புதன், 10 ஜூலை, 2019
இணைவீர் சஹாரா தமிழ் வாட்ஸ்அப் குழுமத்தில்..
திங்கள், 24 செப்டம்பர், 2018
திடீர் உடல்நலக்குறைவு..! சிறையில் மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி..!!
வேலூர்.செப்.24., மே17- இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் ஐ.நா சபையில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகப் பேசினார். இதைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலையம் வந்த அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர், அவர் சென்னை கொண்டுவரப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இதன் பின்னர், தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். மேலும் 2017-ம் ஆண்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவர் மீது #தேச_விரோத நடவடிக்கை தடுப்பு பிரிவின் (#UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர், சென்னை எழும்பூர் நீதிமன்றம் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட உபா சட்டத்தை ரத்து செய்தது.
45 நாள்களாகத் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். பகலில்கூட சிறையில் இருக்கும் மற்றவர்களைச் சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தூசி படிந்த, பூச்சிகள் பெருமளவில் நுழையும் சுகாதாரமற்ற அறையில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் மே 17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் திருமுருகன் காந்திக்கு நேற்றுமுன்தினம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஏற்கெனவே தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், தனக்கு மருத்துவ பரிசோதனை தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளித்தும் போலீஸார் தொடர்ந்து அவரை மருத்துவமனை அழைத்துச் செல்லாமல் காலம் தாழ்த்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நேற்று திருமுருகன் காந்தி உடல் நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், இது தொடர்பாகத் திருமுருகன் காந்தியின் உறவினர்களுக்கோ அல்லது வழக்கறிஞருக்கோ தகவல் தரப்படவில்லை. அவரின் உடலில் சர்க்கரையில் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு ஆகியவை குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலும் இன்று சிறையில் அவரின் குடும்பத்தார் சந்திக்கச் சென்றபோதுதான் தெரியவந்துள்ளது.
திங்கள், 6 ஆகஸ்ட், 2018
மரக்கன்றுகளும்..! மத நல்லிணக்கமும்..!!
தோப்புத்துறை கோவில் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு நீர் விழிப்புணர்வு பிரச்சார அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தோப்புத்துறை ஜமாத் மன்றத் தலைவர் I.நவாஸ்தீன்,டாக்டர் அக்பர் அலி,p.சாகுல் ஹமீத்,ஹாசிப் புகாரி மற்றும் காதர் மெய்தீன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி துவக்கி வைத்தனர்.
விழாவிற்கு வந்த பொதுமக்கள் ஆர்வமாக மரக்கன்றுகளை வாங்கி சென்றனர்.சுமார் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இயற்கையை பாதுக்காக்கும் இந்த முயற்ச்சியை அனைவரும் பாராட்டினர்.மேலும் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் செயல் இது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
பொதுநலன் கருதி...
#நீர்_விழிப்புணர்வு_பிரச்சார_அமைப்பு
தோப்புத்துறை
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018
குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை..! அதிகாரிகளிடம் ஒப்படைத்த முஸ்லிம் பெரியவரின் மனித நேயம்..!!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் இருக்கிறது #நாச்சிக்குளம். இங்கு முஸ்லீம்களும், தேவர்களும், தலித்துகளும் நிறைந்து வாழ்கிறார்கள்.
இவ்வூருக்கு அருகில் உள்ள #சிறுபனையூர் கிராமத்தில் நேற்று (04.08.18) #சாகுல்_ஹமீது (வயது 70) என்பவருடைய மீன் பிடி குளத்தில் தண்ணீர் வற்றிப் போனது.
அன்றைய தினம் தண்ணீர் மேலும் குறைந்ததால் சேற்றில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது.
அதை பிரித்துப் பார்த்தப் போது அதில் #ஐம்பொன்_சிலை இருப்பது தெரிய வந்தது.
உடனே சாகுல் ஹமீது அவர்கள் வருவாய் ஆய்வாளருக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். பிறகு காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளரிடம் ஐம்பொன் சிலையை ஒப்படைத்தார்.
சிலை கடத்தல் பரபரப்புகள் உலா வரும் நிலையில், ஒரு முஸ்லீம் பெரியவர் சாமி சிலையை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அனைவரும் சாகுல்ஹமீது அவர்களை பாராட்டி வருவது அப்பகுதியின் சமய நல்லிணக்கத்தை எடுத்துக் கூறுவதாக அமைத்துள்ளது.
#மலரட்டும்_மனிதநேயம்..!
#பரவட்டும்_சமூக_நல்லிணக்கம்..!!
வியாழன், 9 பிப்ரவரி, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரலாம் : ஓய்வு நீதிபதி ராஜேஸ்வரன் அறிவிப்பு...
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக மக்கள் புகார் தரலாம் என, விசாரணை கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்துள்ளார். கலவரம், வன்முறை மற்றும் காவல்துறையினரின் அத்துமீறல் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்திய பின் அந்த அறிக்கயைானது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பின் அரசிடம் சமர்பிக்கப்படும் என்றார். இன்று சென்னை மெரினா மற்றும் அதனை சுற்றி வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியதளர்களிடம் பேசிய நீதிபதி ராஜேஸ்வரன் சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, அலங்காநல்லூர் பகுதிகளிலும் விசாரணை நடத்த உள்ளதாக குறிப்பிட்டார். வன்முறை மற்றும் காவல்துறை அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள விசாரணை கமிஷன் அலுவலகத்தில் புகார் தரலாம் என்றார். புகார் தருவது எப்போது என்று பத்திரிக்கையில் வெளியிடப்படும் என கூறினார். நடந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் வாக்குமூலம் அளிக்கலாம் என்றார்.
முன்னதாக ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் மாபெரும் தன்னெழுச்சி போராட்டம் நடந்தது. போராட்டத்தின் இறுதியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறி காவல்துறைியனர் நடத்திய தடியடியால் வன்முறை வெடித்தது. இதில் மெரினாவை சுற்றியுள்ள நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் பகுதிகள் காவல்துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதனையடுத்து இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை இன்று துவங்கியது. மெரினா கடற்கரை அருகேயுள்ள விவேகானந்தர் இல்லம் பகுதியில் விசாரணை நடத்தப்பட்டது. வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் நீதிபதி ராஜேஸ்வரன் நேரில் ஆய்வு நடத்தினார். மீன்சந்தை பகுதிகளில் மீனவர்களிடம் வன்முறை தொடர்பாகவும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன்! ஏ.ஆர்.ரகுமான்
அப்போது அங்கிருந்த தமிழர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய டொரண்டோ மேயர், கனடாவில் குடியேறும்படி ரஹ்மானுக்கு அன்பு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் பதிலளித்துள்ள ரஹ்மான், தான் தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வேறு நாட்டில் குடியேற விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை கெளரவிக்கும் விதமாக கனடா அரசு ஒரு தெருவுக்கு அல்லா ராகா ரஹ்மான் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வியாழன், 20 அக்டோபர், 2016
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேல் எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இந்த தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் காலியாக இருந்த திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 26ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதே தேதியில் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 4 தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சி சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்லில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் - எம்.ரெங்கசாமி, திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பு- ஓம்சக்தி சேகர் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிக்கு ஏற்கனவே அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமனம் : தமிழக அரசு அவசர சட்டம்
சென்னை: உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் நேற்று பிறப்பித்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து 28 நாட்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த மாதம் அப்போலோவுக்கு சென்று முதல்வரை பார்த்தார். இதன்பின், முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த அனைத்து துறைகளும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களுக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே தலைமை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 10.35 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தற்போதுள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசிதழில், கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-ஐ திருத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாததாலும், தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் அவசர சட்டம் பிறப்பிப்பது அவசியமாகிறது. இந்த அவசர சட்டம், தமிழ்நாடு பஞ்சாயத்துகள் 3வது திருத்த அவசர சட்டம் 2016 என்று அழைக்கப்படும். இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகள் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இந்த சட்டத் திருத்தம், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் (மூன்றாம் திருத்தம்) அவசர சட்டம் 2016 என்று அழைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து சட்டத்துறை செயலாளர் (பொறுப்பு) எஸ்.எஸ்.பூவலிங்கம், தமிழக அரசிதழில் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் கவுன்சிலர்கள் அல்லது வார்டு உறுப்பினர்களின் பதவிக்கு சாதாரணமாக ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கிடையே இந்த அறிவிப்பாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4ந் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை பிறப்பிக்க வேண்டும். டிசம்பர் 31ந் தேதிக்கு மிகாமல் கூடிய விரைவில் அந்தத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான பதவி காலம் விரைவில் முடிய இருப்பதாலும், 5 ஆண்டு கால பதவி காலத்தை மேலும் நீட்டிக்க முடியாது என்பதாலும், உள்ளாட்சிகளை நிர்வகிப்பதற்காக, தேர்தல் முடியும் வரை தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகளான நகராட்சி நிர்வாக கமிஷனர், பேரூராட்சிகள் இயக்குனர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் நடந்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் முடியும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ந் தேதி வரையிலோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தனி அதிகாரிகளை அரசு நியமிப்பதற்கு ஏற்ற வகையில் அதற்கான சட்டத்தை திருத்துவதென்று அரசு முடிவு செய்கிறது. அதுபோல, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல் முடியும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ந் தேதி வரையிலோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தனி அதிகாரிகளை அரசு நியமிப்பதற்கு ஏற்ற வகையில் அதற்கான சட்டத்தை திருத்துவதென்று அரசு முடிவு செய்கிறது. இந்த அவசர சட்டம், அரசின் முடிவை நடைமுறைப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம், அதிகாரிகளின் கைக்கு சென்றுள்ளது.
ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை: தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி
சர்வதேச வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 3 நாள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டு அவரவர் நாடுகளில் பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.
இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பின்பு, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை செய்து கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி எழுதிய கடிதம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நஜீம் ஜைதி கூறியதாவது:-
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதுடன் இதுபோல் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
அதே நேரம் மத்திய அரசும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்து வித உதவிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படைகளை ஒதுக்கித்தரவேண்டும். ஏனென்றால் இந்த தேர்தல்களுக்காக அதிக அளவில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டியது இருக்கும். அவற்றை வாங்குவதற்கு அதிக நிதியும் (ரூ.9 ஆயிரம் கோடி) தேவைப்படும். இதற்கு சம்மதம் தெரிவித்தால் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுமா? அல்லது தனித்தனி தேதிகளில் இருக்குமா? என்ற இன்னொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “மாணவர்களின் பொதுத்தேர்வு மற்றும் பண்டிகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதுபற்றி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசும்போது, “கட்டாயமாக வாக்களிப்பது பரவலாக சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது பற்றி முன்பு விவாதித்தோம். ஆனால் இந்த சிந்தனை நடைமுறையில் சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டார்.
புதன், 19 அக்டோபர், 2016
கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு 4 வாரத்தில் இழப்பீடு வழங்க உத்தரவு...
புதன், 29 ஜூலை, 2015
புதன், 10 ஜூன், 2015
உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?
1. இன்ஷூரன்ஸ் பாலிசி....யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள்.
அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்;
அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி) யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும்.
அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.
5.பான் கார்டு! யாரை அணுகுவது..?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
6.பங்குச் சந்தை ஆவணம்.....! யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை;
ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.
சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,
சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.
அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்? ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும்.
அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
10. பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்? ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள். வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும்.
20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
11. கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை :
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.
அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
Courtesy :விகடன்
சனி, 4 ஏப்ரல், 2015
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விருதுகள் அறிவிப்பு...
2015-ம் ஆண்டுக்கான விருதைப் பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக் கப்பட்டுள்ளது. அவை வருமாறு:
அம்பேத்கர் சுடர் எழுத்தாளர் அருந்ததி ராய், அயோத்திதாசர் ஆதவன் பேராசிரியர் க.நெடுஞ்செழியன், பெரியார் ஒளி கோவை கு.ராமகிருட்டிணன், காமராசர் கதிர் ஜி.கே.மூப்பனார் ( மறைவுக்குப் பின்னர் வழங்கும் முறையில்), காயிதேமில்லத் பிறை பேராசிரியர் ஜவாஹிருல்லா, செம்மொழி ஞாயிறு முனைவர் அவ்வை நடராசன்
விருது பெறுபவர்களுக்கு பாராட்டுப் பட்டயத்துடன், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். விருது வழங்கும் விழா சென்னையில் மே 2 -ம் தேதி நடைபெறவுள்ளது.
வியாழன், 26 பிப்ரவரி, 2015
ஒரே நாளில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 பேர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு...
இங்கு அரசு விடுமுறை தினம் தவிர திங்கள் முதல் வெள்ளிவரை புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 12.30 மணி அளவில் தாயும், மகனும் புகார் மனு கொடுப்பதற்காக வந்தனர்.
வந்தவர்கள் திடீரென கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள ஈவிகே சம்பத் சாலை நடுவே அமர்ந்து தர்ணா செய்தனர். இதனால், அங்கு போக்குவரத்து தடைபட்டது. இதை சற்றும் எதிர்பாராத போலீஸ் கமிஷனர் அலுவலக பாதுகாப்பு பிரிவு போலீசார் இருவரையும் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அவர்கள் கேட்காததால் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் தர்ணாவில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தது மதுரையை சேர்ந்த மகேஷ்வரி, அவரது மகன் இன்ஜினியரிங் மாணவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தனர்.
போலீசாரிடம் மகேஷ்வரி கண்ணீர் மல்க கூறியதாவது: ‘எனக்கு மதுரையில் ரூ5 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இதனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் அபகரித்து உள்ளார். என்னையும் மதுரைக்கு செல்ல விடாமல் சென்னை திருமங்கலத்திலேயே சிறை வைத்து இருந்தார். அவரது பிடியில் இருந்து தப்பி வந்துள்ளேன்.இது குறித்து 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருக்கிறேன்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. சம்பந்தப்பட்ட வக்கீல் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இல்லையேல் தற்கொலை செய்வதுதான் முடிவு என்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மைலாப்பூரை சேர்ந்த மைதிலி என்ற பெண் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் பெட்ரோலுடன் வந்தார். வந்தவர் பெட்ரோலை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து மைதிலி கூறுகையில், “எனது உறவினருக்கு போலீஸ் வேலை வாங்கி தருவதாக அண்ணா சாலை காவல் நிலையத்தில் பணி செய்யும் பெண் போலீஸ் ஒருவர் ரூ7 லட்சம் பெற்றார். உறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். மைதிலி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரளி விதையை அரைத்து குடித்து நேரடியாக கமிஷனர் அலுவலகம் வந்து தற்கொலைக்கு முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது. 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று நேற்று மாலை 4.10 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 38 பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த பஸ் மாலை 4.40 மணிக்கு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டில் வீராசாமிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ்சில் டீசலுடன் கலந்து ஏதோ எரியும் புகை வாசம் வந்தது. அந்த பகுதியில் அதிகமான அளவில் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை இருப்பதால், ஆலையில் இருந்து ஏதாவது துர்நாற்றம் வரலாம் என எண்ணி பயணிகள் மூக்கை பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.
ஆனால், கண்டக்டர் முருகேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டு டிரைவர் குப்புசாமியிடம் தெரிவித்து பஸ்சை நிறுத்த சொன்னார். உடனடியாக பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு, இருவரும் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது பஸ்சின் டீசல் டேங்க் அருகே உள்ள வயரில் இருந்து தீப்பொறி விழுந்து கரும்புகை வெளியேற தொடங்கியது.
38 பயணிகள் உயிர்தப்பினர்
உடனடியாக பஸ்சில் இருந்த 38 பயணிகள் கீழே இறங்க அறிவுறுத்தப்பட்டனர். பயணிகள் அலறி அடித்தபடி வேகமாக உடமைகளுடன் கீழே இறங்கினார்கள். பயணிகள் கீழே இறங்கி கொண்டிருக்கும் வேளையிலேயே பஸ், மளமளவென எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர், தீ எரிவது கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் பஸ் முழுமையாக எரிந்து எலும்புக்கூடு போல ஆனது.
முரண்பட்ட தகவல்
பஸ் தீப்பிடித்ததற்கு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் மறைத்து எடுத்து சென்ற யூ.பி.எஸ். பேட்டரிதான் காரணம் என்றும், அந்த சார்ஜபிள் பேட்டரி உராய்ந்ததால் தீப்பொறி ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணையை மல்லூர் போலீசார் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக மல்லூர் போலீசாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘பஸ்சின் டீசல் டேங்க் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்ற தகவலின் பேரில்தான் விசாரணை நடத்தி வருகிறோம். எரிந்து நாசமான பஸ்சில் பயணி விட்டு சென்ற யூ.பி.எஸ். பேட்டரி எதையும் நாங்கள் கைப்பற்றவில்லை’’ என்றனர்.
வியாழன், 29 ஜனவரி, 2015
சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ....
சென்னையில் இருந்து 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து புதுமண தம்பதிகளை அனுப்பியவர்கள் அதிர்ச்சி
சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 35 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. நெல்லூர் அருகே ஜாகலு என்ற இடத்தில் பேருந்தில் இருந்து புகை கிளம்பியதும், உடனடியாக பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில், பேருந்து முழுவதும் தீப்பற்றி நாசமானது.
இந்த பேருந்தில் புதுமண தம்பதிகள் தங்களது சூட்கேசில் கொண்டு சென்ற ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள நகைகள் எரிந்து நாசமானது. மேலும், மாணவர்களின் சிலரது சான்றிதழ்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் ஒருவர் மட்டும் காயம் அடைந்துள்ளார்.
புதன், 6 ஆகஸ்ட், 2014
ஆப் கி பார்..... அரசாங்கமா இல்லை ஆர்.எஸ்.எஸ் சாங்கமா?
.jpg)
மோடியின் அரசாங்கம் பதவியேற்ற இத்தனை நாட்களில் குறைந்த பட்சம் மக்கள் நலத் திட்டங்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட ஒரு திட்டத்தை வகுக்கும் அளவுக்கு வக்கில்லாமல் மோடி தர்பாரில் காற்றாடிக் கிடக்கிறது.
சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் அளவுக்கு மோடியை, ஆஞ்சநேயர் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்களும் பாஜக தலைவர்களும் வாயைத் திறந்தாலே முத்துக்களை உதிர்க்கும் மோடிகளும் கூட மூடிக்கொண்டு கிடப்பது காலத்தின் கோலம் மட்டுமல்ல அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?
தேர்தலுக்கு முதல் நாள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதே தெரிந்து விட்டது மோடியின் அரசாங்கம் எப்படி இருக்கப் போகிறது என்பது. இத்தனை நாட்களில் மோடியின் குஜராத் மாடல் ஃபேக் அரசாங்கம் கிழித்ததெல்லாம் காங்கிரசின் கொள்கைகளை இவர்கள் காப்பி அடித்தது மட்டுமல்லாமல் அதை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், ஈழ விவகாரம் முதல் கட்சத் தீவு வரை, சுவிஸ் வங்கியின் கருப்புப் பணம் முதல் ரயில்வே கட்டணம் வரை, பெட்ரோல் முதல் மரபணு மாற்றப் பயிர் வரை என்று ஏகபோகமாய் விளையாடிக் கொண்டே ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.
அன்னிய முதலீட்டில் அவர்கள் படிப்படியாக உள்ளே விட்டார்கள் என்றால் பாஜக ஒட்டு மொத்தமாக கதவைத் திறந்து விட்டிருக்கிறது. ராணுவம் முதல் இன்ஸூரன்ஸ் வரை, ரயில்வே தொடங்கி, கக்கூஸ் கழுவுவது வரை, ரீடெய்ல் மார்கெட்டிங்கில் 100 சதவீதத்துக்கு பொங்கிய பாஜக இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறது?
இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை அமீரக திர்ஹம் 1= ரூ14+ ல் இருந்தது இப்போது அது 16+க்கு எகிறி இருக்கிறது என்ன ஒரு முன்னேற்றம்?
கம்யூனிஸ்டுகள் பேசுவதற்கும் வழியில்லை காங்கிரஸ் பேசவே பேசாது.
அரசாங்கம் நஷ்டப் பட்டால் மக்களைத்தானே பாதிக்கும் என்ற பாஜக சொல்வதில் ஒரு கார்ப்பொரேட் தனம் இருக்கிறது. கார்பொரேட் முதலாளிகளின் அரசாங்கமாகத்தானே இது வரை மோடியின் அரசு இருக்கிறது?, அதானிகளும் அம்பானிகளும் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மோடி காட்டிக் கொண்டிருப்பது மட்டும் தான் உண்மை.. இது கார்பொரேட்களின் அரசாங்கம் என்பதை வாரா வாரம் உயர்த்தப் படும் பெட்ரோல் டீசல் விலையேற்றம் காட்ட வில்லையா?
வெளியுறவுக் கொள்கைகளில் அகன்ற 56 " மார்பு கொண்டவரின் கொள்கைகளைத்தான் பார்த்தோமே. இலங்கை விவகாரத்தில் மோடி வந்தால் எல்லாம் சுபிட்சம் ஆகும் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை முட்டாளாக்கி பாஜகவின் வாக்கு வங்கி கூடிப் போனதாக பேசிய தரகர் தமிழருவி மணியன் 45 ஆண்டுகால (?) அரசியல் வாழ்வில் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் கூட தெரியாத அளவுக்கு மதி மயங்கிப் போனது உச்ச கட்ட காமெடி.
மக்களாட்சி என்பது அதிகாரம் ஒருவரிடம் குவிந்து போகாமல் பரவலாக்கப் பட வேண்டுமே தவிர இப்படி ஒட்டு மொத்தமாக எல்லா மட்டத்திலும் ஒரு கட்சியே ஆட்சியில் இருப்பதனால் ஏற்படப் போகும் விளைவுகளை இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
அதற்கான அறிகுறிகள் தான் ஹிந்தியை அலுவல் மொழியாக்க முயற்சி சமஸ்கிருத வாரம் என்று ஆர் எஸ் எஸ் ன் அகண்ட பாரதம் என்ற கொள்கையை சத்தமே இல்லாமல் நிறைவேற்ற தயார் ஆகிறது மோடியின் அரசு. அதை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் படிப்படியாகச் செய்யும் படேலுக்கு சிலை வைக்க பல நூறு கோடிகளை ஒதுக்கும் அரசாங்கம் கழிவரை வசதிகளுக்கும் கல்விக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிகச் சொற்பம்.
காங்கிரஸ், அதிமுக. இரண்டுமே மக்களுக்காக இனி நாடாளு மன்றங்களில் பேசப் போவது இல்லை. அதிமுகவுக்கு நாடாளு மன்றத்தில் நரேந்திர மோடியை காய்ச்சி எடுப்பதை விட அம்மா புராணம் பாடினாலே போதும். அதைத்தான் அவர்கள் செய்யப் போகிறார்கள்
காங்கிரசுக்கு உள்ளுக்குள் மகிழ்வாகக் கூட இருக்கும்! அது பாஜக செய்யப் போகும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் காத்திருந்து அடுத்த தேர்தலின் போது கூடாரம் கலகலக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறது அதற்குள் இருக்கிற குட்டி குட்டி மாநில கட்சிகளை மறுபடியும் ஓரணியில் திரட்ட வேண்டிய அவசியமும் தேவையும் அதற்கு இருப்பதால் மக்கள் பிரச்சினைகளை பேசும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை.
மக்கள் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான் ஓட்டுப் போடும் முன்பாவது ஒரு நிடம் சிந்தித்து பார்க்க வேண்டும் இல்லையென்றால் இப்போதும் இன்னும் வரப் போகும் 4 ஆண்டுகளிலும் அனுபவிக்கப் போவதை அனுபவிக்க தயாராய் இருக்க வேண்டும்.
#ஆப் கி பார்.......ஆர்.எஸ்.எஸ் சர்கார்
Source- Kilumathur Blogspot
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014
இன படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து த.மு.எ.க சங்கம் சார்பாக ஓவிய நிகழ்ச்சி...

இன படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து தாம்பரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக ஓவியம் நிகழ்ச்சியில் பொது மக்கள் தங்களுடய கோபத்தை எழுத்து மூலமாக வெளிப்படுத்தினார்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
#MohamedHaris
எபோலா நோய்: சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளை சோதனையிட முடிவு
சென்னை, கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் மளமளவென்று அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இதுவரை 670 பேரைப் பலி வாங்கியுள்ள இந்த நோய்த் தொற்று கண்ட ஒரு பயணி நைஜீரியாவிற்கு பயணம் செய்தபோது அங்கு இறந்ததால் அங்கும் இதன் பாதிப்பு தொடரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நோய் குணமாவதற்கான சிகிச்சைமுறைகள் எதுவும் இல்லை என்ற தகவலுடன் இந்த நோய்த்தாக்கத்தின் இறப்புவாய்ப்பு 90 சதவிகிதம் என்பதுவும் இதன் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.
எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்திற்கு எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்திறங்கும் பயணிகளுக்கு இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை விமான நிலைய சுகாதார அமைப்பும், அரசு நிர்வாகமும் முடிவு செய்துள்ளன.
எபோலா நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கோ மற்ற இந்திய நகரங்களுக்கோ நேரடியான விமான சேவைகள் இல்லை.ஆனால் அந்த நாடுகளில் இருந்து அரபு நாடுகளுக்கு வரும் பயணிகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு சென்னையிலிருந்து செல்லும் இணைப்பு விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதுபோல் அதிக அளவிலான நைஜீரியர்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து சில பயணிகள் சென்னை வருகின்றனர் என்று குறிப்பிட்ட விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவ்வாறு வரும் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Source - Maalaimalar
#MohamedHaris
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து வி.சி கட்சி ஆர்ப்பாட்டம்...
இன்றைய சித்திரம்

















