திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் இருக்கிறது #நாச்சிக்குளம். இங்கு முஸ்லீம்களும், தேவர்களும், தலித்துகளும் நிறைந்து வாழ்கிறார்கள்.
இவ்வூருக்கு அருகில் உள்ள #சிறுபனையூர் கிராமத்தில் நேற்று (04.08.18) #சாகுல்_ஹமீது (வயது 70) என்பவருடைய மீன் பிடி குளத்தில் தண்ணீர் வற்றிப் போனது.
அன்றைய தினம் தண்ணீர் மேலும் குறைந்ததால் சேற்றில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது.
அதை பிரித்துப் பார்த்தப் போது அதில் #ஐம்பொன்_சிலை இருப்பது தெரிய வந்தது.
உடனே சாகுல் ஹமீது அவர்கள் வருவாய் ஆய்வாளருக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். பிறகு காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளரிடம் ஐம்பொன் சிலையை ஒப்படைத்தார்.
சிலை கடத்தல் பரபரப்புகள் உலா வரும் நிலையில், ஒரு முஸ்லீம் பெரியவர் சாமி சிலையை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அனைவரும் சாகுல்ஹமீது அவர்களை பாராட்டி வருவது அப்பகுதியின் சமய நல்லிணக்கத்தை எடுத்துக் கூறுவதாக அமைத்துள்ளது.
#மலரட்டும்_மனிதநேயம்..!
#பரவட்டும்_சமூக_நல்லிணக்கம்..!!