிகுண்டுகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த சரவணன் (27), உடுமலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சரவணன் பாம்பைக்கு அடிக்கடி சென்று வரும் வழக்கம் உள்ளவர், அவர் பாம்பேகாரியை திருமணம் செய்துள்ளார். அதனால் தீவிரவாதிகளுடன் குறிப்பாக இந்துத்துவ பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேம் வழுக்கிறது.

கைபர் போலன் கணவாய் வழியாக படையெடுத்து வந்து இந்திய பூர்வீக குடிகளான திராவிட இனத்தவர்களை அடிமைகளாக ஆக்கி அராஜகம் செய்த உயர் சாதியினருக்கா இந்திய சுதந்திரத்தின் மீது அக்கரை இருக்கப் போகிறது?

இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களுடன் முஸ்லிம்களும் மற்றவர்களும் போராடி உயிர் தியாகங்களை செய்து கொண்டிருந்த போது ஆங்கிலேயருக்கு கூஜா தூக்கி போராட்ட தியாகிகளை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்து உயர் பதவிகளை பெற்று சுகம் அனுபவித்துக் கொண்டிருந்த மேல் சாதியினருக்கா இந்திய சுதந்திரத்தின் மீது அக்கரை இருக்கப் போகிறது?

அவர்களுக்கு தான் வெடி குண்டுகளை வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது, பழியை முஸ்லிம்களின் மீது போட வேண்டும் என்பதற்காக.

மாலேகான் குண்டு வெடிப்பில் பிரங்யாவுக்கும் ஸ்ரீகாந்த் புரோகிதுக்கும் தொடர்பு இருக்கும் போது, அவர்கள் இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்கள் என்று இருக்கும் போது, இந்துத்துவ பயங்கரவாதிகள் சுதந்திர தினத்தின் போது தற்காப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அப்போது தான் வெடிகுண்டு விபத்துக்களிலிருந்து இந்தியாவை இந்திய தலைவர்களை காப்பாற்ற முடியும். எப்படிப்பட்ட நோய் என்பதை சரியான முறையில் கண்டு பிடிக்காமல் அதற்க்கான சிகிச்சையை செய்யாமல் இந்தியாவை பிடித்திருக்கும் நோயை குணப்படுத்த முடியாது.

நன்றி:tmmk-ksa.com

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்