உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது மமக! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 12 ஏப்ரல், 2012

உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது மமக!


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTnSCJmfYikdRGMETnRPbB4BJLPL1u1bqOnhTIoM5V2XlOiC53yYd2yiJWJ 
ஐந்தாயிரம் இடங்களில் மமக கொடிக்கம்பங்கள்!

மாணவர்களை அணிதிரட்ட "மாணவர் இந்தியா" உதயம்!

மனிதநேய மக்கள் கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள நிலையில், கட்சியை மேலும் வலுப்படுத்திடவும், பரவலான ஆதரவை உருவாக்கிடவும் புதிய செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமுதாயத்தையும் தாண்டி பிற சமூக மக்களையும் கவரும் வகையில் ஏற்கனவே மாநிலப் பொறுப்புகளில் மூன்று பொறுப்புகள் பிற்படுத்தப்பட்டவருக்கு, தலித்துக்கு, கிறித்தவருக்கு என அறிவிக்கப்பட்டு தகுதியான வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் கட்சியின் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் செயல்திட்டங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழுவில் வகுக்கப்பட்டி ருக்கிறது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஐந்தாயிரம் இடங்களில் மமக நிர்வாகிகளை முன்னிறுத்தி மமகவின் கொடியேற்று நிகழ்ச்சிகளை நடத்துவது என்றும், அதையொட்டி கட்சிக்கு தீவிரமாக உறுப்பினர்களை சேர்ப்பது என்றும், கொடியேற்று நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட சுவர் விளம்பரங்களை வரைவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


இதன் தொடர்ச்சியாக மமக சார்பில் மாவட்ட மாநாடுகளும் நடைபெற உள்ளன. அதுபோல, காலத்தின் தேவைகளாக மமகவின் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்படுகின்றன. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள உறுப்பினர் படிவத்துக்கு மாற்றாக, எளிமைப்படுத்தப்பட்ட புதிய உறுப்பினர் படிவம் தயாரிக்கப்படுகிறது.

இளைய தலைமுறையிடம் கட்சியின் களத்தை விரிவுபடுத்தும் வகையில் இளைஞர் அணியை வலுப்படுத்துவது என்றும், மாணவர்களை அணிதிரட்டும் வகையில் ‘மாணவர் இந்தியா’ என்ற துணை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மமகவின் மாணவர் அணியாக செயலாற்றும்.

முற்போக்கு சிந்தனை, ஒழுக்கம், பண்பாடு, சமூக அக்கறை, தேசநலன், சர்வதேச அரசியல் அறிவு கொண்ட மாணவர்களை உருவாக்கும் அறிவுசார் படையாக மாணவர் இந்தியா கட்டியமைக்கப்படும். இதில் ஒத்தக்கருத்துடைய அனைத்து சமூக மாணவர்களும் இணைக்கப்படுவார்கள். இந்த அமைப்பு கல்வி விழிப்புணர்வு, சமூகத் தீமைகளுக்கு எதிரானப் பிரச்சாரம் மற்றும் அரசியல் போராட்டங்களை பிரதானப் பணிக ளாகக் கொண்டிருக்கும். இவை தவிர பேச்சாளர் பயிற்சி முகாம்கள், அரசியல் பயிற்சி முகாம்கள் என மமகவின் பணிகள் தொடர்ச்சியாக வலிமைப்படுத்தப்பட உள்ளன.

கொந்தளிப்பான கடல்தான் மிகச்சிறந்த மாலுமிகளை உருவாக்கும். நெருக்கடிகளும், சூழ்நிலைகளுமே சிறந்த களப்பணியாளர்களை வென்றெடுக்கும்!



www.Tmmk.in

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்