வாக்காளர்களுக்கு வணக்கம் சொல்லாத மமக வேட்ப்பாளர் ஹைதர் அலி ! ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 25 மார்ச், 2014

வாக்காளர்களுக்கு வணக்கம் சொல்லாத மமக வேட்ப்பாளர் ஹைதர் அலி !



தமிழக அரசியல் வாழ்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய மனிதநேய மக்கள் கட்சி வாக்காளர்களுக்கு வணக்கம் சொல்லாமல் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும், ஆம்பூர் தொகுதி வேட்பாளர் அஸ்லம் பாட்சா அவர்களும் வாக்காளர்களுக்கு வணக்கம் சொல்லாமல் கையை மட்டும் சைகை செய்து பிரம்மாண்ட வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்கள்.

அதேபோல தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் மயிலாடுதுறை தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் S. ஹைதர் அலி அவர்களும் வணக்கம் சொல்லாமல் கையை மட்டும் சைகை செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

காலில் விழுந்தும், கரத்தை பிடித்து கெஞ்சியும் வாக்குகள் சேகரித்து வெற்றிபெறும் வேட்பாளர்களை பார்த்து பழகிய மக்களுக்கு மயிலாடுதுறை தொகுதியில்இது வித்யாசமாக இருக்ககூடும்.

ஆனால், இந்த வேட்பாளர் மக்களிடம் ஓட்டுகேட்க வரும்போது தன்நெஞ்சில் கைவைத்து என் மனசாட்சி உறுதியின் கூற்றில் உங்களிடம் ,உங்களுக்காக உழைக்க பாடுபடுவேன் என்று முகமன் சைகையில் ஸலாம் கூறி அல்லவா வாக்கு கேட்கிறார்....

இது போற்றத்தக்கதல்லவா ..?

வெறும் ஏமாற்று கலாச்சாரத்தில் மக்களை மூழ்க வைத்து போலியாக நாடகமாடி தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்கி கொண்டு வெற்றி பெற்றவுடன் மாய பிறவியாக மாறி மறைந்துபோகும் மனிதர்கள் மத்தியில்...

இஸ்லாமிய கோட்பாட்டின்படி இயங்கி தன்நிலை மாறா மக்கள் பிரதிநிதியாக ஹைதர் அலி விளங்குவார், தொகுதி மக்களின் தீரா பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாக எதிரொலித்து செயல்படுவார்.

வெறும் கூழை கும்பிடுகளால், காலில் விழுந்து ஓட்டுகேட்பவர்களை ஒதுக்கிவிட்டு, உண்மையாக உள்ளார்ந்த மனசாட்சியுடன் தொகுதி நலன்களுக்காக உழைக்க தயாராக இருப்பவருக்கே வாக்களிக்க வேண்டும்.

- sangai riduvan

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்