அவசரம்.... அவசியம்...‏ தேவாரம் ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானா ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 14 ஜூலை, 2015

அவசரம்.... அவசியம்...‏ தேவாரம் ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானா




அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு,
சென்ற 8.7.2015 அன்று தேவாரம்  "ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானா"விற்கு சோதனைக்காக  வருகை தந்த தமிழக அரசு அதிகாரிகள், தற்போது தங்கி இருக்கும் அந்த இடத்தை பார்த்துவிட்டு, "இவ்வளவு சிறிய இடத்தில் தங்க வைத்துள்ளீர்கள். இதற்கு அனுமதி அளிக்க இயலாது. இன்னும் 2 மாதத்திற்குள் வேறுகட்டிடத்திற்கு மாற்றிவிடணும்".
- என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு எத்தீம்கானாவின் பொறுப்பாளி சகோதரி ரெஜினா ஃபாத்திமா அவர்கள் " இறைவன் அருளால், கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கிறோம். 2 மாதத்திற்குள் கட்டி முடிக்க முடியாது. எங்களிடம் அதற்குண்டான பண வசதி இல்லை. இறைவன் அருளால் எங்களின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் நண்கொடைகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 6 மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்" - என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு அந்த பெண் அதிகாரி 6 மாதங்கள் கொடுக்க முடியாது. உயர் அதிகாரியிடம் 4 மாதங்கள் தரச்சொல்கிறேன்". என்று சொல்லிவிட்டு, 2 மாதங்களுக்குள் கட்டி முடிக்கணும்" என்று சொல்லிவிட்டு
சென்றுள்ளார்.

( இதற்கு உள்அர்த்தம் என்னவென்றால் " 2 மாதங்களுக்குள் கட்டி முடிக்காவிட்டால், எத்தீம்கானாவை பூட்டி சீல் வைத்துவிட்டு, குழந்தைகளை அரசாங்க அநாதை இல்லத்திற்கு அழைத்து சென்று விடுவோம்" என்பதுதான். அரசாங்க அநாதை இல்லதிற்கு அழைத்து சென்று விட்டால், அங்கு தொழுகை, நோம்பு, குர்ஆன்-தீனியாத் வகுப்புகள் கிடையாது. மாற்று மதத்தினவர்களுடன் சேர்ந்து, அவர்களைப்போன்று
வளர வேண்டியதுதான் ).

இத்தனை காலமும் கட்டிக்காத்த இந்த எத்தீம்கானாவும் பிள்ளைகளும்  நம்மை விட்டுப்போய்விடுவார்களோ என கவலைப்பட்டு சகோதரி அவர்களும் அங்குள்ள பிள்ளைகளும் பயந்து அழுதுகொண்டிருக்கிறார்கள்.
(இவர்களின் பயத்திற்கு முக்கிய காரணம்: இப்போதுள்ள அரசாங்க சூழ்நிலை, நீங்கள் அறிந்ததுதான்).

"கருணையாளன் அல்லாஹ் தன் திருமறையில் 65:..2, 3.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
 وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ‏ ...
  وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏ 

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.

அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ,
அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் -
திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.

என்று கூறுவதுபோல், பல பிரச்சினைகளிலிருந்து அல்லாஹ்வை மட்டுமே நம்பி ஒன்றுமே இல்லாமல் வெளி வந்த எங்களுக்கு, இத்தனையையும் தந்த அல்லாஹ் இனிமேலும் தருவான்" என நம்பி துஆ செய்தவர்களாக உங்களின்
அண்பான ஆதரவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே அண்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே,
இந்த நமது உடன் பிறவா சகோதரிகளின் பயத்தையும் கஷ்ட்டங்களையும் கவலைகளையும் நீக்குவது நமது கடமை.

யார் யாரெல்லாம் இன்னும் உங்களின் பங்கினை அனுப்பவில்லையோ, தயவு கூர்ந்து அல்லாஹ்வுக்காக கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

RAHMATH PENGAL NALA ETHEEMKANA MATHARSA (TRUST)
CURRENT A/C No.1094201000224,    IFSC Code: CNRB0001094 (Used for RTGS and NEFT transactions)
CANARA BANK - THEVARAM BRANCH.

ADDRESS: 22/11, WARD, NEAR JUMMA MASJID, THEVARAM 625530 THENI DISTRICT, TAMILNADU, INDIA.

PH: +91 4554 254427, Mobile: +91 9787522735   Email: rahmathpengalnalatvm@gmail.com

(அல்லது உங்கள் வீட்டிற்கு அனுப்பி, மேற்கண்ட பேங்க் கணக்குகளுக்கு அனுப்ப சொல்லுங்கள்.அதுதான் சிறந்தது. 80G சர்டிபிகேட் இன்னும் அவர்களுக்கு வரவில்லை).

தயவுசெய்து இதை உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி, உதவி செய்யச்சொல்லுங்கள்.

கருணையாளன் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும், நீண்ட ஆயுளையும் தந்து பறக்கத்தும் ரஹ்மத்தும் செய்வானாக.

தயவு கூர்ந்து அல்லாஹுக்காக உதவி செய்யுங்கள்... அல்லாஹுத்தஆலா உங்களுக்கு உதவி செய்வான்.

அன்புடன்,
அல்ஹாஜ் M.A. முஹம்மது இர்பான் (61+), சென்னை. +919884769666
gemsappairfan@gmail.com

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்