சஹாரா தமிழ்: அறிக்கைகள்

ads

அறிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 மார்ச், 2013

கல்பாக்கத்தில் ஜனநாயக வழியில் போராடிய தமுமுக, மதிமுக தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் : எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRxm2qADHa11OMP668ipPha2L7gxQASw-0_WBvddp3T40F8zxOOLw 

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

* கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதிக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

* கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

* ஏற்கனவே இங்கு இயங்கும் அணுஉலைகள் தவிர புதிய அணுஉலைகள் அமைக்கக் கூடாது, கதிர்வீச்சு தன்மையை அறியவும், கதிர்வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் அனைத்து வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை கல்பாக்கம் அருகில் அமைக்க வேண்டும்.

* நாட்டில் இயங்கும் எந்த அணுஉலைகளின் கழிவுகளையும் கடல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டக்கூடாது.

* அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சுற்றுப்புற கிராம மக்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் இடம் ஒதுக்க வேண்டும்


- ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கத்தில் அறவழியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அனுமதி தரப்படவில்லை. இருப்பினும் போராட்டக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்து, 15 நாள் சிறைக் காவலில் அடைத்துள்ளனர். அறவழியில் போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறை கைது செய்ததை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சமீபத்தில் சட்டப்பேரவையில், கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் அவர்கள், மக்களுக்காகவே திட்டம், திட்டத்திற்காக மக்கள் அல்ல என்று மிகத்தெளிவாகக் குறிப்பிட்டார். இதே அடிப்படையில் தான் கல்பாக்கம் பகுதி மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடி வருகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்பாக்கம் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா

புதன், 6 மார்ச், 2013

வெனிசுலா அதிபர் சாவேஸ் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/09/MMK.jpg

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் செய்தி:

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் இன்று காலை, புற்றுநோயின் கோரத்தால் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு அரணாகவும் திகழ்ந்த சாவேஸ் அவர்களின் மரணம் ஒடுக்கப்பட்ட உலக மக்களுக்கு பேரிழப்பாகும்.

சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய ஒருசில தலைவர்களில் அவர் முதன்மையானவர். இந்தியா போன்ற நாடுகளுடன் சிறப்பான உறவைப் பராமரித்தவர்.
உலகம் முழுக்க கம்யூனிஸ்ட் நாடுகள் பலவீனம் அடைந்திருக்கும் நிலையில் வெனிசுலாவை வலிமைமிக்க நாடாக மாற்றிக் காட்டியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.

குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், மறக்க முடியாத உலகத் தலைவர்களின் வரலாற்றில் அவர் இடம்பெறுவது உறுதியாகும். அவரது மறைவால் வாடும் இடதுசாரி தோழர்களுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)

வியாழன், 21 பிப்ரவரி, 2013

அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: மத்திய அரசின் முடிவு பாராட்டுக்குரியது‏.

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTMg8mitRUJmIhYFh-Q8EhYm5C_pemX50vnvxNBQLJsRfOMWuDl
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை, உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசின் முடிவை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

இம்முடிவு தமிழக அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு கிடைத்த  மகத்தான வெற்றியாகும். மத்திய அரசின் நடவடிக்கை காவிரிப் பாசன விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கர்நாடக அரசு இம்முடிவை அமல்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்
எம். தமிமுன் அன்சாரி

சனி, 6 ஆகஸ்ட், 2011

தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSH7RHb1JpIbrmSiAH2S8U2x2o6N78M5vs-PgtKonli75GTmEObpQ&t=1
மாதிரிக் கேள்விகள் (உங்களது விருப்பத்திற்கேற்றாற்போல, தேவைப்படும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்)

1. எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தேதிவாரியாகக் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். உதாரணமாக, எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் எப்போது, எந்த அதிகாரியிடம் போய்...ச் சேர்ந்தது? அந்த அதிகாரியிடம் எவ்வளவு காலம் இருந்தது? இந்த காலகட்டத்தில் அவர் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்?.

2. எனது விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் என்ன? அவர்களது பதவிகளின் பெயர்கள் என்ன? ஏதாவதொரு அதிகாரி நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறாரா?

3. தங்களது பணியைச் செய்யாமல் பொதுமக்களைத் தொந்திரவுற்கு உள்ளாக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடிவடிக்கை எடுக்க முடியும்? இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?


4. இப்போதைய நிலையில் எனது வேலை எப்போது முடியும்?

5. என்னுடைய விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் உங்களால் பெற்றுக் கொண்ட பின்னர், உங்களிடம் விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு புகார்/ ஆகியவற்றைக் கொடுத்த அனைத்து நபர்களின் பட்டியலையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இந்தப் பட்டியலில் கீழ்க்கண்ட தகவல்கள் இருக்கவேண்டும்.

*விண்ணப்பதாரரின்/வரிசெலுத்துபவ​ரின்/மனுதாரரின்/பாதிக்கப்பட்டவ​ரின் பெயர் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதின் எண்.

* விண்ணப்பம்/கணக்கு தகவல்அறிக்கை/மனு/புகார்-ன் தேதி.

* அவருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்ட தேதி.

6. மேற்படி விண்ணப்பங்கள்/கணக்குத்தகவல் அறிக்கைகள்/மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் அவற்றுக்கான வழங்கப்பட்ட ரசீதின் (பெறுகை ஒப்புதல் சீட்டு) எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள் அல்லது அச்சுப் பிரதிகளை தயவு செய்து வழங்கவும்.

7. எனது மனுவை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள்/கணக்குத் தகவல் அறிக்கைகள்/ மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் எதிலேனும் வரிசைக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதையும், அதற்கான காரணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

8. இவ்வாறு நடந்திருந்தால் இது குறித்து எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைக்கான விசாரனை எப்போது நடைபெறத் தொடங்கும்?
 
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காவல்துறை பிரிவுகளுக்கு தகவல் அளிக்கும் கட்டுப்பாட்டில் இருந்து விதிவிலக்கு அளித்துள்ளது.
 
1.சிறப்பு பிரிவு - குற்றப்புலனாய்வு
2.க்யூ பிரான்ச் - குற்றப்புலனாய்வு
3.சிறப்பு பிரிவு
4.பாதுகாப்பு பிரிவு
5.முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (கோர் செல் சி ஐ டி)
6.மாவட்ட சிறப்பு பிரிவு
7.போலீஸ் கமிஷனர் ஆணையக உளவுப் பிரிவு
8.சிறப்பு உளவுப் பிரிவு
9.கமிஷனர் ஆணையகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு பிரிவு
10.நக்சலைட் சிறப்பு பிரிவு
11.குற்றப் பிரிவு சி ஐ டி.
12.விஷேசப் புலனாய்வு பிரிவு
13.திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு
14.போதைப் பொருள் தடுப்பு உளவுப் பிரிவு
15.கொள்ளை தடுப்பு பிரிவு
16.பொருளாதார குற்றப் பிரிவு
17.சிலை திருட்டு தடுப்பு பிரிவு
18.வணிகக் குற்றப் புலனாய்வு பிரிவு
19.சிவில் சப்ளை சி ஐ டி
20.சைபர் க்ரைம் செல்
21.மாவட்ட குற்றப் பிரிவு மற்றும் நகர குற்றப் பிரிவு
22.சிறப்பு அதிரடிப்படை
23.தமிழ்நாடு கமாண்டோ படை
24.தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி
25.கடலோரப் பாதுகாப்பு படை
26.போலீஸ் ரேடியோ பிரிவு

செவ்வாய், 5 ஜூலை, 2011

UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு.

http://www.gowealthy.com/gowealthy/wcms/en/home/news/editorial/visit-visa.jpg

UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு.

இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில்
வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) -
SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய
(Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY / கல்லிவல்லி) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம்.

மேலதிக விபரங்களுக்கு துபாயிலுள்ள இந்திய தூதரக தொடர்பு எண்கள் 04-3971222 மற்றும் 050-7347676 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சனி, 3 ஜூலை, 2010

ஜீலை 5 முழு அடைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

Poster-Sample

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் ஜீலை 5 அன்று நடத்தும் முழு அடைப்பிற்கு முழுமையான ஆதரவை அளிப்பதென இன்று நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்துள்ள எரிபொருட்களின் விலை ஏற்றம் ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக வஞ்சிக்கும் கொடும் நடவடிக்கை ஆகும். ஓரிரு இந்திய பெருமுதலாளிகளுக்கும், சில பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவாக இந்த விலை ஏற்றம் அமைந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு அவசியமான ஒன்று என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

இந்த முழு அடைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்குமாறு அனைவரையும் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

ஞாயிறு, 21 மார்ச், 2010

தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கின்றது!


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றறக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தமிழக நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்த வரவு செலவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. கரும்பு மற்றும் நெல் கொள்முதல் விலையை உயர்த்தியது, சொட்டு நீர் பாசன திட்டத்தை விரிவுப்படுத்தியது, இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பது போன்ற சில வரவேற்க்கத் தக்க அம்சங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் இருந்த போதினும் கடுமையான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உருப்படியான எவ்வித நடவடிக்கையும் இந்த வரவு செலவு திட்டத்தில் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கின்றது.

செம்மொழி மாநாட்டிற்காக கோடானக் கோடி ரூபாய் இந்த வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போதினும், தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நிதி உதவி பெறும் தமிழ் மற்றும் சிறுபான்மை மொழி வழி பள்ளிக்கூடங்களில் சுயநிதி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அரசு மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற நீண்டக் கால கோரிக்கையை திமுக அரசு இந்த வரவு செலவு திட்டத்திலும் புறக்கணித்திருப்பது வேதனை அளிக்கின்றது. இதே போல் சிறுபான்மை மக்களின் நலனுக்காக புதிதாக எந்தவொரு நலத்திட்டமும் இந்த வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்படாததும் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

மொத்தத்தில் இந்த வரவு செலவு அறிக்கை சுமையாக இல்லாவிட்டாலும் சுகம் தராத வகையில் அமைந்துள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்