ஐஸ்கீரிம் ஃப்ரீஸர்களில் பிஞ்சு குழந்தைகள்! அவலநிலையின் உச்சக்கட்டம் ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஐஸ்கீரிம் ஃப்ரீஸர்களில் பிஞ்சு குழந்தைகள்! அவலநிலையின் உச்சக்கட்டம்



காஸாவில் பலியான குழந்தைகளின் சடலங்களை ஐஸ்கீரிம் ப்ரீஸ்ரில் பாதுகாக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் கடந்த பல தினங்களாக இஸ்ரேல் இராணுவ படைகள் , காஸாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதில் இதுவரை 1800 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.அதில் 296 குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலியப் படைகள், தாக்குதலில் பலியானவர்களை அடக்கம் செய்ய கூட இடைவெளி அளிக்காமல், தொடர்ந்து தங்களது வெறியாட்டத்தை நிகழ்த்துவதால், பலியான பிஞ்சு குழந்தைகளின் சடலங்கள் அழுகிப் போகாமல் இருக்க, அவற்றை ‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸர்’களில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த அவல காட்சிகள் நிறைந்த புகைப்படங்களை காஸாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.


Source- muslimummaath fb
#MuhammedHaris

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்