சஹாரா தமிழ்: MJK

ads

MJK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MJK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 அக்டோபர், 2016

மஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் மறியல்ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடுதலை…

image
image
image
image
image
image
image
image

img-20161019-wa0008.jpg
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் விவசாய சங்ககங்களின் சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டத்தை ஆதரித்து இன்று தமிழகம் முழுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது..

#mjk_rail_roko_cavery_issue

தகவல் : மஜக மாநில ஊடகபிரிவு

திங்கள், 29 பிப்ரவரி, 2016

மார்ச்.26 மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அரசியல் மாநாடு..!

பிப்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அறிமுகப் பொதுக்கூட்டம் அய்யம்பேட்டையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது...

இதில் கட்சியின் கொடியை பொதுச் செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி அவர்களும், பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூண்_ரஷீத் அவர்களும் அறிமுகப்படுத்தி உரையாற்றினர்...

மேடையின் மூன்று புறமும் திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் ஆராவரத்திற்கிடையே கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு மார்ச் 26 அன்று சென்னையில் நடைபெறும் என பொதுச் செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி அறிவித்தார்.

புதிய பாதை - புதிய பயணம் எழுச்சியோடு தொடங்கியிருக்கிறது. இப்பொதுக்கூட்டம் பெரும் உற்சாக அலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்வை உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டுகளித்திருக்கிறார்கள்..

#மஜக_ஊடகப்_பிரிவு

தமீமுன் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) துவக்கம்...

பிப்.28., மனிதநேய மக்கள் கட்சியின் கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, கட்சி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு எங்கள் தரப்பில் தொடக்கப்பட்டது.

அந்த வழக்கு  கடந்த பிப்ரவரி 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து நேற்று (28.02.2016) கும்பகோணத்தில் எங்கள் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் 'புதிய பாதை- புதிய பயணம்' என்ற முழக்கத்தோடு  #மனிதநேய_ஜனநாயக_கட்சி என்ற பெயரில். அரசியல் கட்சியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று இரவு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் நானும், கட்சியின் பொருளாளராக ஹாரூன் ரஷீதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். புதிய  தலைமை நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்

வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கோரிக்கைகள் மதிக்கும் வலிமையான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

நேர்மையான அரசியலையும், கண்ணியமான பொதுவாழ்வையும் செயல்படுத்த களம் புகும் எங்களுக்கு அனைவரும் அதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறையருளால் எமது புதிய பயணம் புதிய பாதையில் தொடங்குகின்றது

இவண்

M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28_02_2016

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்