அனைவருக்கும் இனிய வாழ்வு மலரட்டும்! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 9 செப்டம்பர், 2010

அனைவருக்கும் இனிய வாழ்வு மலரட்டும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

http://1.bp.blogspot.com/_Gpkn-EjjSxY/TAftL27slmI/AAAAAAAAAAU/coX-xot9HFs/s400/TMMK(2)%5B1%5D.JPG

                                              https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeVOlWhKd3AJAhzXFh8__QpsabyhnlGtKEUU7nmm2BBWEu-esjcpjeQfaovak7uKuWBO1dF4aBQtbJIaYwiu1JTOHVORhxIk3AzqlG_hE4N3tSBKX8S-kVEd492bUjFDmBx1i3SXVkhWui/s320/jawahirullah.jpg
தமுமுகவின் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை குறிப்பிட்டிருப்பதாவது:

புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

ஏக இறைவனை வணங்கி வாழ்வதும், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும் எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் ஆகும்.

ஈத்துவக்கும் இன்பம் அறியாரிகொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் என்பார் வள்ளுவர். பிறருக்கு கொடுத்து உதவுவதால் வரும் இன்பத்தை அறியாத வன்நெஞ்சர்கள்தான் தங்கள் செல்வங்களை தாமே வைத்திருந்து பிறகு அதை இழந்து செல்வார்கள் என்பது இதன் பொருளாகும்.
‘‘மாபெரும் உஹது மலை அளவு செல்வம் என்னிடம் தரப்பட்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் அதை வைத்திருக்க மாட்டேன், ஏழை எளியோருக்கு தர்மம் செய்து விடுவேன்’’ என்று கூறிய நபிகள் நாயகம் தனது செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிவிட்டு இறுதிவரை எளிமை வாழ்வையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

பல லட்சம் டன் உணவு தானியங்கள் அரசு கிடங்குகளில் புழுத்து வீணாவது ஒருபுறம், பல கோடி மக்கள் வறுமை யிலும், பசியிலும் உழல்வது மறுபுறம் என உள்ள நம்நாட்டு சூழ்நிலை ஈகையின் அவசியத்தை உணர்த்துகின்றது. தனி நபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்திற்கும் ஈகை பண்பு இருந் தாக வேண்டிய அவசியத்தை நாட்டின் நிலைமை வலியுறுத்துகிறது.

நாட்டு மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டு வளமான, நலமான, இணக்கமான வாழ்வை இனிதே வாழ்ந்திட, மகிழ்ச்சி பூக்கள் வாழ்வில் மலர்ந்திட ஈகை பெருநாளில் இதயங்கனிந்து வாழ்த்துகிறோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

அன்புடன்,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்