200 ரூபாய்க்கு வாக்குகளை விற்கும் அரசியல் அவலத்தில், ஜனநாயகம் புதைகுழிக்குள் சரிந்திருக்கிறது - எம். தமிமுன் அன்சாரி ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 18 மே, 2014

200 ரூபாய்க்கு வாக்குகளை விற்கும் அரசியல் அவலத்தில், ஜனநாயகம் புதைகுழிக்குள் சரிந்திருக்கிறது - எம். தமிமுன் அன்சாரி


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் பணநாயகம் வென்றிருக்கிறது. 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்கும் அரசியல் அவலத்தில், ஜனநாயகம் புதைகுழிக்குள் சரிந்திருக்கிறது.

சூறைக் காற்றில் சந்தன மரங்களும் சாய்வதைப் போல, மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. எமது தியாகமிக்க பயணத்தில் எவ்வளவோ சோதனைகளை எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றிலிருந்து வெகு விரைவிலேயே மீண்டிருக்கிறோம்.

இந்த தோல்வி எங்களை காயப்படுத்தி இருக்கலாம். ஆனால், களத்திலிருந்து அகற்றி விடாது. காரணம், நாங்கள் லட்சியத்திற்காகவும், கொள்கைகளுக்காகவும் களமாடுபவர்கள். எங்களை மெழுகுவர்த்திகளாக உருக்கிக் கொண்டு பணியாற்றுவதில் எப்போதுமே திருப்தியடைபவர்களாக நாங்கள் இருக்கிறோம். எங்கள் உயரிய லட்சியங்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தோல்வி குறித்து முழுமையாக ஆராய்வோம்.

மயிலாடுதுறையில் எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்விகள் சகஜமானவை என்ற அடிப்படையில் இதனை ஏற்றுக் கொள்கிறோம்.

- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்