மோடி அரசின்மீது முஸ்லிம் சட்டவாரியம் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு! ஆர்.எஸ்.எஸின் கட்டுப்பாட்டில் ஆட்சி செயல்படுகிறது! ~ சஹாரா தமிழ்

ads

சனி, 27 ஜூன், 2015

மோடி அரசின்மீது முஸ்லிம் சட்டவாரியம் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு! ஆர்.எஸ்.எஸின் கட்டுப்பாட்டில் ஆட்சி செயல்படுகிறது!



புதுடில்லி,  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அவர்களின் திட் டங்களை நிறைவேற்றி இந்தியாவின் மதச்சார் பின்மைக்கு பங்கம் விளைவிக்கிறார் மோடி என்று அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் இஸ்லா மியர்களின் உரிமை களுக்கு என்று உருவாக் கப்பட்டுள்ள முஸ்லீம் சட்டவாரியம் முதல்முறை யாக மோடி அரசுக்கு நேரடி எச்சரிக்கை விடுத் துள்ளது. இது குறித்து முஸ்லீம் சட்டவாரியம் புதனன்று வெளியிட் டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள்

அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் கடந்த ஆண்டு மோடி தலைமை யில் ஆட்சிப்பொறுப் பேற்ற என்.டி.ஏ அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை கடுமையாகக் கண்டிக்கிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற தில் இருந்தே சிறு பான்மை மக்களுக்கு எதி ரான போக்கை கடைப் பிடித்து வந்தது.

இருப் பினும் மோடியின் பேச் சுமீது நம்பிக்கைவைத்து நாங்கள் அமைதியாக இருந்தோம். மோடி வாய் பேச்சில் மட்டும் சிறு பான்மை நலன்பற்றி பேசுகிறார். ஆனால், அவ ருக்குக்கீழ் பதவியில் உள்ள அமைச்சர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் பாஜக முதல்வர்கள்கூட சிறு பான்மையினருக்கு எதி ரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அனைவரையும் மதவழி பாடு செய்ய வைப்பது (சூரிய நமஸ்காரம்) மத ஸ்லோகங்களைச் சொல்ல வைப்பது, மற்றும் மத அடையாளங்களை கட் டாயமாக அணிய வைப் பது போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்களை மோடி செயல்படுத்துவ தில் மிகத் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் தொடர்ந்து நடைபெறும் சிறுபான்மையினருக்கு எதிரான விரோதப் போக்கு நாடு முழுவது முள்ள சிறுபான்மையினத் தலைவர்களைக் கவலைக் குள்ளாக்கியுள்ளது.

புகார்கள் குவிகின்றன

கடந்த சில மாதங் களாகவே முஸ்லீம் மதத் தலைவர்கள், முஸ்லீம் நல அமைப்பின் உறுப்பினர் கள் மற்றும் அரசு சாரா முஸ்லீம் சேவை நிறுவ னத்தவர்கள் என பலர் நாடு முழுவதிலுமிருந்து எங்களிடம் புகாரளித்து வருகின்றனர். மேலும் வட மாநிலங்களில் சிறுபான் மையினரின் சொத்துக்கள் மறைமுகமாக சூறையா டப்பட்டு வருகின்றன.

அவர்களின் தொழில் நிறுவனங்கள் செயல்படா மல் அழிக்கப்பட பல் வேறு முறையில் தொந் தரவு செய்து வருகிறார் கள் பாஜக ஆளும் மாநி லங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு ஆளும் அதிகார வர்க்கமே நேரடியாக இறங்கி முஸ்லீம்களுக்குத் தொல்லைகள் கொடுத்து வருகின்றன.

யோகா நிகழ்ச்சியின் போது அவர்கள் கொடுத்த உறுதி மொழியை மீறி ஓம் என்ற மந்திரத்தையும் சூரிய நமஸ்காரத்தையும் செய்யச் சொல்லி வற்புறுத் தினார்கள்.  இந்த அரசு மத ரீதியாக நேரிடையா கவே செயல்பட ஆரம் பித்துவிட்டது.  இது அர சமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும்.

மோடி தலைமையில் உள்ள அரசு, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத் தவும், அதற்காக மக்களி டையே சிறுபான்மை யினர்மீது வெறுப்பை உண்டாக்கவுமான செயல் பாடுகளை வெளிப்படை யாகவே செய்ய தொடங்கி விட்டது. இது குறித்து மவுலானா வலி ரஹ் மானி விரிவாக எங் களுக்கு ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

அடாலி கிராமத்தில் என்ன நடந்தது!

ஊடகங்களை விலைக்கு வாங்கிக்கொண்ட இந்த அரசு, முஸ்லீம்கள் மீது வட இந்தியா முழுமையும் நடக்கும் மத மோதல் களை வெளியில் வராமல் மூடி மறைத்து விடுகிறது, இதற்கு உதாரணமாக அரியானா மாநிலம், அடாலி கிராமத்தில் நடந்த மோதலைக் கூற லாம். சுமார் 3000 முஸ் லீம்கள் தாக்கப்பட்டு சொந்த கிராமத்தை விட்டு விரட்டப்பட்டும், இரண்டு வாரத்திற்குப் பிறகு சாதாரண நிகழ்ச்சி போல் பத்திரிகைகள் எழுதி இருந்தன. இன்று வரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பவில்லை.

அதை விட அரசு அவர்களுக்கு பாதுகாப்பிற்கான எந்த ஒரு உத்தரவாதமும் செய்யவில்லை.  முக்கியமாக அடாலி மதக்கலவரம் திட்டமிட்ட மதக்கலவரமாகும், இதற்கு அரசு முழுமையாக துணை போயுள்ளது. காவல்நிலை யத்தில் அடைக்கலம் பெற்ற முஸ்லீம் பெண் கள் இரவில் துன்புறுத்தப் பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும் என்று கூறினார்.

உலகம் முழுவதுமறிந்த காந்தியாரின் பிறந்த நாளை, சுவட்ச பாரத் என்று அறிவித்து விட்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் கே.பி ஹெட் கேவார் நினைவு நாளை யோகா தினமாக அறி வித்தது திட்டமிட்ட செயலாகும். மதச்சார் பின் மைக்கு எதிராக செயல் பட்டு வரும் மோடி அரசை வழிநடத்துவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் துணை அமைப்பு களும்தான்.

அரசின் செயல்பாடுகள் குறித்து முஸ்லீம்களும் சிறு பான்மை மக்களும் விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும். சிறுபான்மை விரோதப் போக்கிற்கு எதிராக விரைவில் அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் இந்தியா முழு வதுமுள்ள சிறுபான்மை அமைப்புகளுடன் இணைந்து அடுத்த நட வடிக்கை குறித்து திட்ட மிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்