விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விருதுகள் அறிவிப்பு... ~ சஹாரா தமிழ்

ads

சனி, 4 ஏப்ரல், 2015

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விருதுகள் அறிவிப்பு...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகளை அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று அறிவித்தார்.

2015-ம் ஆண்டுக்கான விருதைப் பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக் கப்பட்டுள்ளது. அவை வருமாறு:

அம்பேத்கர் சுடர் எழுத்தாளர் அருந்ததி ராய், அயோத்திதாசர் ஆதவன் பேராசிரியர் க.நெடுஞ்செழியன், பெரியார் ஒளி கோவை கு.ராமகிருட்டிணன், காமராசர் கதிர் ஜி.கே.மூப்பனார் ( மறைவுக்குப் பின்னர் வழங்கும் முறையில்), காயிதேமில்லத் பிறை பேராசிரியர் ஜவாஹிருல்லா, செம்மொழி ஞாயிறு முனைவர் அவ்வை நடராசன்

விருது பெறுபவர்களுக்கு பாராட்டுப் பட்டயத்துடன், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். விருது வழங்கும் விழா சென்னையில் மே 2 -ம் தேதி நடைபெறவுள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்